Monday, December 12, 2011

இந்தியப் பயணம் – அறிமுகங்கள் (1)



இலக்கியப் பயணம் எனச் சொல்லிவிட்டுச் சென்றதெல்லாம் ஒரு பாவனைத்தான். இங்கிருந்துதான் ஆண்டுதோறும் பல ‘எழுத்தாளர்கள்’ இலக்கியப் பயணம் செல்கிறார்களே. அவர்கள் போதாதா மலேசிய இலக்கியத்தைக் கடல் கடந்து சென்று வளர்க்க? கவிஞர் செல்மா அவர்களுடன் பேசித் தீர்மானிக்கப்பட்ட பயணம் இது. அங்குள்ள எழுத்தாளர் நண்பர்களுடன் ஒரு நட்பை ஏற்படுத்திக்கொள்வதே முதண்மையான நோக்கமாக இருந்தது. அதன்படி சென்ற முதல்நாள் முதல் இறுதிநாள் வரை பல சமயங்களில் கவிஞர் செல்மா பிரியதர்ஷனும் யவனிகாவும் உடன் இருந்து என்னுடன் பயணித்தார்கள்.