
புது இயக்குனர் அன்பழகன் தன் முதல் படத்திலேயே கல்வியையும் கல்வி நிறுவனத்தையும் விமர்சித்துப் படம் எடுத்திருப்பது ஆரோக்கியமான தொடக்கமாகவே கருதுகிறேன். தன் முதல் படங்களில் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கப் பொதுவாக கமர்சியல்தனங்களையே நாடுவார்கள். அன்பழகன் தனக்கிருந்த ஒரு மாற்றுக் கருத்தைப் படத்தின்வழி சமூகத்திடம் பகிர்ந்துள்ளார். இதனாலேயே அவரை 2012ஆம் ஆண்டின் கவனிக்கத்தக்க இயக்குனர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.
சமீபத்தில் இந்தித் திரை உலகில் தொடங்கிய அமீர்கானின் ‘தாரே சமீன் பார்’ படத்தின் மூலம் கல்வி குறித்து ஒரு பிரக்ஞை சினிமா உலகில் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம். அதனையடுத்து, 3 இடியட்ஸ்(இந்தி), நண்பன்(தமிழ்), டோனி, இப்பொழுது சாட்டை, ஹரிதாஸ் என இப்பட்டியல் நீள்கிறது. தங்கர் பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ படம் கல்வியை நோக்கிய விமர்சனம் கிடையாது. அப்படம் தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை எக்கத்தொனியில் வெளிப்படுத்தியது.
சமீபத்தில் இந்தித் திரை உலகில் தொடங்கிய அமீர்கானின் ‘தாரே சமீன் பார்’ படத்தின் மூலம் கல்வி குறித்து ஒரு பிரக்ஞை சினிமா உலகில் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம். அதனையடுத்து, 3 இடியட்ஸ்(இந்தி), நண்பன்(தமிழ்), டோனி, இப்பொழுது சாட்டை, ஹரிதாஸ் என இப்பட்டியல் நீள்கிறது. தங்கர் பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ படம் கல்வியை நோக்கிய விமர்சனம் கிடையாது. அப்படம் தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை எக்கத்தொனியில் வெளிப்படுத்தியது.