Pages
▼
Monday, August 29, 2011
கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6ZfriVU67FBT54LhP78z2les8jM8-iO7bE_0k3XOu8ccTtlGIX3FZphx4jyubHvNK-Wn0q-U0yxra-qkuo49f2mtr_WJDbCUFLQMDFnFAxLGFTVWhPKoTk2G-sYIqJ_Qovze6vvhhUSY/s280/Modern-Art-Notes.jpg)
இன்று இந்த வீட்டைக் காலி செய்தாக வேண்டும். தரையில் நான் படுத்திருக்கும் இடத்திலிருந்து மூன்று அடி தள்ளி சன்னல். கதவு திறந்தபடியிருக்க வெளியில் வீடுகளிலிருந்து திட்டு திட்டாக வெளிச்சம் ஒழுகியபடியே இருந்தது. வழக்கமாக மூன்று மாதமொருமுறை இப்படி வேறு வீடு தேடி அலைந்துகொண்டிருப்பது இந்தச் சிறுநகரத்தில் என்னைப் போன்ற குடும்பமற்ற மனிதனுக்கு மரபார்ந்த விசயம். அந்த மரபை உடைக்க முடியாமல் இடம்பெயர்ந்து இங்கு வந்து சேரும்போது நகரம் மழைக்காலத்தில் கரைந்திருந்தது.