Tuesday, June 24, 2008

கால்களில்லாதவர்களின் நடை


நடப்பதற்காக

ஏங்கி ஏங்கியே

நடப்பதை மறந்திருந்தோம்!


நடப்பதென்பது சிரமமானது

என்று எங்களைப்

பயமுறுத்தி வைத்திருந்தார்கள்!


நடப்பவர்களை

அதிசியத்துப் பார்த்தோம்!

மிரட்டினார்கள்!

அதட்டினார்கள்!

கால்களை உடைத்து

ஊனமாக்கினார்கள்!


நடப்பது

நடக்க நினைப்பது

நடக்க முயல்வது

என்ற பாவங்களுக்கு

தனிதனியாக தண்டனைகள்

வகுத்திருந்தார்கள்!


சங்கிலியால்

இறுகக் கட்டி

தூன்களில் சி

றை வைத்தார்கள்!


எக்கி எக்கி தவித்தோம்

உடைந்த கால்களுடன்!

தவழக்கூட வழியில்லாமல்

சிலையானோம்!


சிலர் எங்களைத்

தெய்வம் என்று போற்றினார்கள்!

தெய்வமானோம்!


அவர்களுக்கும் தெரியவில்லை

இவர்களுக்கும் தெரியவில்லை

நாங்கள் நடக்க

ஆசைபட்ட

கணங்கள் பற்றி!


கே.பாலமுருகன்

மலேசியா