Sunday, October 2, 2011

சிறுகதை: ஒரு மேசை உரையாடல்







“வா மணி!”

“கேங் சண்டன்னா சொல்லு... எறங்கிருவோம்... இப்படிப் பேச்சுக்குக் கூப்டறது எனக்குச் சரியா படல...”

“ரிலேக் பண்ணு மணி... முனியாண்டி கேங்ல சேர்ந்தோனே துள்ளற பாரு... முன்ன எங்க இருந்த நீ? கொஞ்சம் தெரிஞ்சி பேசு...”

“பாங்... இந்தப் பழைய கதைலாம் பேசத்தான் கூப்டிங்களா?

“இரு மணி. ஒரு கருப்பு பீரு சொல்லட்டா? டென்ஷன் ஆகாத... சண்டைக்கு வரச் சொல்லல... ஆப்பே ஹீத்தாம் சத்து”

“நான் முனியாண்டி, தியாகு... இப்படி யார் கேங்லயும் இருப்பன். என் மனசுக்கு யாருகிட்ட இருக்கணும்னு சொல்லும்...”

“ஆமாம் மணி. நீ யாரு... செம்ம ஜாமான்காரன்...”

“இப்ப என்னா குத்திக் காட்டறீங்களா? இந்தக் கஞ்சா தொழிலுக்கு யாரு என்னை இழுத்துக்கிட்டு வந்தது?”

“சரிடா... மணி. நாந்தான். ஆனா, கத்துக்கொடுத்த குருவுக்கே நீ செய்யற பாரு...”

“தொழில்னா எங்க பூர முடியுமா அங்க பூந்துகிட்டுப் போக வேண்டியதுதான்... இதுல குரு கிருலாம் இல்ல...”

“ஓ... அப்படியா மணி? ஜாலான் காசுலாம் வாங்கறீயா?”

“தோ பாருங்க பாங். இப்ப நான் உங்க கேங்ல இல்ல. சும்மா என்ன ஏன் கேள்விக் கேக்குறீங்க? நான் எங்க காசு வாங்கனா என்ன?”

“எல்லா மறந்துட்டியா மணி? உன் தங்கச்சி சரசு எப்படி இருக்கு? இன்னும் ஜாமான் விக்குதா?”

“பாங்... அது என் இஷ்டம். என் தங்கச்சி. எங்க எப்படி வைக்கணும்னு எனக்குத் தெரியும். நீங்க நாட்டாம செஞ்சிக்கிட்டு இருக்காதீங்க...”

“மணி. ரொம்ப தப்பு பண்ற... நம்ம கேங்ல ஒரு சட்டம் இருக்கு. பொம்பளைங்கள உள்ள இழுக்கக்கூடாது. அவுங்கள தொந்தரவு செய்யக்கூடாது... தெரியும்ல?”

“பாங்... நான் உங்க கேங் இல்ல. எதுக்கு உங்க சட்டத்த நான் மதிக்கணும். வெளாட்டுக் காட்டிக்கிட்டு இருக்காதீங்க... எல்லா கஞ்சா கைகங்கத்தான்... அப்புறம் என்ன சட்டம் திட்டம்?”

“மணி... நல்லா பேசறடா. ஜாலான் காசு, பொம்பள அது சரி நான் உன்ன ஏன் கூப்டன்னா... நம்ம பையன் ஒருத்தன் பாப்ல ஜாமான் தள்ளிக்கிட்டு இருக்கும்போது கை வச்சிட்டியாம்... நீ அப்படி ஏதும் செய்யலைன்னா சொல்லிட்டுப் போய்க்கிட்டே இரு...”

“ஆமாம்... கை வச்சன். அவன் என்னா என்ன பாத்து துரோகின்னு சொல்றான். நான் உன்கிட்ட சொல்லிட்டுத்தானே வெளியானன். எங்க லாபம் அதிகம் இருக்கோ அங்க போறதுதானே சரி? அப்புறம் அவனுக்குப் பேச்சு ஓடுது?”

மணி... அவன் உன்ன விட பல வருசம் கேங்ல நேர்மையா இருக்கறவன். அவனுக்குக் கெட்கற உரிமை இருக்கு... நீ அவனை அங்க வச்சி அடிச்சது தப்பு மணி... அது பிசனஸ் பண்ற இடம்...”

“என்னா பாங் பிசினஸ்? ஏதோ அரிசி வியாபாரம் பண்ற மாதிரி பில்டாப்பு கொடுக்குறீங்க... கட்டி விக்கற நாய்க்கு என்ன எத்திக்ஸ்’?”

இரண்டு துப்பாக்கி சூடுகள் அக்கடையில் வெடிக்கிறது. அதுவரை மாற்று உடையில் பக்கத்து மேசையில் அமர்ந்திருந்த ஓப்ஸ் பெர்சே குழுவின் தலைவர் மாரிமுத்து கடையிலிருந்து வெளியே வந்து மேலதிகாரிக்குத் தொடர்புக் கொண்டார்.

-      கே.பாலமுருகன்