Pages

Thursday, July 2, 2009

சிவா பெரியண்ணன் கவிதை

சிவா பெரியண்ணன் கவிதை

நீலமாய் வானம் உடைந்து விழுந்ததாய்
பார்த்தவர்கள் பேசிக்கொண்டார்கள்
அந்தத் துண்டுகள்
வானத்தினுடையதுதானென்றும்
அந்த நீலம்
மிகவும் பரிச்சயமானதென்பதுமாய்
அவர்களின் பேச்சு இருந்தது!
வானம் உடைந்து போனதாய்
அவர்கள் அழவும் செய்தனர்!
பின்பு வானம் குறித்தான
வழிப்போக்கன் பேச்சு
அவர்களை கோபம் கொள்ளச்செய்தது
வழிப்போக்கன் கேட்டான்:

1) வானம் நீலம் என்று யார் சொன்னது?
2) வானத்தின் உண்மையான இருப்பு என்ன?

ஏப்ரல் 2006-இல் எழுதியது

குறிப்பு: மலேசிய நவீன கவிஙஞர்களில் முக்கியவானவர். 90களின் பிற்பாதியிலிருந்து இலக்கியத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறார். மலாயாபல்கலைக்கழகத்தில் பயின்று இப்பொழுது ஜொகூர்பாருவில் வேலை செய்து கொண்டிருக்கிறார். காதல், வல்லினம் போன்ற மலேசிய இதழ்களில் தனது நவீன கவிதைகளின் மூலம் நவீன வட்டத்தில் இருப்பை உருவாக்கியவர். சிவாவின் கவிதைகளில் எப்பொழுதும் ஒரு கேள்வி தேங்கி நிற்கும். அது இந்தப் பிரபஞ்சத்தின் புரிதலைக் கேள்விக்குள்ளாக்கும் கேள்வியாக இருக்கலாம்; அல்லது கழகத்தை ஏற்படுத்தும் கேள்வியாக இருக்கலாம். 2007 தொடக்கம் காதல் இதழின் வழி அவரது எழுத்துகள் எனக்குப் பரிச்சயம். தற்பொழுது வல்லின இணைய இதழை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

கே.பாலமுருகன்
மலேசியா

2 comments:

  1. //அவ்வளவுதானா உறக்கம்?//

    luvly one in uyirmmai!! congratz!!

    ReplyDelete
  2. பகிர்வு நன்று.
    கவிதை நல்ல அறிமுகம்.

    ReplyDelete

கருத்து