Tuesday, March 27, 2012

மலேசிய எழுத்தாளர் சங்கமும் தேசிய நூலகமும்- புதுமை/புதிய துவக்கம்


25 மார்ச் கோலாலம்பூரிலுள்ள தேசிய நூலகத்தில் என் நாவல்’ நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ வெளியீடு கண்டது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் 2007ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற இரு நாவல்களையும் புத்தகமாகப் பிரசுரித்து அதனைச் சமீபத்தில் தேசிய நூலகத்தின் ஆதரவுடன் கோலாலம்பூரில் வெளியீடு செய்தது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு புதிய துவக்கமாக நிகழ்ச்சி அரசின் ஆதரவுடன் நடந்தேறியது நல்ல முயற்சியாகும். நாவல் வெளியீட்டது மிகத் தாதமாக இருந்தாலும் நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் திட்டமிட்டு முன்னெடுத்திருக்கிறார்கள்.

நாவல் வெளியீட்டு விழாவில் எனக்கு மாலையும் பொன்னாடையும் வேண்டாம் என மறுத்திருந்தேன். ஒரு படைப்பாளியின் உணர்வுக்கும் தேவைக்கும் மதிப்பளித்து அவர்கள் என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கும் செயலாகும். மேடை கலாச்சாரம்/மேடை அலங்காரங்கள் குறித்து எனக்கிருக்கும் எதிர்வினை சார்ந்தே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். ஒரு படைப்பாளிக்கு எது தேவை எது தேவை இல்லை எனத் தீர்மானிக்கும் உரிமையும் சுதந்திரமும் அவனுக்கு இருக்கின்றன. ஆக படைப்பாளியாவது இந்தச் சமூகத்தில் உரிமையுடனும் சுதந்திரடனும் செயல்பட இந்தச் சமூகம் அனுமதிக்க வேண்டும். 

இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்களை இந்த நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியுடன் இணைத்திருக்கிறார்கள். அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களான சுரேன், சத்திஸ்வரி, லோகேஸ்வரி மற்றும் சாந்தி அன்று வெளியீடு கண்ட நாவல்களைத் திறனாய்வு செய்து படைத்திருந்தார்கள். இலக்கியத்தை நோக்கி மாணவர்களை ஒரு பொது மேடையில் இணைப்பது என்பது பாராட்டத்தக்க செயல். அவர்கள் விமர்சனம் திறனாய்வு என்பதெல்லாவற்றையும் கல்விக்கூடங்களிலேயே