Pages

Friday, August 12, 2011

அழகர்சாமியின் குதிரை : நாட்டார் தெய்வமும் ஒரு சாமன்யனும்

இந்தியாவின் ஒரு கிராமத்தில்(மல்லையாபுரம்) நடக்கும் கதை இது. வழக்கம்போல திருவிழா நடத்துவதில் சிக்கல். பங்காளி பிரச்சனைகளால் பலமுறை திருவிழா தடைப்பட்டுப் போகிறது. ஆகையால் கிராமத்தில் மழை இல்லை எங்கும் வரட்சி பரவிக் கிடக்கிறது. சாமியாடியின் மூலம் அழகர்சாமி தன் மனக்குமுறல்களை முன்வைப்பதாக அந்தக் கிராமத்தின் கோடாங்கி நாடகமாடி திருவிழாவை நடத்த வேண்டும் என எல்லோரின் மனதிலும் எண்ணத்தை விதைக்கிறான். கிராமங்களில் திருவிழாவும் நாட்டார் தெய்வங்களும் எல்லை காவல் தெய்வங்களும் மிக முக்கிய தொன்ம குறியீடுகளாகும். அவர்களின் ஒட்டு மொத்த ஆன்மாவையும் பிரதிபலிக்கும் சில நம்பிக்கைகள் சார்ந்த கட்டுமானங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கின்றன.