Pages

Sunday, December 19, 2010

அநங்கம் இதழுக்காக செழியனுடன் ஒரு சந்திப்பு- சிங்கப்பூரில்

-எந்த வணிக சமரசங்களும் இல்லாமல் கதையை நேர்மையாகச் சொல்வதுதான் நல்ல சினிமா- செழியன்
(செழியனின் சினிமா பார்வை மூன்றாம்தர பார்வையாளன்/வாசகனையும் சினிமா பற்றிய நுகர்வெளிக்குள் கொண்டு வந்துவிடும் என்றே சொல்லலாம். ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக இதழின் வாசகர்களுக்கு அவர்களின் பிரக்ஞைக்கு ஏற்ப அதே சமயம் விரிந்த உளவியல் பார்வையுடன் தன் விமர்சனங்களை முன்வைக்கக்கூடியவர் செழியன். அவரது எல்லாம் சினிமா கட்டுரைகளிலும் மனத்துவ
அணுகுமுறையின் மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. எல்லாம் விளைவுகளுக்கும் ஓர் உளவியல் கட்டுமானங்களை முன்வைத்து அந்தச் சினிமாவின் மையப்புள்ளியை அடையக்கூடிய மொழி செழியனுடையது.விகடன் வெளியீடாக இவரது சினிமா விமர்சனம் தொகுப்பு இரு பிரிவுகளாக வெளிவந்திருக்கின்றன.)

கே.பா: சிறுகதையை அல்லது நாவலைப் படமாக்குதல் போன்ற மேற்கத்திய சினிமா பாணியைத் தமிழ் சூழலுக்குக் கொண்டு வந்தால் வெற்றிப் பெறும் அல்லது இரசனை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?

செழியன்: நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். பெரும்பாலும் நமது குறும்படங்களும் சினிமாக்களும் இயக்குனரின் கதையாகவும் தயாரிப்பாளரின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ற கதையாகவும் தான் இருக்கிறது. நம்மிடையே கதைகளே இன்னமும் எவ்வளவோ இருக்கின்றன. குறும்படத்தின் வடிவமே ஒரு மாற்று ஊடகம் அதாவது altanative media என்பதுதான். மாற்று ஊடகம் என்றால் வெகுஜன சினிமா செய்ய முடியாததை இந்த ஊடகம் செய்ய முடிந்தால் அது மாற்று ஊடகம் எனலாம். உதாரணத்திற்குத் தீவிர இதழை வெகுஜன இதழுக்கு எதிரான பண்பாட்டில் நடத்துவது போலத்தான். அதுபோல தீவிரமான ஒரு விஷயத்தைப் பதிவு செய்யும் சினிமாத்தான் மாற்று முயற்சிகளை முன்னெடுக்க முடியும். இந்த மாற்று முயற்சியைக் கொண்டு அவரவரின் சொந்தக் கதைகளைப் படமாக்குவதைவிட ஏற்கனவே கண்கானிக்காமல் விடப்பட்ட நமது தமிழ் அடையாளங்களை கலாச்சாரங்களை, வாழ்வைப் படமாக்கினால் தீவிர இரசனை மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். எத்துனையோ தமிழ்
கலாச்சாரத்தை முன்னிறுத்தக்கூடிய சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன, அதையெல்லாம் நாம் முறையாகப் படமாக்கினால் கண்டிப்பாக முக்கியமான கவனம் பெறும்.

தும்பி: மாணவர்அறிவியல் இதழ்

மாணவர்கள் அறிவியல் என்பதை எப்பொழுதிலிருந்து அறியத் துவங்குகிறார்கள்? இந்த ஒரு கேள்வி ஒவ்வொருவரின் வாழ்வின் அறிதல் முறைகளை நோக்கியும் மிக வேகமாகப் பாயக்கூடியது. ஒரு கல்லை எடுத்து ஆற்றில் வீசியதும் மூழ்கிவிட்ட கல்லின் தன்மையை உணர்வதிலிருந்தும் எட்டுக் கால் பூச்சிக்கு எட்டுக்கால் எனச் சொல்வதிலிருந்தும்கூட நம்முடைய முதல் அறிவியல் சிந்தனை உருவாகியிருக்கக்கூடும். அறிவியல் நம் அன்றாட வாழ்வின் மிக நெருக்கமான ஒன்று. நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவற்றையும் தெரிந்துகொள்வதில் நமக்குக் கிடைக்கும் கூடுதலான புலனே அறிவியல்.

அறிவியல் குறித்த கவனம் சமீபத்தில் இந்தியர்கள் மத்தியில்  அதிகமாகவே குவிந்துள்ளது என்றே சொல்லலாம். பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியைப் பற்றி தெரிந்துகொள்ள வரும் பெற்றோர்களின் அக்கறை அறிவியல் பக்கம் திரும்பியிருப்பதை உணர முடிந்தது. இனி அறிவியல் பாடம் அடுத்த வருடம் முதல் தமிழ் மொழியிலேயே போதிக்கப்படும்.  இந்த ஆண்டு முதல் "தும்பி" எனும் அறிவியல் காலாண்டிதழ் சு.யவராஜனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரத் தூவங்கியிருக்கிறது.

தும்பி அறிவியல் இதழ் மாணவர்களுக்காகப் பல சிறப்பு அம்சங்களுடன் பல அரிய தகவல்களை மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் காலாண்டிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ஆகவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துகொண்டிருக்கும் தும்பியை வாங்க விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சல் செய்யலாம்.(yuvatozhi@gmail.com)
விண்வெளி, பசுமை அறிவியல் என ஒவ்வொரு இதழிலும் ஒரு தனிச் சிறப்பான தலைப்புகளுடன் எளிமையான ஆய்வுகளுடன் அறிவியல் மீதான மாணவர்களின் இடைவெளியையும் பயத்தையும் நீக்கும் விதத்தில் உங்களை நாடி வருகிறது “தும்பி”.

சிறப்பான தாளில் முழு வண்ணப் பக்கங்களுடன் வெளிவரும் தும்பியின் விலை வெறும் ரி.ம 2.50 மட்டுமே. இதுவரை தும்பி 2010 ஆம் ஆண்டின் சிறப்பிதழாக இரண்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. 

கே.பாலமுருகன்.
மலேசியா