Sunday, March 18, 2012

கழுகு: திரைப்பார்வை -பிணம் தூக்கிகள்


மலைக்கிராமம் கதைக்களம். மலை உச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் பிணங்களைப் பள்ளத்தாக்கில் இறங்கி  சேகரித்து வரும் தொழில் செய்யும் நான்கு நண்பர்கள் பற்றிய கதை இது. வியக்க வைத்த கதை தேர்வு. படத்தின் துவக்கக் காட்சியில் காதல் ஜோடி மலையிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். இருவரின் குடும்பத்தார்களிடமும் பிணத்தை எடுத்து வரப் பேரம் பேசிவிட்டு நால்வரும் மூன்று நாள் மலைக்கு அடியில் 4000 மீட்டர் பயணம் செய்கிறார்கள். ஆரம்பமே படத்தின் மீது ஆர்வத்தைக் கூட்டியது. வாழ்க்கையில் விரக்தியுற்ரவர்கள், காதலில் தோல்வியுற்றவர்கள் மலை மேலேயிருந்து தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது மட்டுமே நாம் அறிந்த மிக அடிப்படையான விசயம். ஆனால் அப்படிக் கீழே விழுந்து உடல் சிதறி போயோ அல்லது தண்ணீரில் சிக்கித் தொலைந்தவர்களையோ தேடிக் கண்டுப்பிடித்து வருபவர்களின் வாழ்வை யாரும் இதுவரை கவனப்படுத்தியது கிடையாது. அந்த வகையில் இதுவொரு முக்கியமான படம்.