Wednesday, May 6, 2015

செம்பருத்தி.காம் ஏற்பாட்டில் எழுத்தாளர் கே.பாலமுருகனின் இரண்டு நாவல்கள் வெளியீடு

ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ & மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்



கடந்த 12 வருடமாகத் தீவிரமாக எழுதி வரும் நவீன எழுத்தாளரும் தற்கால சமூக வாழ்க்கைச் சூழல்களை புதிய உத்திகளிலும், புதிய முறைகளிலும் சொல்லி வரும் கவனிக்கத்தகுந்த கரிகாற்சோழன் 2011’ விருதை வென்ற மலேசியாவின் இளம் நாவலாசிரியரான கடாரத்தைச் சேர்ந்தச் கே.பாலமுருகனின் ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்எனும் நாவலும், சிறுவர் மர்மத் தொடர் நாவலின் இரண்டாம் பாகமான மோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும் வெளியீடு காணவிருக்கின்றன. அந்த நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி, 2.00மணிக்கு விஸ்மா துன் சம்பந்தன், தான்சிறி சோமா அரங்கத்தில் மைஸ்கீல் அறவாறியத்தின் இயக்குனரும் சமூக சேவையாளருமான திரு.சி.பசுபதி அவர்களின் தலைமையில் வெளியீடு காணவிருக்கின்றன.




மேலும், வழக்கறிஞரும் கட்டுரையாளருமான திரு.கா.ஆறுமுகம் அவர்களின் வாழ்த்துரையும், நாடறிந்த மூத்த எழுத்தாளர் டாக்டர் மா.சண்முகசிவா அவர்களின் மலேசிய நாவல்கள் தொடர்பான இலக்கிய உரையும், எழுத்தாளர் .பச்சைபாலன், யோகி, இலக்கியகத்தைச் சேர்ந்த திரு.பி.எம் மூர்த்தி அவர்களின் நாவல் விமர்சனங்களும் இடம் பெறவிருக்கின்றன. 1980களுக்குப் பிறகு தோட்டத்துண்டாடல்கள் காரணமாகவும் வேலை இழப்புகள் காரணமாகவும் தோட்டங்களைவிட்டு ஓடிவந்து கம்பங்களிலும் ஆற்றோரங்களிலும் அடுக்குமாடிகளிலும் வாழ்ந்த இந்தியர்களின் வாழ்க்கையில் நுழைந்த வன்முறையின் வரலாற்றை பேசும் கே.பாலமுருகனின் இந்த நாவல் சமூகத்தில் நாம் கண்டுக்கொள்ளாத குற்றவாளிகளின் உருவாக்கங்களைக் கேள்வி எழுப்புகிறது. அதுபோன்ற இந்திய சமூகத்தின் இருண்ட வரலாற்றைப் பேசும் இந்த நாவலின் வெளியீட்டுக்கு வருகையளித்து ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் எனும் மலேசியாவின் முதல் சிறுவர் மர்மத் தொடர் நாவலின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்துமோகினி மலையின் இரகசியமும் பாழடைந்த மாளிகையும்என்கிற மலேசிய இந்திய சிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல் இரண்டாம் பாகமும் இந்த நூல் வெளியீட்டில் வெளியீடு காணவிருப்பதால் இலக்கியவாதிகள், தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினர்களையும் நாவல்கள் வெளியீட்டுக்கு வருகையளித்து ஆதரவு நல்கும்படி எழுத்தாளர் கே.பாலமுருகன் கேட்டுக்கொண்டார். மேல் விவரங்களுக்குத் தொடர்புக்கொள்ளவும். கே.பாலமுருகன் 0164806241.