Pages

Monday, March 12, 2012

நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – நாவல் வெளியீடும் நாவலின் வரலாறும்


பல வருடமாகக் காத்திருந்த நாவல் வெளியீடு இது. வருகின்ற 25 ஆம் நாள் மார்ச் மாதத்தில் கோலாலம்பூர் தேசிய நூலகத்தில் மாலை 2.00 மணிக்கு வெளியீடக் காணவிருக்கின்றது. 2007ஆம் ஆண்டு மலேசிய நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசைப் பெற்று எனக்கொரு அடையாளத்தையும் கவனத்தையும் உருவாக்கிக்கொடுத்த நாவல் அது. நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள். 245 பக்கங்கள். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும், ஓம்ஸ் தியாகராஜன் குழுமம், மலேசியத் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய 2006ஆம் ஆண்டு நாவல் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாவல்களில் இந்த நாவல் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு தரப்பட்டது. பரிசு என்பதையும் மீறி அது எனக்கொரு அங்கீகாரமாக அமைந்திருந்தது.தொடர்ந்து இலக்கியத்தில் இயங்குவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திக்கொடுத்தத் தருணம் அது.