Wednesday, January 6, 2010

சமூகத்தை நோக்கிய புதிய மதிப்பீடுகளுடன் – அநங்கம் இதழ் 06


அநங்கம் சிறுகதை சிறப்பிதழ் (6 ஆவது இதழ்) குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு வர முடியாமல் போனதற்காக வருந்துகிறேன். அச்சிற்குச் சென்ற இடத்தில் பக்கங்கள் அதிகமாக இருப்பதால் கொஞ்சம் சிக்கல் நேர்ந்துவிட்டது. ஆகையால் மீள் வடிவமைப்பு செய்து மீண்டும் பிரசுரிக்க நேரிட்டது. மேலும் பக்க அளவைக் குறைப்பதற்காக சிறுகதை சிறப்பிதழுக்கு வந்திருந்த சில கதைகளை அடுத்த இதழுக்காகத் தவிர்க்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

அடுத்த அநங்கம் இதழ் மார்ச் 2010-இல் பிரசுரம் ஆகும். மேலும் அநங்கம் இணைய இதழாகவும் மாதந்தோறும் மலரவிருப்பதால், இனி பிரசுரம் குறித்து பிரச்சனை இருக்காது. ஆகையால் படைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை அநங்கம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ( ananggam@hotmail.com)

ஓவியம்: ஓவியர் சந்துரு

அநங்கம் சிறுகதை சிறப்பிதழ்:

1. கோபாலும் அவனைச்சுற்றிப் பின்னப்பட்டுள்ள வலைகளும் –கோ.புண்ணியவான்

அந்தக்கேள்வியைச் மிகச்சாதாரணமாக அவன் எடுத்துக்கொண்டது எனக்கு வியப்பை ஊட்டியது. அவனுடைய வியாதியை அவன் புரிந்து ஏற்றுக்கொண்டான் என்பதே பெரிய விஷயமாக எனக்குப்பட்டது. என் கேள்விக்கு எதிராக அவன் தன் பலவீனத்தையோ, தாழ்வு மனப்பான்மையையோ காட்டாதது எனக்குக் கொஞ்சம் ஆறுதலை உண்டு பண்ணியது. அதற்கு அவன் கொடுத்த பதிலிலிருந்து , நான் காட்டிய கரிசனத்தை அவன் உள்ளுணர்ந்து கொண்டான் என்பதே எனக்கு உவப்பாகவும் இருந்தது.

2. கோல பெர்ணம் எஸ்டேட்டிலிருந்து கோலாலம்பூர் மாநகர்
வரை - முனிஸ்வரன்குமார்

வயசாவுதுப்பா ஒங்களுக்குன்னு சொல்லி இந்த பய என்னிய இந்த சண்டாள எடத்துக்குக் கூட்டியாந்துபுட்டான். எனக்கு அறவே புடிக்கல இந்த டவுன் பொழப்புன்னு சொன்னாலும் கேக்க மாட்றான். இங்க வந்து தள்ளிட்டான்.
ஐயோ, மணியாவுது! இன்னும் பச்ச லைட்டு வந்த பாட்டக்காணம். இந்த ட்ராபிக் எழவக் கண்டுபிச்சவன் எவன்னு . . .

3. பெண்மையை மறுதலித்தல்- சிதனா

“பத்மாவ சுருக்கி பேட்னு ஆக்கிக்கிச்சி! இது சின்னப் பிள்ளையா இருந்தப்பவே அப்பா அம்மா ரெண்டு பேரும் செத்துப் போயிட்டாங்களாம்! யாரோ சொந்தக்காரங்க எடுத்து வளர்த்திருக்காங்க! வளர, வளர, அந்த சொந்தக்கார ஆளுல இருந்து மத்த ஆம்பளைங்களும் இந்தப் பொண்ண வேற மாதிரி ‘டிரிட்’ பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம்! அதுக்குப் பெறகுதான் இந்தப் பொண்ணு, ஆம்பள. . .

4. குறுக்கெழுத்து- க.ராஜம்

முந்தைய பொழுதுகளில் முயன்ற குறுக்கெழுத்தில் ஏதாவதொரு விடையைக் கண்டுபிடிக்க இயலாமல் போனால் அத்தேடல் மறுநாள் வேலையின் பொழுது அவளின் எண்ணத்தில் கறுப்பு வெள்ளை கட்டங்களைப் போட்டிருக்கும். வேலையில் முழ்கியிருந்தவாறே மனதில் உண்டாகியிருக்கும் கட்டங்களுக்கு அவளின் மூளை விடைகளைப் . . .

5. தூண்டில் – எம்.ரிஷான் செரிப்

சட்டைகளைக் கழற்றி கரைக்கு எறிந்துவிட்டு, நீண்ட நேரமாக அந்த நாற்றம் பிடித்த அழுக்கு நீருக்குள் நீந்தி நீந்தி மீன்களைக் கைகளால் பிடிக்கமுயற்சித்தோம். அவை எங்களுக்குப் போக்குக் காட்டி ஏமாற்றிக் கொண்டே இருந்தன. மீண்டும் நித்திதான் இன்னுமொரு யோசனையைச் சொன்னான். தண்ணீரையெல்லாம் கரைக்கு இரைத்து வற்றச் செய்தால் நீர் மட்டம் குறைந்து இலகுவாக மீன்களைப் பிடிக்கலாம் எனச் சொல்லியபடியே . . .

6. அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே - மணியம் பேருந்துகளும் – கே.பாலமுருகன்

அப்பே பேருந்தில் ஏறும் நண்பர்கள் என்னைவிட 15 நிமிடத்திற்கு முன்பாகவே எழுந்திருக்க வேண்டும். அது வழக்கமாக நிகழும் ஒரு கட்டாயம். சரியாக 6.15க்கு கம்பத்தின் மேட்டுப் பாதையில் அப்பே பேருந்து வந்து நிற்கும். அதிகாலை இரைச்சலை ஏற்படுத்துவதற்காகவே ஒரு மிகப்பெரிய சீன மாணவர்களின் கூட்டம் அங்கு இருக்கிறது. 8.00 மணிக்கு. .

7. நாளை காலை 9க்கு இறந்துவிடுவேன்- சு.கஸ்தூரி

விரிவுரை நேரத்தில் தமயந்தியின் உடல் மட்டுமே அங்கிருந்தது. தான் நாளை 9am க்கு மணிக்கு இறந்துவிட போகிறாள் என்பதை முழுதாக நம்பிவிட்ட நிலையில் இருந்தாள். மரணம் இவ்வளவு விரைவில் வந்துவிடும் என்று சற்றும் எதிர்பாராதவாளாய் முடங்கிப் போயிருந்தாள். ஆமாம். . .

8. யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்- ஜெயந்தி சங்கர்

நாங்கள் இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு தான் சந்தித்துக் கொண்டோம். பென்ச்சூ உயர்நிலை மூன்று மற்றும் நான்கை வேறொரு பள்ளியில் படித்துவிட்டு யீஷுன் தொடக்கக் கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தாள். வெவ்வேறு பாடங்கள் எடுத்திருந்ததால் அவள் வேறு வகுப்பிலும் நான் வேறு வகுப்பிலுமிருந்தோம்.

9. 6- மாதங்கி

இயந்திரம் இருப்பதாலோ என்னவோ, ஒவ்வொருவரும், ஜிம் செல்லும் உடை, நடைபயிற்சி உடை, வீட்டு உடை அலுவலக உடை, போததற்கு இரவு உடை என்று அவரவர் தேவைக்கேற்ப அணியும் ஒவ்வொருவரின் துணிகளும் மலைபோல் குவிகின்றன. கொனையில் உள்ள வீடு என்பதால், காலாக்கம்புகள் சமையலறையில் மட்டுமன்றி வாயிலில் உள்ளதால், உலர்த்த இடமிருக்கிறது.


பத்திகள்:

1. பிதுக்கித் தள்ளப்பட்ட மாணவனும் அவனது கதை நுழைவும்- ஏ.தேவராஜன்

இடைநிலைப்பள்ளி வாழ்க்கை முடிந்து ஒரு பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்பு ‘ஏ’ வாங்கிய மாணவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரமே தெரியாத அளவுக்குக் காணாமல் போக , பையப் பைய தங்களுக்கான இலக்கிய அடையாளத்தை நிறுவுவார்கள் பிதுக்கி வெளியில் தள்ளப்பட்ட மாணவர்கள். பின் கூறப்பட்ட

2. துறைமுகம் நாவல் விமர்சனம்- அ.விக்னேஸ்வரன்

மதம் எனும் போர்வையால் மனிதனுள் ஏற்படும் பிம்பங்கள் பல. வித விதமான புரிதல்கள். இதன் பிரள்வுகளே மூட நம்பிக்கைகள் என அறியப்படுகிறது. படிப்பறிவு இல்லாத, மதம் எனும் புரிதலில் பயமும், தெளிவற்ற சிந்தனையும். .

3. புத்திமதிகளை மட்டும் உற்பத்திக்கும் ஆற்றலா இலக்கியம்
என்பது? – கே.பாலமுருகன்

சமூகத்தில் நிகழும் குற்றங்களையும் குற்றவாளிகளையும் அடையாளங்கண்டு அவர்களுக்குப் போதனைகளை உற்பதிக்கும் ஆற்றலை இலக்கியம் எனக் கொண்டாடும் சிந்தனை மாறி, குற்றங்களின் அடிவேருக்குச் சென்று அதனை புதிய மதிப்பீடுகளுடன் விவாதிக்கும் ஆற்றலே தரமான இலக்கியம் என்று அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

மேலும் ந.பச்சைபாலன், தினேசுவரி, இளைய அப்துல்லாஹ், பா.அ.சிவம் கவிதைகள்

இதழாசிரியர்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி