Wednesday, December 8, 2010

மலாய் மொழிப்பெயர்ப்புக் கவிதை -2 Karuna (தமிழில் கே.பாலமுருகன்)

உன்னைப்போல உருவெடுத்த
இந்தப் பட்டாம்பூச்சியின் சிறகுகளாய்
ஓர் அமைதியான இரவில்
நான் மாறியிருந்தேன்.

இல்லாமலிருக்கும் நிலையிலேயே
நம் இல்லாமல் போகும் நாட்களை நோக்கி
தவம் கிடக்கிறேன்.
உன் வருகையைப் போல
உன் விடைப்பெறுதலும்
அதிசயமாக நிகழ்கிறது எனக்குள்.

எரிந்துவிட்ட உன் புகைப்படத்தின்
சாம்பல்களில்
உன் பொய்யான முகமும்
நான் எதிர்பார்க்கும் ஒரு செய்தியும்
ஒட்டிக்கிடக்கின்றன.

காலம் நகர்த்த முடியாத
ஒரு கெட்டியான இருளில்
கருகி விழுகின்றன
என் சிறகுகளும்
இந்தப் பட்டாம்பூச்சியும்.
இதுவும் ஒரு அதிசயம் போல.

மலாயில்: Karuna
தமிழில்: கே.பாலமுருகன்