Saturday, November 19, 2011

கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”

 சமீபத்தில் கோ.புண்ணியவான் தன்னுடைய மூன்றாவது சிறுகதை தொகுப்பைப் பிரசுரித்திருந்தார். அதன் புத்தக வெளியீடு சுங்கைப்பட்டாணியில் 'கார்னிவல்' எனும் மண்டபத்தில் நடந்தேறியது. மலேசிய தமிழ் இலக்கிய சூழலில் வெகுகாலம் எழுதிக் கொண்டிருப்பவர் கோ.புண்ணியவான். 2005 ஆம் ஆண்டில் கல்லூரியில் பயிலும்போது அவருடைய சிறை நூலின் வழி கதைகளைப் படித்திருக்கிறேன். மேலும் 2008ஆம் ஆண்டு தொடங்கி அவருடைய சிறுகதை வளர்ச்சியையும் கவனித்து வருகிறேன். 2009ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய இதழான 'உயிர் எழுத்து' இதழில் அவர் சிறுகதை எழுதத் துவங்கிய பிறகு பெரும் மாற்றங்களை அடையாளம் காண முடிந்தன. மேலும் பேரவை கதை போட்டியில் மட்டுமே 12 முறைக்கு மேல் தன் சிறுகதை திறனைத் தொடர்ந்து பரிசோதித்து வெற்றியும் பெற்று வரும் ஒரே எழுத்தாளர். 

‘எதிர்வினைகள்’ எனும் அவருடைய சமீபத்திய சிறுகதை தொகுப்பில் மொத்தம் 17 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.