Wednesday, December 14, 2011

இந்தியப் பயணம் – பரப்பரப்பும் அமைதியும் (2)


3 மணிநேரம் 30 நிமிடத்திற்குப் பிறகு சென்னை விமான நிலையம் வந்திறங்கியப் போது பயணக் களைப்பை உணர முடியவில்லை. உடலுக்கு ஒரு தயாரிப்பு நிலை இருக்கிறது. நம்முடைய உடல் மீதான பலவகை கற்பிதங்களையும் கடந்து உடல் தன்னை உற்பத்தி செய்து கொள்கிறது. சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைகளும் பாதுகாப்பும் கொஞ்சம் கெடுபிடியாகவே இருந்தது. நான் அங்கு வந்து இறங்கியத் தினம் கனிமொழி விடுதலையாகி அநேகமாக இங்கு வரக்கூடும் என ஷோபா சக்தி சொல்லியிருந்தார். அந்தப் பரப்பரப்பை அதனுடன் தொடர்புப்படுத்திப் புரிந்துகொண்டேன். ஆனால் கடைசி வரை கனிமொழியைப் பார்க்க முடியவில்லை.