Friday, December 30, 2011

இந்தியப் பயணம்-4 அம்மாயும் கல்லநேந்தல் கிராமமும்


தஞ்சாவூர் பேருந்து நிலையத்திற்கு நானும் விஷ்ணுபுரம் சரவணனும் வந்து சேர்ந்தோம். பேராசிரியர் வெற்றிச்செல்வனிடமிருந்து விடைப்பெற்று புதுக்கோட்டைக்குப் பயணப்பட்டேன். தங்சாவூரிலிருந்து மேலும் ஒரு 3 மணி நேரம் பயணம். தஞ்சை பெரிய கோவிலைத் தரிசித்த பிரமிப்புகள் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றின. புதுகோட்டை பேருந்து நிலையம் பரப்பரப்பாகவே காணப்பட்டது. பேருந்திலிருந்து இறங்கியதும் நீண்ட சாக்கடை. வரிசையாக ஐவர் நின்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர். சாக்கடை கருமையாகி ஓடிக்கொண்டிருந்தது.