Monday, April 20, 2009

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம்- 2008-2009க்கான சிறந்த சாதனையாளராக தேர்வு


(எழுத்தாளர் கே.பாலமுருகனுக்கு டத்தோ சுப்ரமணியம் சிறப்பு நினைவு பரிசினை எடுத்து வழங்குகிறார்)

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் என்னுடைய 2009ஆம் ஆண்டின் சாதனைகளையொட்டி சிறப்புச் செய்யப்பட்டது. வழக்கம் போல பல புதிய தீர்மானங்கள் எழுத்தாளர் கூட்டத்தில் பேசப்பட்டு முடிவுச் செய்யப்பட்டன. மேலும் சக அரசு சார்பாற்ற இயக்கத்திலிருந்து வந்திருந்தவர்களும் கல்வி இலாகாவைச் சேர்ந்தவர்களும் எழுத்தாளர் சங்கத்திற்கு முழு ஒத்துழைப்பையும் தருவதாகக் கூறியிருந்தார்கள்.

இயக்கம் ஒரு சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும். இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லவும் மக்களை வாசகர்களை எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் எழுத்தாளர் இயக்கம் தொடந்து வலுவான செயல்பாடுகளுடன் இயங்க வேண்டும் என்று முடிவுச் செய்யப்பட்டது. இயக்கம் அரசியல் சார்ந்து இல்லை, இலக்கியம் சார்ந்துதான் இருக்கின்றது என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

கெடா மாநில எழுத்தாளர் இயக்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பல இளம்-மூத்த எழுத்தாளர்கள் பங்கு கொண்டு வெற்றியடைந்து, இன்றைய தினத்தில் அவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. முதல் பரிசுக்குரிய வெற்றியாளர் தவிப்புகள் எனும் கதையை எழுதிய திரு.இலட்ச பிரபு அவர்கள். பாடாங் செராயாய் சேர்ந்த தமிழாசிரியர்.

மலேசிய தேசிய பல்கலைகழகம் நடத்திய கவிதை போட்டியில், சி.கமலநாதன் சுழற் கிண்னத்தை வென்றதோடு, உலக அளவில் நடத்தப்பட்ட சுஜாதா நினைவு அறிவியல் புனைக்கதை போட்டியில் ஆசியா-பசிபிக் பிரிவில் சிறந்த சிறுகதைக்கான பரிசை வென்றதையொட்டி சிறந்த 2008-2009 ஆண்டிற்கான சாதனையாளர்-எழுத்தாளர் என்று கௌளரவிக்கப்பட்டு நினைவு கேடயமும் வழங்கப்பட்டது எனக்கு. சால்வையும் மாலையும் இல்லாமல், இந்த வழக்கத்தைத் துறந்த கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்திற்கு சபாஷ்!