Showing posts with label அநங்கம் இதழ். Show all posts
Showing posts with label அநங்கம் இதழ். Show all posts

Thursday, February 17, 2011

மலேசிய இலக்கிய இதழ் அநங்கம் இனி "பறை" எனும் புதிய அடையாளத்துடன்


2008 ஆம் ஆண்டு மலேசிய மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமியுடன் ஏற்பட்ட சந்திப்பிற்கும் உரையாடலுக்கும் பிறகு கெடாவில் ஒரு சிற்றிதழ் தொடங்கினால் அது ஒரு முக்கியமான பதிவாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் அதன் பிறகு அதைப் பற்றி தொடர்ச்சியான சிந்தனைக்கு ஆளாகவில்லை. மீண்டும் கோலாலம்பூரில் வல்லினம் ஆசிரியர் ம.நவீனைச் சந்தித்தபோது அவரும் என்னிடம் கெடா மாநிலத்தில் சீ.முத்துசாமி யுவராஜன் போன்றவர்களின் உதவியுடன் ஒரு சிற்றிதழ் தொடங்குவதற்கு ஆலோசனையைத் தெரிவித்தார். அவர் கொடுத்த உற்சாகம் என்னை இயங்க வைத்தது. அதன்படி கெடா மாநிலம் திரும்பியதும் உடனடியாக அநங்கம் தயாரிப்பு வேலையில் இறங்கினேன்.

அநங்கம் இதழ் வடிவமைப்பிலும் இதழ் சார்ந்த வெளியீடு, சட்ட ரீதியிலான விளக்கங்கள் வரை என்னுடன் பகிர்ந்து கொண்ட ம.நவீனுக்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். அநங்கம் பெயரைக்கூட நாங்கள் இருவரும் சேர்ந்து கலந்தாலோசித்துதான் உருவாக்கினோம். அநங்கம் இதழின் ஆரம்பக்கால ஆலோசகராகவும் நவீன் தனது அனுபவத்தின் வழி பங்காற்றினார். மஹாத்மானின் நீண்ட கடிதம், தொடர்ச்சியாக அநங்கத்தைச் செல்லுமிடத்திலெல்லாம் தயங்காமல் விற்பனை செய்து கொடுத்த கோ.புண்ணியவான், இதழ் தயாரிப்பில் என்னுடன் சேர்ந்து அங்குமிங்கும் அலைந்த நண்பர் ப.மணிஜெகதீசன், அவ்வப்போது அலைப்பேசியின் வாயிலாக அநங்கம் தொடர்பான வாசகப் பார்வையை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்ட சிங்கப்பூர் பாண்டித்துரை, இதுநாள்வரையில் அநங்கம் இதழுக்கு ஓவியங்கள் வரைந்து தரும் நவீன ஓவியர் சந்துரு என அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். விரிவான கட்டுரை மலேசிய சிங்கப்பூர் இலக்கிய உறவு பாலம் தொகுப்பு இதழில் வெளிவரும்.

2011 தொடக்கம் அநங்கம் புதிய பெயருடன் புதிய அடையாளத்துடன்:

இந்தாண்டு தொடக்கம் அநங்கம் புதிய மாற்றங்களுடன் மலரவிருக்கின்றது. குரலற்றவர்களின் குரல் என்கிற அடையாளத்துடன் கலை. இலக்கியம், அரசியல், சமூகம் என எல்லாம் தளத்திலும் மாற்றுப்பார்வையை முன்வைக்கக்கூடிய இதழாக அநங்கம் இனி , “பறை” எனும் இதழாக வெளிவரவிருக்கின்றது. பறை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் கருவி எனும் கற்பிதம் சமூக தளத்தில் உருவாகியிருக்கிறது. பறையைப் போன்றுதான் இன்றளவும் பலவகைகளில் சுரண்டப்பட்டு அடையாளமில்லாமல் ஒடுக்கப்படும் பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். அது போன்ற குரலற்றவர்களின் குரலாக மாற்றுப்பார்வையுடன் இனி பறை இதழ் பிரசுரம் காணும்.

என்னுடன் ஆசிரியர் குழுவிலும் ஆலோசனை குழுவிலும் ம.நவீன், ஏ.தேவராஜன், ப.மணிஜெகதீசன், கோ.புண்ணியவான் போன்றவர்கள் தொடர்ந்து பங்காற்றுவார்கள். பறை இணைய இதழாகவும் ம.நவீன் அவர்களின் முயற்சியில் வெளிவரவிருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடர்ந்து பறை இதழையும் அதன் களத்தையும் விரிவிப்படுத்தும் வகையிலான பங்களிப்புகள் இதன் மூலம் முன்னெடுக்கப்படும். விரைவில் மார்ச் 8 ஆம் நாள் அன்று மலேசியாவில் நிகழ்ந்த ஒரு முக்கியம் வாய்ந்த வரலாற்று சம்பவத்தை முன்னிட்டு அதனைச் சிறப்பிக்கும் வகையில் காத்திரத்துடன் பறை இணைய இதழ் வெளிவரும்.

அநங்கத்திற்கு அளிக்கப்பட்ட அதே வரவேற்பும் ஆதரவும் இனி பறை இதழுக்கும் கிடைக்குமென நம்புகின்றேன். இதுநாள் வரையில் அநங்கம் இதழுக்கு எல்லாம் வகையிலும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக்கம்: கே.பாலமுருகன் 
சுங்கைப்பட்டாணி

Saturday, March 20, 2010

அநங்கம் இலக்கிய இதழ் - ஏப்ரல் மாத வெளியீடு

விரைவில் ஏப்ரல் மாத வெளியீடாக அநங்கம் ஏழாவது இலக்கிய இதழ் வெளியீடப்படவிருக்கிறது. படைப்புகளை அனுப்ப விரும்பும் எழுத்தாளர்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். 31ஆம் திகதி மார்ச் மாதத்திற்குள் அனுப்பி வைக்கவும்.

ஏப்ரல் மாத அநங்கத்தில் இதுவரை வெளியீடத் திட்டமிட்டுள்ள படைப்புகள் பின்வருமாறு:

சிறுகதைகள்:

1. உதிரம் உறைந்து போனது
   கங்காதுரை - தலைநகர்

2. நண்டு - கமலாதேவி சிங்கப்பூர்

3. மனுசன் - சித்ரா ரமேஸ்

கட்டுரை/பத்தி:

1. அது ஒரு பெரிய கதைப்பா- ஏ.தேவராஜன்

2. அநங்கம் இதழ் 6-இல் வெளிவந்த சிறுகதைகளின் வாசக எதிர்வினை
ப.மணிஜெகதீசன்

3. வரண்ட கதைக்களமும் மாதிரி இலக்கியமும் - கே.பாலமுருகன்

4. பாண்டித்துரை- சிங்கப்பூர்

சிறப்பு நேர்காணல்: எந்த வணிக சமரசங்களும் இல்லாமல் கதையை நேர்மையாகச் சொல்வதுதான் நல்ல சினிமா
சிங்கப்பூரில் செழியுடன் சந்திப்பு - கே.பாலமுருகன்

கேள்வி பதில்: இவர்களுடன் சில நிமிடங்கள்:
மா.சண்முகசிவா - சை.பீர்முகமது
மலேசிய இலக்கிய கலை எழுச்சியற்றவையா?- ஒரு விவாதம்

கவிதைகள்:

பா.அ.சிவம்
ரமேஸ்.டே
தினேசுவரி
வாணிஜெயம்
ந.பச்சைபாலன்
பிரமாஸ்திரன்
செல்வராஜ் ஜெகதீசன்

மேலும் சில படைப்புகளுடன் தீவிர இலக்கியத்திற்கான வலுவான பதிவை நோக்கி முன்னெடுக்கும் இலக்கிய இதழைப் பெற மின்னஞ்சலில் தொடர்புக் கொள்ளுங்கள்.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
ananggam@hotmail.com

Tuesday, February 2, 2010

மலேசிய தீவிர இலக்கிய இதழின் தற்காலிக இணைய இதழ்

அநங்கம் தற்காலிக இணைய இதழ்
டிசம்பர் இதழுக்கான சில படைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

படைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை அநங்கம் முவரிக்கு அனுப்பி வைக்கவும்.
ananggam@hotmail.com

அநங்கம் அகப்பக்கம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதியில் தயாராகிவிடும். ஆகையால் அதுவரையில் படைப்பாளர்கள் வாசகர்கள் இந்தத் தற்காலிக இணைய இதழில் அநங்கம் இதழ் படைப்புகளைக் காணலாம்.

கே.பாலமுருகன்
இதழாசிரியர், மலேசியா

Wednesday, January 6, 2010

சமூகத்தை நோக்கிய புதிய மதிப்பீடுகளுடன் – அநங்கம் இதழ் 06


அநங்கம் சிறுகதை சிறப்பிதழ் (6 ஆவது இதழ்) குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு வர முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். அச்சிற்குச் சென்ற இடத்தில் பக்கங்கள் அதிகமாக இருப்பதால் கொஞ்சம் சிக்கல் நேர்ந்துவிட்டது. ஆகையால் மீள் வடிவமைப்பு செய்து மீண்டும் பிரசுரிக்க நேரிட்டது. மேலும் பக்க அளவைக் குறைப்பதற்காக சிறுகதை சிறப்பிதழுக்கு வந்திருந்த சில கதைகளை அடுத்த இதழுக்காகத் தவிர்க்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

அடுத்த அநங்கம் இதழ் மார்ச் 2010-இல் பிரசுரம் ஆகும். மேலும் அநங்கம் இணைய இதழாகவும் மாதந்தோறும் மலரவிருப்பதால், இனி பிரசுரம் குறித்து பிரச்சனை இருக்காது. ஆகையால் படைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை அநங்கம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ( ananggam@hotmail.com)

ஓவியம்: ஓவியர் சந்துரு

அநங்கம் சிறுகதை சிறப்பிதழ்:

1. கோபாலும் அவனைச்சுற்றிப் பின்னப்பட்டுள்ள வலைகளும் –கோ.புண்ணியவான்

அந்தக்கேள்வியைச் மிகச்சாதாரணமாக அவன் எடுத்துக்கொண்டது எனக்கு வியப்பை ஊட்டியது. அவனுடைய வியாதியை அவன் புரிந்து ஏற்றுக்கொண்டான் என்பதே பெரிய விஷயமாக எனக்குப்பட்டது. என் கேள்விக்கு எதிராக அவன் தன் பலவீனத்தையோ, தாழ்வு மனப்பான்மையையோ காட்டாதது எனக்குக் கொஞ்சம் ஆறுதலை உண்டு பண்ணியது. அதற்கு அவன் கொடுத்த பதிலிலிருந்து , நான் காட்டிய கரிசனத்தை அவன் உள்ளுணர்ந்து கொண்டான் என்பதே எனக்கு உவப்பாகவும் இருந்தது.

2. கோல பெர்ணம் எஸ்டேட்டிலிருந்து கோலாலம்பூர் மாநகர்
வரை - முனிஸ்வரன்குமார்

வயசாவுதுப்பா ஒங்களுக்குன்னு சொல்லி இந்த பய என்னிய இந்த சண்டாள எடத்துக்குக் கூட்டியாந்துபுட்டான். எனக்கு அறவே புடிக்கல இந்த டவுன் பொழப்புன்னு சொன்னாலும் கேக்க மாட்றான். இங்க வந்து தள்ளிட்டான்.
ஐயோ, மணியாவுது! இன்னும் பச்ச லைட்டு வந்த பாட்டக்காணம். இந்த ட்ராபிக் எழவக் கண்டுபிச்சவன் எவன்னு . . .

3. பெண்மையை மறுதலித்தல்- சிதனா

“பத்மாவ சுருக்கி பேட்னு ஆக்கிக்கிச்சி! இது சின்னப் பிள்ளையா இருந்தப்பவே அப்பா அம்மா ரெண்டு பேரும் செத்துப் போயிட்டாங்களாம்! யாரோ சொந்தக்காரங்க எடுத்து வளர்த்திருக்காங்க! வளர, வளர, அந்த சொந்தக்கார ஆளுல இருந்து மத்த ஆம்பளைங்களும் இந்தப் பொண்ண வேற மாதிரி ‘டிரிட்’ பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம்! அதுக்குப் பெறகுதான் இந்தப் பொண்ணு, ஆம்பள. . .

4. குறுக்கெழுத்து- க.ராஜம்

முந்தைய பொழுதுகளில் முயன்ற குறுக்கெழுத்தில் ஏதாவதொரு விடையைக் கண்டுபிடிக்க இயலாமல் போனால் அத்தேடல் மறுநாள் வேலையின் பொழுது அவளின் எண்ணத்தில் கறுப்பு வெள்ளை கட்டங்களைப் போட்டிருக்கும். வேலையில் முழ்கியிருந்தவாறே மனதில் உண்டாகியிருக்கும் கட்டங்களுக்கு அவளின் மூளை விடைகளைப் . . .

5. தூண்டில் – எம்.ரிஷான் செரிப்

சட்டைகளைக் கழற்றி கரைக்கு எறிந்துவிட்டு, நீண்ட நேரமாக அந்த நாற்றம் பிடித்த அழுக்கு நீருக்குள் நீந்தி நீந்தி மீன்களைக் கைகளால் பிடிக்கமுயற்சித்தோம். அவை எங்களுக்குப் போக்குக் காட்டி ஏமாற்றிக் கொண்டே இருந்தன. மீண்டும் நித்திதான் இன்னுமொரு யோசனையைச் சொன்னான். தண்ணீரையெல்லாம் கரைக்கு இரைத்து வற்றச் செய்தால் நீர் மட்டம் குறைந்து இலகுவாக மீன்களைப் பிடிக்கலாம் எனச் சொல்லியபடியே . . .

6. அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே - மணியம் பேருந்துகளும் – கே.பாலமுருகன்

அப்பே பேருந்தில் ஏறும் நண்பர்கள் என்னைவிட 15 நிமிடத்திற்கு முன்பாகவே எழுந்திருக்க வேண்டும். அது வழக்கமாக நிகழும் ஒரு கட்டாயம். சரியாக 6.15க்கு கம்பத்தின் மேட்டுப் பாதையில் அப்பே பேருந்து வந்து நிற்கும். அதிகாலை இரைச்சலை ஏற்படுத்துவதற்காகவே ஒரு மிகப்பெரிய சீன மாணவர்களின் கூட்டம் அங்கு இருக்கிறது. 8.00 மணிக்கு. .

7. நாளை காலை 9க்கு இறந்துவிடுவேன்- சு.கஸ்தூரி

விரிவுரை நேரத்தில் தமயந்தியின் உடல் மட்டுமே அங்கிருந்தது. தான் நாளை 9am க்கு மணிக்கு இறந்துவிட போகிறாள் என்பதை முழுதாக நம்பிவிட்ட நிலையில் இருந்தாள். மரணம் இவ்வளவு விரைவில் வந்துவிடும் என்று சற்றும் எதிர்பாராதவாளாய் முடங்கிப் போயிருந்தாள். ஆமாம். . .

8. யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்- ஜெயந்தி சங்கர்

நாங்கள் இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு தான் சந்தித்துக் கொண்டோம். பென்ச்சூ உயர்நிலை மூன்று மற்றும் நான்கை வேறொரு பள்ளியில் படித்துவிட்டு யீஷுன் தொடக்கக் கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தாள். வெவ்வேறு பாடங்கள் எடுத்திருந்ததால் அவள் வேறு வகுப்பிலும் நான் வேறு வகுப்பிலுமிருந்தோம்.

9. 6- மாதங்கி

இயந்திரம் இருப்பதாலோ என்னவோ, ஒவ்வொருவரும், ஜிம் செல்லும் உடை, நடைபயிற்சி உடை, வீட்டு உடை அலுவலக உடை, போததற்கு இரவு உடை என்று அவரவர் தேவைக்கேற்ப அணியும் ஒவ்வொருவரின் துணிகளும் மலைபோல் குவிகின்றன. கொனையில் உள்ள வீடு என்பதால், காலாக்கம்புகள் சமையலறையில் மட்டுமன்றி வாயிலில் உள்ளதால், உலர்த்த இடமிருக்கிறது.


பத்திகள்:

1. பிதுக்கித் தள்ளப்பட்ட மாணவனும் அவனது கதை நுழைவும்- ஏ.தேவராஜன்

இடைநிலைப்பள்ளி வாழ்க்கை முடிந்து ஒரு பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்பு ‘ஏ’ வாங்கிய மாணவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரமே தெரியாத அளவுக்குக் காணாமல் போக , பையப் பைய தங்களுக்கான இலக்கிய அடையாளத்தை நிறுவுவார்கள் பிதுக்கி வெளியில் தள்ளப்பட்ட மாணவர்கள். பின் கூறப்பட்ட

2. துறைமுகம் நாவல் விமர்சனம்- அ.விக்னேஸ்வரன்

மதம் எனும் போர்வையால் மனிதனுள் ஏற்படும் பிம்பங்கள் பல. வித விதமான புரிதல்கள். இதன் பிரள்வுகளே மூட நம்பிக்கைகள் என அறியப்படுகிறது. படிப்பறிவு இல்லாத, மதம் எனும் புரிதலில் பயமும், தெளிவற்ற சிந்தனையும். .

3. புத்திமதிகளை மட்டும் உற்பத்திக்கும் ஆற்றலா இலக்கியம்
என்பது? – கே.பாலமுருகன்

சமூகத்தில் நிகழும் குற்றங்களையும் குற்றவாளிகளையும் அடையாளங்கண்டு அவர்களுக்குப் போதனைகளை உற்பதிக்கும் ஆற்றலை இலக்கியம் எனக் கொண்டாடும் சிந்தனை மாறி, குற்றங்களின் அடிவேருக்குச் சென்று அதனை புதிய மதிப்பீடுகளுடன் விவாதிக்கும் ஆற்றலே தரமான இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் ந.பச்சைபாலன், தினேசுவரி, இளைய அப்துல்லாஹ், பா.அ.சிவம் கவிதைகள்

இதழாசிரியர்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி

Thursday, December 24, 2009

சிறுகதை சிறப்பிதழாக : அநங்கம் மலேசிய இலக்கிய இதழ் (டிசம்பர் 2009)

சிறுகதைகள் :

1. யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள் - ஜெயந்தி சங்கர்
2. கோலா பெர்ணம் எஸ்டேட்டிலிருந்து கோலாலம்பூர் மாநகர் வரை -
முனிஸ்வரன் குமார்
3. சில இறுதி பக்கங்கள் - ஏ.தேவராஜன்
4. 6 - மாதங்கி (சிங்கப்பூர்)
5. பெண்மையை மறுதலித்தல் - சிதனா
6. ஏந்தல் - மஹாத்மன்
7. குறுக்கெழுத்து - ராஜம் ரஞ்சனி
8. தூண்டில் - எம்.ரிஷான் செரிப்
9. நாளை 9 மணிக்கு இறந்துவிடுவேன் - கஸ்தூரி சுப்ரமணியம்
10.நுகத்தடி - கமலாதேவி சிங்கப்பூர்
11.மனுசன் - சித்ரா ரமேஸ்
12.மிதக்கும் கனவுகள் - கோ.புண்ணியவான்
13.ஒரு அதிகாலையும் மணியம் பேருந்து கடன்காரர்களும் - 
      கே.பாலமுருகன்

கவிதைகள்:

பா.அ.சிவம்
ந.பச்சைபாலன்
இளைய அப்துல்லாஹ்
தினேசுவரி

பத்தி

சை.பீர்முகமது
அ.விக்னேசுவரன்
ஏ.தேவராஜன்

ஆசிரியர்:                   கே.பாலமுருகன்
துணை ஆசிரியர்: ஏ.தேவராஜன்
ஆசிரியர் குழு:       ப.மணிஜெகதீசன்
                                        கோ.புண்ணியவான்

Wednesday, September 30, 2009

அநங்கம் சிற்றிதழ் விமர்சனம் - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (2008)

நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்ட வாசகர்கள், படைப்பாளிகள் மலேசியாவில் நிறைய இருக்கிறார்கள். சிறுகதைகள் கவிதைகள் என்று தொடர்ந்து செயல்படும் அவர்கள் தங்களது வெளிப்பாட்டிற்காக ஒன்றிரண்டு சிற்றிதழ்களை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வெளிவந்துள்ளது அநங்கம் என்ற சிற்றிதழ்.

இதன் முக்கிய நோக்கமாக மலேசியாவில் உள்ள தீவிர எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் வாசகர்களையும் ஒன்றிணைப்பது என்ற பிரகடனத்துடன் முதல் இதழ் வெளியாகி உள்ளது.

பொதுவில் சிறுபத்திரிக்கைகள் நடத்துவது பொருளாதார சிரமம் கொண்டது. அத்தோடு அதற்கான எதிர்வினைகளும் மிக குறைவாகவே இருக்கும். அதையும் தாண்டி தொடர்ந்து சிறுபத்திரிக்கைகள் உருவாவதற்கு முக்கிய காரணம் நமது அக்கறைகளே. அதற்காக நாம் கொள்ளும் கவனமும் மாற்று முயற்சிகளுமே சிற்றிதழ்களாக வெளியாகின்றன. நானும் அட்சரம் என்ற சிற்றிதழை நடத்தியிருக்கிறேன்.

கே.பாலமுருகன் இந்த சிற்றிதழின் ஆசிரியராக உள்ளார். இவரது நாவல் இந்த ஆண்டு ஆஸ்ட்ரோ நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. சிறந்த சிறுகதையாசிரியர். உற்சாகமான இளைஞர். வாசிப்பதிலும்  விவாதிப்பதிலும்  மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

முதல் இதழில் உள்ள முறிவின் நெடிக்குள் ஆண் கால்கள் என்ற கே.பாலமுருகனின் சிறுகதை சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக கதையை அவர் கொண்டு செல்லும் விதமும் கதையின் குரலும் தனித்துவமானதாகயிருந்தது.

நவீன கவிதை குறித்த நவீனின் கட்டுரை முழுமையடையாத போதும் நல்ல வாசிப்பு அனுபவத்தை தருகிறது. பாண்டித்துரை, கவிதா மணிஜெகதீசன், ரமேஸ்டே தோழி ஆகியோரின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக சிற்றிதழ் கவிதைகள் என்றே தனித்த வகையிருக்கிறது. அந்த வகைக்குள் சரியாக பொருந்தக்கூடியவை இவை. எனக்கு இதில் எதுவும் அதிகம் வசீகரிக்கவில்லை.



அச்சு அமைப்பும் வடிவாக்கமும் நிறைய மேம்படவேண்டியுள்ளது. முதல் இதழ் என்ற அளவில் இவை பெரிதாக கவனிக்கபடாமல் போயிருக்க கூடும். ஆனால் இன்று வாசிப்பை நெருக்குமாக்குவதற்கு வடிவமைப்பு முக்கிய துணை போகிறது. அதை சரி செய்ய வேண்டியது மிக முக்கியம்.
தொடர்ந்து புதிய படைப்பிலக்கிய முயற்சிகளுடன் அநங்கம் சிறப்பாக வளரக்கூடும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது.





முதல் அநங்கம் இதழின் போது எஸ்.ராமகிருஷ்ணன் அளித்த விமர்சன பத்தி.

நன்றி : அநங்கம் இதழ் 1
கே.பாலமுருகன்

Wednesday, September 23, 2009

அநங்கம் – சிறுகதை சிறப்பிதழ்

அநங்கம் மலேசிய இலக்கிய இதழ் மேலும் வலுவான தனித்துவங்களுடன் சமரசமற்ற இருப்புடன் தொடர்ந்து அடுத்த கட்டத்தை/களத்தை எட்டும். அடுத்த இதழ் நவம்பர் மாதத்தில் சிறுகதை சிறப்பிதழாக வரவிருக்கிறது. தேர்ந்தெடுத்த எழுத்தாளர்கள் மட்டும் தங்களின் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்வது போன்ற வாய்ப்புகளுக்கு இடம் தராமல் புதியவர்களையும் தீவிர எழுத்தில் ஆர்வமுள்ள இளைய படைப்பாளிகளையும் இதில் பங்களிப்பு செய்ய வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றோம்.

அயல் நாட்டில் இருக்கும் நண்பர்கள் வேறு எங்கும் பிரசுரமாகாத தங்களின் சிறுகதைகளை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மலேசியாவின் நிலப்பரப்பில் வாழ்ந்து சென்ற அயலக எழுத்தாளர்களின் அனுபவங்களும் வரவேற்கப்படுகின்றன. இது ஒரு தனி பக்கமாக அநங்கத்தில் இடம்பெறும்.

அநங்கத்தில் மலேசிய படைப்பாளிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மலேசியாவின் தீவிர இலக்கியத்திற்கு “அநங்கம்” தனியொரு இடத்தினை ஓர் அடையாளமாக நிறுவும். நம் கதைகளுக்கான ஒரு களத்தை அச்சு இதழில் கொண்டு வருவோம். அதைப் பரவலான மீள்வாசிப்பிற்குக் கொண்டு செல்வது மிக அவசியமானது.

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: Tscu-inaimathi/ paranar/ Unicode-font

bala_barathi@hotmail.com
ananggam@hotmail.com


அநங்கம் ஆசிரியர்
கே.பாலமுருகன்

Monday, August 24, 2009

இம்மாத அநங்கத்தில் (புறக்கணிக்கப்பட்ட/மறக்கப்பட்ட கலைகளின் இதழாக)

சண்முகசிவா பக்கம்

மொழி பிரதானமாக ஒரு தொடர் பாடல் சாதனம் என்ற வகையில் மொழிமரபு நவீன தொடர் பாடலுக்கு இடையூறாக அமையும்போது அம்மரபு மாறவேண்டியிருக்குமே தவிர மரபைப் பேணுவதற்காக மொழி தன் தொடர்ப்பாடல் திறனை இழந்துவிடக்கூடாது. . .
விமர்சன நூல்களில், உரையாடல்களில், கருதரங்குகளில், நவீனத்துவம் என்ற சொல்லே மிகுதியாக பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது, இருந்தும் வருகிறது .. . மேலும். . .

நமது கலாச்சார ஆவணங்கள் கொண்டாடப்படவில்லை

நிச்சயமாக. பூஜாங் பள்ளத்தாக்கின் ஆவணங்கள் அங்குள்ள மக்களால் தோற்றுவிக்கப்பட்ட கலாச்சாரம் கிடையாது. அதனால்தான் வெகு சீக்கிரத்திலேயே நிராகரிக்கப்பட்டது. மக்களால் தோற்றுவிக்கப்பட்ட கலாச்சாரமாக இருந்திருந்தால், அது அழிந்து போகவோ நிராகரிக்கப்படவோ மறைக்கப்படவோ வாய்ப்பில்லை. பிற்காலத்தில் பூஜாங் பள்ளத்தாக்கில் குடிபெயர்ந்த இனத்தால் சண்டி ஆவணங்கள் நிராகரிப்பட்டுள்ளது. இதெல்லாம் கபீர் வழிபாடுகள் என அடையாளப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.. . . . மேலும் விரிவான கலந்துரையாடல்

மலேசிய தமிழ் இலக்கிய போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்-கே.பாலமுருகன்

சிறிதளவும் இலக்கிய நாட்டம் இல்லாதவர்களும் இலக்கிய ஆளுமை இல்லாதவர்களும் நடத்தும் இலக்கிய போட்டிகள் கூழிக்கு மாறடிக்கும் தன்மையைப் பெற்று அரசியல் குப்பைகளால் நிரம்பி வழியும் சகதியாகவே மாறிவிடும் என்பதில் சந்தேகமிருக்க வாய்ப்பில்லை. அது அந்த இயக்கத்தின் ஒரு செயல்பாடாகவோ அல்லது அவ்வாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவோ நடந்து முடிந்துவிடுகிறது.இதன் விளைவு குறித்தும் நோக்கம் குறித்தும் எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் தான் சார்ந்திருக்கும் இயக்கம் / பல்கலைக்கழகம் செயல்திட்டத்தின் முழுமையைப் பெறுவதற்குத் தொண்றாட்டும் கடமைக்குப் பங்காற்றும் சந்தா கட்டி தனது உறுப்பியத்தைப் புதுபித்துக் கொள்வது போல இலக்கிய போட்டி நடத்தி தனது பெயரைப் புகழைச் செயல்பாடுகளின் மீதுள்ள பிடிப்பை. . . .

ஏ.தேவராஜன் தலையங்கம்

திருவிழாவின் இரத ஊர்வலத்திற்குப் பின் நடந்தேறும் கச்சேரிகளில் நாடகமும் இடம்பெற்றிருந்தது. ஓரளவு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த அன்றைய தமிழாசிரியர்களிடம் நூல்களைப் பெற்று அவற்றிலுள்ளவற்றை நாடக வசனமாகத் தீட்டி அவற்றிற்கு உயிரூட்ட உள்ளூர் இளைஞர்களைப் பயிற்றுவித்துள்ளனர் அன்றைய கலைஞர்கள்.

பூர்வ குடி தோழர் சொன்னது- அ.விக்னேஷ்வரன்

காட்டில் இருந்த பூர்வக் குடி மக்களால் ஏன் அவர்களை எதிர்க முடியவில்லை? அவர்கள் இனத்தால் சிறுத்திருந்தார்களா? பலத்தால் வலுவிழந்து இருந்தார்களா? கொள்ளையர்களின் ஆயுதங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லையா? யார் இந்த கொள்ளையர் கூட்டம்?. . . மேலும்

கடைசி மணியின் அவலச் சத்தம்-கோ.புண்ணியவான்

எனக்கு முன்பே என் மனைவி சில அடிப்படை தமிழ்ப் பயிற்சிப் புத்தகங்களை அவளிடம்கொடுத்து பயிற்சி செய்வித்து வந்திருக்கிறாள். இந்தக்கதைப் புத்தகங்களைப் பார்த்தவள் சிவ பூஜைக்குள் கரடி நுழைந்துவிட்டதாய் திடுக்கிட்டு இதனை அபகரித்து “பரீட்சையில அவள் நல்ல மார்க்கு வாங்கணும், மொத இதெல்லாம் செய்து முடிக்கட்டும் பின்னால கதையப்படிக்கலாம்,” . . . .

பாட்டியின் இரகசிய சமையல் குறிப்புகள்-யோகி

“என் அம்முச்சி பட்டமிளகாயைக் காயவைத்து அம்மியில் அரைத்துக் கறிவைப்பார். அந்த மாதிரி குழம்புவகைகளை சாப்பிட என் பிள்ளைகளுக்கு கொடுத்து வைக்கல” என்பார் என் பாட்டி. குலதெய்வத்திற்குப் படையல் சமைக்கும் போது மூக்கையும் வாயையும் துணியால் கட்டி வாசனையை. . .

பாதுகாக்காத படைப்பு – சேர்த்து வைக்காத சொத்து-சிதனா

அப்பாவுக்கும் இரயில்வேயில் வேலை. குடியிருந்த ஜாலான் டிறவர்ஸில் வீட்டிற்கருகிலேயே இரயில்வே டிஸ்பன்சரி. பின்பக்க கதவைத் திறந்து கொண்டு, காலில் சிலிப்பரை மாட்டினால், மிஞ்சி போனால் மூன்று, அதிகமாக போனால் ஐந்து நிமிடத்தில் டிஸ்பன்சரி வாசலில் நிற்கலாம்.

“வாடா மல வத்துமல
வாடா போவோம் பத்துமல
பத்துமல மாதா பெரிய சக்தி- . . . .

சிறுகதை: புறா- க.ராஜம் ரஞ்சனி

புறாக்கள் தங்கள் விஜயத்தின் போது எச்சத்தைத் தவறி விட்டுச் செல்வது அவர்களைக் கோபத்திற்கு உள்ளாக்கியது. வீட்டின் முற்றம் புறாக்களால் அசுத்தமாவதை அவர்கள் கொஞ்சமும் விரும்பவில்லை. அந்தத் தருணங்களில் புறாக்கள் மீது நிறைய கோப வெடிகள் வெடித்து சிதறும்.

சிறுகதை : யார் அந்த சண்முகம்?- முனிஸ்வரன்

“செண்பகம், யார் இந்த சண்முகம்? கண்டவனோட சாமானெல்லாம் உன் பையில வச்சிருக்கயே? உனக்கும் இந்த சண்முகம்ன்றவனுக்கும் என்ன சம்மந்தம்?” என்று இறுக்கமான முகத்தைக் காட்டிக் கேட்டேன். . . .

மேலும் 8 கவிதைகள். . .

for detail and subcription of ananggam:
contact : bala_barathi@hotmail.com / ananggam@hotmail.com

Thursday, August 20, 2009

அநங்கம் மலேசிய இதழ் (ஆகஸ்ட்)


ஆகஸ்ட் அநங்கம் இதழில்


1.பாட்டியின் இரகசிய சமையல் குறிப்புகள் : யோகி

2. பூர்வ குடி தோழர் சொன்னார் - அ.விக்னேஷ்வரன்

3. கடைசி மணியின் அவலச் சத்தம் - கோ.புண்ணியவான்

4. மலேசிய தமிழ் இலக்கிய போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்- கே.பாலமுருகன்

5. சேர்த்து வைக்காத சொத்து - சிதனா
6.முரசு வளர்த்த இலக்கியம் - இராம.கண்னபிரான்
7. தலையங்கம் - தேவராஜன்
8. கோ.முனியாண்டி, சை.பீர்முகமது, பாண்டித்துரை , பா.அ.சிவம், தினேசுவரி, ரமேஷ்.டே கவிதைகள் மேலும். .
9. புறா: க.ராஜம் ரஞ்சனி சிறுகதை
10.இவர்களுடன் சில நிமிடங்கள் : சிங்கப்பூர் எழுத்தாளர்கள் (மாதங்கி - சித்ரா ரமேஷ்)
11. ஆதிகாலச் சீனப் பெண் கவிகளின் கவிதைகள் - ஜெயந்தி சங்கர்

12. முதல் அமர்விற்கும் இரண்டாம் அமர்விற்கும் இடைப்பட்ட தருணம்- மீராவாணி
13. சிறுகதை : யார் அந்த சண்முகம்?-முனிஸ்வரன்

13. ஆலயங்கள் ஆகம விதிகள் படி கட்டப்படுகின்றன - சிறப்பு கேள்வி பதில்
(சுவாமி பிரமானாந்த)
மேலும் பல. .
விரைவில். .
கே.பாலமுருகன்
இதழாசிரியர்

Tuesday, May 12, 2009

மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் - அநங்கம் மே 2009


அநங்கம் மே இதழில்:

பத்தி

1. நிர்வாணம் மட்டும் நவீனமல்ல (சை.பீர்முகமது)

2. ஒப்புதல் வாக்குமூலமாக இரண்டு பெண் குரல்கள் (கோ.புண்ணியவான்)

3. புத்தகப் பார்வை (காடு நாவல்) கே.பாலமுருகன்

4. வரையறை சம்பளம் யாருக்கு லாபம் (விக்னேஸ்வரன் அடைக்களம்)

5.பலகுரல் கலைஞனின் தனிமைக் குரல் (ஏ.தேவராஜன்)

6. மதிப்புரை: அநங்கம் பத்திகள் (இரா.கண்ணபிரான்)

7. கர்மா: மலேசிய திரைப்பட விமர்சனம் (செ.நவீன்)

8. திரும்பி பார்க்கும் சங்கடங்கள் (பொ.சந்தியாகு)

9.வேண்டும் ஒரு அகராதி (பாண்டித்துரை)

10. தமிழ்ப்பள்ளிகள் - பிரத்தியோக வகுப்புகள் : சாணக்கியமும் சவால்களும்

(கே.பாலமுருகன்)


சிறுகதை:

1. 2030-உம் இடைவெளிகள் 21உம் (முனிஸ்வரன் குமார்)

2. மானாவாரி மனிதர்கள் (சிதனா)

கவிதை:

1. தினேஸ்வரி கவிதைகள்

2. மீராவாணி கவிதை

3. அடிக்குரலெடுத்து கத்த வேண்டும் (சந்துரு)

4. ஒழுக்கம் (யோகி)

5. சிங்கப்பூர் சீனக்கவிதைகள் (தமிழில்: ஜெயந்தி சங்கர்)

6. பரதேசி விட்டுச் சென்ற கவிதைகள்-5 (ரமேஸ்.டே)

7. ப.மனிஜெகதீசன் கவிதைகள்

சிறப்பு பகுதிகள்

1. சந்துரு என்கிற கலைஞனின் ஓவிய ஆளுமை

2. கேள்வி பதில் (ஷோபா சக்தி)

3. மொழிப்பெயர்ப்பு அனுபவங்கள் பற்றி ஜெயந்தி சங்கர்

4.இவர்களுடன் சில நிமிடங்கள் (மா.சண்முக சிவா - கோ.புண்ணியவான்)

இதழாசிரியர்

கே.பாலமுருகன்

துணையாசிரியர்

ஏ.தேவராஜன்

ஆசிரியர் குழு

ப.மணிஜெகதீசன்

கோ.புண்ணியவான்

Tuesday, November 18, 2008

அநங்கம் மலேசிய தீவிர சிற்றிதழ்






அநங்கம்
மலேசிய தீவிர சிற்றிதழ்



மலேசிய ஆளுமைகளை எழுத்தாளர்களை வாசகர்களை இணைப்பது






ஆசிரியர்
கே.பாலமுருகன்






து.ஆசிரியர்
ஏ.தேவராஜன்






ஆசிரியர் குழு
ப.மணிஜெகதீஷ்
கோ.புண்ணியவான்
செ.நவீன்
மோ.கவிதா






ஆலோசகர்கள்
ம.நவீன்
மஹாத்மன்