Tuesday, March 1, 2011

குறும்பட விமர்சனம்: 'வாழ்க்கையை உரையாடுதல்' - சஞ்சய் குமார் பெருமாளின் ஜகாட் (Jagat)

“கடவுள் நம் குற்றங்களை மன்னிக்கலாம் - ஆனால்
மனிதர்கள் உருவாக்கிய நியதிகள் அவ்வாறு மன்னிப்பதில்லை”
- வில்லியம் ஜேம்ஸ்

ஒரு ஒதுக்குப்புறமான உணவகம். அரை இருள் எங்கும் பரவியிருக்கிறது. எந்தப் போலியான ஒப்பனையும் இல்லாத உண்மையான இரு மனிதர்கள். மது அருந்தி கொண்டே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உரையாடலிலிருந்து காட்சிகள் இன்னொரு வாழ்க்கைக்குள் இழுத்துக் கொண்டு போகின்றன. இன்னும் சொல்ல‌ப்போனால் இது உரையாட‌ல் வ‌ழியே வாழ்வை அறிமுக‌ப்ப‌டுத்தும் குறும்ப‌ட‌ம் வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு மிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து ந‌க‌ர்த்த‌ப்ப‌ட்டுள்ள‌து.

1) தனியனின் உரையாடல்

எது குற்றம் என்பதைப் புரிந்துகொள்வதைவிட யார் அதைச் செய்தார்கள் என அடையாளம் காட்டுவதிலும் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதிலும் பழக்கமாகிவிட்ட சமூகத்தின் நியதிகளுக்கு முன், வைக்கப்படும் ஓர் உரையாடல்தான் சஞ்சய் பெருமாளின் இந்த “ஜகாட்”