Saturday, June 6, 2009

ஷோபா சக்தி வலைப்பதிவிலுள்ள கட்டுரை/கதைக்கு எனது பின்னூட்டங்கள்

1. பா.செயப்பிரகாசத்திற்கு மறுப்பு
(ஷோபா சக்தி)

பா. செயப்பிரகாசம் “யாருக்காகப் பேசுகிறார் அ. மார்க்ஸ்” என்றொரு கட்டுரையை ‘கீற்று’ இணையத்தில் எழுதியிருந்தார். அ.மார்க்ஸ் ‘புத்தகம் பேசுது’ இதழுக்கு வழங்கியிருந்த நேர்காணலை எப்படியெல்லாம் திரிக்க முடியுமோ அப்படியெல்லாம் திரித்து, மேற்கோள்களை எப்படியெல்லாம் சிதைக்கமுடியுமோ அப்படியெல்லாம் சிதைத்து பா.செ. அந்தக் கட்டுரையில் புலிகளுக்கு வக்காலத்து வாங்கியிருந்தார். பல இடங்களில் பா.செயப்பிரகாசம் காலச்சுவடுக் கட்டுரையாளரை மட்டுமல்லாமல் குமுதம் கட்டுரையாளரையும் தாண்டிச் சிந்தித்துள்ளார். ஓவராய் சிந்தித்ததன் விளைவுதான் ராஜீவ் காந்தியைப் புலிகள் கொல்லவில்லையென்ற அவரது புதிய கண்டுபிடிப்பு. சிவராசனுக்கும் அகிலாவுக்கும் தனுவுக்கும் சூசகமாக வீரவணக்கக் குறிப்புகளை புலிகள் தங்களது பத்திரிகைகளில் எழுதியதை பா. செ. அறியாமலிருந்திருக்கலாம். ராஜீவ் காந்தியை எதற்காகக் கொன்றீர்கள் என்ற கேள்விக்கு வன்னிப் பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரன் தலைகுனிந்ததைக்கூட பா.செ. அறியமாட்டாரா? இதிலே பின்நவீனத்துவம் குறித்து பா.செக்கு விமர்சனம்வேறு. தமிழ்நாட்டில் மதுரை ஆதீனம் மட்டும்தான் இன்னும் பின்நவீனத்துவம் மீது விமர்சனம் வைக்கவில்லை.

என் பின்னூட்டம்: பா.செயபிரகாசம் கதைகளில் வெளிப்படும் யதார்த்தமான மனித நேயமும் மனிதர்களும் கவனிக்கத்தக்க அம்சங்கள். அவரின் அரசியல் குறித்து இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரூ படைப்பாளியும் அவனது அரசியல் நிலைபாடுகளாலும் கருத்துகளாலும் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதும் மதிப்பீடப்படுவதும் இயல்பாக நடக்கக்கூடியது.

ஈழப் போராட்டம் குறித்து, இன்று புலிகளை மட்டுமே முன் வைத்து, அதாவது ஈழப் போராட்டம் என்றாலே விடுதலை புலிகள் என்று ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தும் அரசியல் பார்வையைப் பல எழுத்தாளர்கள் கொண்டுள்ளார்கள். அதற்கு அவர்களே பொறுப்பு.

இன்று உலகம் முழுவதும் விடுதலை புலிகளுக்கும் அவர்களின் "வீரப் போராட்டத்திற்கும்" அங்கீகாரமும் ஆதரவும் கிடைப்பதற்குக் காரணம், புலிகள் மட்டுமே ஆண்மையுடையர்கள், களத்தில் இறங்கி போர்ப் புரியக்கூடிய வீரர்கள் என்கிற வசீகரக் கட்டுமானம் இருக்கிறது. அந்தக் கட்டுமானம் புலிகளின் தவறுகளைச் செல்லாமாகக் கூட கண்டிக்க விடாதபடி மிக இறுக்கமாக கட்டமைக்கப்பட்டுருக்கிறது. இன்று புலிகளைத் தவறாக பேசினாலோ, அல்லது அவர்களுக்கு முரணாகப் பேசினாலோ, "பச்சை துரோகி" என்கிற பெயர் கிடைஇக்கும் அளவிற்கு ஈழப் போராட்டத்தின் மீது புலிகளின் ஆளுமை படிந்துள்ளது.

ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் போன்றாவர்கள் ஈழப் போராட்டத்தை, புலிகளின் அந்த வசீகரக் கட்டுமானத்தை உடைத்து, நியாயமான அரசியல் அணுகுமுறைகளுடன் வெளிப்படுத்துவதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளன. புலிகள் மட்டுமே வீரர்கள், உயிர் தியாகம் செய்து தனி ஈழத்திற்காக போராடியவர்கள் என்கிற விமர்சனத்துடன் மட்டுமே ஈழப் போராட்ட்டத்தைக் கடந்து போக வேண்டும் என்கிற அவசியம் சமூகத்தால் வகுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் மீள்பார்வையும் மறுபரிசீலனையும் அவசியம் வேண்டும்.

கே.பாலமுருகன்
மலேசியா

2. எம்.ஜி.ஆர் கொலை வழக்கு: ஷோபா சக்தியின் சிறுகதை
எனது பின்னூட்டம்:

"எம்.ஜி.ஆர் கொலை வழக்கு"

கதைக்கே உரிய சில வசீகரங்களும் சில வெளிப்பாடுகளும் உள்ளடக்கிய கதை. ஷோபா சக்தி எழுதியிருக்கும் கதை என்று அவருடைய கொள்கை அறிந்தவர்கள், "இவன் என்னா எழுதிறப் போறான், புலி எதிர்ப்பு உக்கிரமாக வழியும் களமாக மட்டுமே இருக்கும்" என்று புலம்புவதற்கு எல்லாம் வகையான வசதிகளையும் கதாசிரியர் செய்து கொடுத்திருக்கிறார். இயக்கத்தைச் சேர்ந்தவனைப் பிடித்து வைத்துக் கொண்டு அவனைக் கொலை செய்யத் திட்டமிடும் இடங்களில், புலிகள் மீதான/இயக்கத்தின் மீதான கோபம் வெளிப்படுகிறது.

* எம்.ஜி.ஆர் கொலை வழக்கா? அவர் இயற்கை மரணத்தை எய்தியவர் அல்லவா? படங்களில் கூட காட்டினார்களே, பகவான் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டே அவரது உயிரைக் கொண்டு செல்வது போல. ஆச்சரியத்துடன் யார் அந்த எம்.ஜி.ஆர் அல்லது எம்.ஜி.ஆர் எப்படி இறந்திருப்பார் என்ற கேள்விகளுடன் சட்டென வாசகன் உள்நுழைந்துவிடக்கூடிய வசீகரத்தை ஏற்படுத்தும் தலைப்பு "எம்.ஜி.ஆர் கொலை வழக்கு". இருக்கட்டும், ஷோபா சக்தி கதையின் தலைப்பை "engineering" செய்து மிகத் தந்திரத்துடன் கையாண்டுள்ளார். எம்.ஜி.ஆர் இரசிகர்களை ஆர்வத்திற்குட்படுத்தும் அம்சம்.

*கதைக்குள் நுழைந்தால், கதாசிரியர் நம் முகத்தை ஓங்கி அறைந்து இது நீ நினைக்கும் எம்.ஜி.ஆர் அல்ல என்பது போல இருக்கும். கதையில் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ எம்.ஜி.ஆர் கொண்டிருந்த அரசியலின் நிலைபாடுகளை விமர்சிப்பது போல இருக்கிறது. எம்.ஜி.ஆர் என்கிற வசீகரத்தின் தேசிய உச்சியின் மேல் தாண்டவம் ஆடுகிறது கதை.

கே.பாலமுருகன்
மலேசியா