Monday, March 14, 2011

பினாங்கு நகரின் மாலையில் -1


அன்று மதியம் எழுத்தாளர் தேவராஜனிடமிருந்து அழைப்பு வந்தது. பினாங்கு மாநிலத்திற்கு பணித்தொடர்பான சந்திப்புக்காக அவர், பச்சைபாலன், மூர்த்தி(மலேசியத் தேர்வு வாரிய அதிகாரி) அவர்களும் அங்கு வந்திருப்பதாகக் கூறினார். உடனே அவர்களைச் சந்தித்து உரையாடலாம் என முடிவெடுத்துவிட்டு, மாலையே பினாங்கிற்குக் கிளம்பினேன். மூர்த்தி எப்பொழுதும் ஒரு சமக்காலப் பிரச்சனையின் மீதான ஆழமான புரிதலையும் புதிய சிந்தனையையும் கொண்டிருக்கக்கூடிய ஒரு சிந்தனையாளர். அவருடன் செலவழிக்கப்படும் ஒவ்வொரு கணமும் படைப்பாளிகளுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்பதில் எனக்கு எப்பொழுதும் நம்பிக்கை உண்டு.