Friday, March 30, 2012

சிறுகதை: மேம்பாலம்


துரை மாமா வேலை முடிந்து வீடுவரை வந்திருந்தார். கதவைத் திறந்ததும் எல்லோரும் திக் பிரமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தார். தோளில் மாட்டியிருந்த பையை மேசையின் மீது வைத்துவிட்டு குவளையைக் கையில் எடுத்த கனம், தடார் தடார் என அதிர்வு. 

“கேக்குதா? லோரி..”

மயக்கமே வருவது போல ஆகிவிட்டது. மாமா குவளையில் நீரை நிரப்பி ஒரு மிடறில் தொண்டையை நனைத்தார். அடுத்ததாக இன்னொரு லோரி எப்பொழுது வேண்டுமென்றாலும் கடந்து போகலாம். வீடு ஓர் அதிர்வுக்காகத் தவம் கிடந்தது. அது மிகக் கொடூரமான அதிர்வு. கூரையும் சுவரும் இடிந்து சரிந்துவிடுவது போன்ற ஒரு கனநேர பயம். நெடுஞ்சாலை சிறுக சிறுக விரிந்து பாதி நிலத்தை விழுங்கிவிட்டாயிற்று. மூசாங் கம்பம் தொடங்கும் இடத்தில் உடும்புக்கார தாத்தா வீடு கட்டும்போது இதைப் பற்றியெல்லாம் யோசித்திருக்க மாட்டார். காடு பிளக்கப்பட்டு இங்கொரு நெடுஞ்சாலை வந்து வீடுகளுக்கு மேல்வரை நீளும் என முந்தைய சந்ததிகளுக்குத் தெரிந்திருக்காது.

Tuesday, March 27, 2012

மலேசிய எழுத்தாளர் சங்கமும் தேசிய நூலகமும்- புதுமை/புதிய துவக்கம்


25 மார்ச் கோலாலம்பூரிலுள்ள தேசிய நூலகத்தில் என் நாவல்’ நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ வெளியீடு கண்டது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் 2007ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற இரு நாவல்களையும் புத்தகமாகப் பிரசுரித்து அதனைச் சமீபத்தில் தேசிய நூலகத்தின் ஆதரவுடன் கோலாலம்பூரில் வெளியீடு செய்தது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு புதிய துவக்கமாக நிகழ்ச்சி அரசின் ஆதரவுடன் நடந்தேறியது நல்ல முயற்சியாகும். நாவல் வெளியீட்டது மிகத் தாதமாக இருந்தாலும் நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் திட்டமிட்டு முன்னெடுத்திருக்கிறார்கள்.

நாவல் வெளியீட்டு விழாவில் எனக்கு மாலையும் பொன்னாடையும் வேண்டாம் என மறுத்திருந்தேன். ஒரு படைப்பாளியின் உணர்வுக்கும் தேவைக்கும் மதிப்பளித்து அவர்கள் என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கும் செயலாகும். மேடை கலாச்சாரம்/மேடை அலங்காரங்கள் குறித்து எனக்கிருக்கும் எதிர்வினை சார்ந்தே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். ஒரு படைப்பாளிக்கு எது தேவை எது தேவை இல்லை எனத் தீர்மானிக்கும் உரிமையும் சுதந்திரமும் அவனுக்கு இருக்கின்றன. ஆக படைப்பாளியாவது இந்தச் சமூகத்தில் உரிமையுடனும் சுதந்திரடனும் செயல்பட இந்தச் சமூகம் அனுமதிக்க வேண்டும். 

இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்களை இந்த நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியுடன் இணைத்திருக்கிறார்கள். அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களான சுரேன், சத்திஸ்வரி, லோகேஸ்வரி மற்றும் சாந்தி அன்று வெளியீடு கண்ட நாவல்களைத் திறனாய்வு செய்து படைத்திருந்தார்கள். இலக்கியத்தை நோக்கி மாணவர்களை ஒரு பொது மேடையில் இணைப்பது என்பது பாராட்டத்தக்க செயல். அவர்கள் விமர்சனம் திறனாய்வு என்பதெல்லாவற்றையும் கல்விக்கூடங்களிலேயே

Saturday, March 24, 2012

நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – நாவல் வெளியீடு

i invite all friends to my novel launching of Karikalan award winner "Nagarnthu kondirukkum vaasalgal"

event: 25th march 2012 (sunday)
          after 1pm at Perpustakaan Negara,
          Jalan Tun Razak, Kuala Lumpur

thanks, regards
K.Balamurugan
0164806241

Sunday, March 18, 2012

கழுகு: திரைப்பார்வை -பிணம் தூக்கிகள்


மலைக்கிராமம் கதைக்களம். மலை உச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் பிணங்களைப் பள்ளத்தாக்கில் இறங்கி  சேகரித்து வரும் தொழில் செய்யும் நான்கு நண்பர்கள் பற்றிய கதை இது. வியக்க வைத்த கதை தேர்வு. படத்தின் துவக்கக் காட்சியில் காதல் ஜோடி மலையிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். இருவரின் குடும்பத்தார்களிடமும் பிணத்தை எடுத்து வரப் பேரம் பேசிவிட்டு நால்வரும் மூன்று நாள் மலைக்கு அடியில் 4000 மீட்டர் பயணம் செய்கிறார்கள். ஆரம்பமே படத்தின் மீது ஆர்வத்தைக் கூட்டியது. வாழ்க்கையில் விரக்தியுற்ரவர்கள், காதலில் தோல்வியுற்றவர்கள் மலை மேலேயிருந்து தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது மட்டுமே நாம் அறிந்த மிக அடிப்படையான விசயம். ஆனால் அப்படிக் கீழே விழுந்து உடல் சிதறி போயோ அல்லது தண்ணீரில் சிக்கித் தொலைந்தவர்களையோ தேடிக் கண்டுப்பிடித்து வருபவர்களின் வாழ்வை யாரும் இதுவரை கவனப்படுத்தியது கிடையாது. அந்த வகையில் இதுவொரு முக்கியமான படம்.

Monday, March 12, 2012

நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் – நாவல் வெளியீடும் நாவலின் வரலாறும்


பல வருடமாகக் காத்திருந்த நாவல் வெளியீடு இது. வருகின்ற 25 ஆம் நாள் மார்ச் மாதத்தில் கோலாலம்பூர் தேசிய நூலகத்தில் மாலை 2.00 மணிக்கு வெளியீடக் காணவிருக்கின்றது. 2007ஆம் ஆண்டு மலேசிய நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசைப் பெற்று எனக்கொரு அடையாளத்தையும் கவனத்தையும் உருவாக்கிக்கொடுத்த நாவல் அது. நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள். 245 பக்கங்கள். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும், ஓம்ஸ் தியாகராஜன் குழுமம், மலேசியத் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய 2006ஆம் ஆண்டு நாவல் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாவல்களில் இந்த நாவல் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு தரப்பட்டது. பரிசு என்பதையும் மீறி அது எனக்கொரு அங்கீகாரமாக அமைந்திருந்தது.தொடர்ந்து இலக்கியத்தில் இயங்குவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திக்கொடுத்தத் தருணம் அது.

Monday, March 5, 2012

சிறுகதை- கட்டுரை (vallinam march issue)

http://www.vallinam.com.my/issue39/story.html
சிறுகதை: மேம்பாலம்: கே.பாலமுருகன்

மூசாங் கம்பம் தொடங்கும் இடத்தில் உடும்புக்கார தாத்தா வீடு கட்டும்போது இதைப் பற்றியெல்லாம் யோசித்திருக்க மாட்டார். காடு பிளக்கப்பட்டு இங்கொரு நெடுஞ்சாலை வந்து வீடுகளுக்கு மேல்வரை நீளும் என முந்தைய சந்ததிகளுக்குத் தெரிந்திருக்காது............Read more

http://www.vallinam.com.my/issue39/essay.html
இழக்கப்பட்ட தேசிய சினிமா: கே.பாலமுருகன்

இதற்கு முதலில் ஓர் இயக்குநர் அந்த மண்ணைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த மண்ணின் ஒட்டுமொத்த அரசியலின் வரலாற்றையும் கலாச்சாரத்தின் வேர்களையும் அறிந்தவராக அல்லது தேடல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கலைஞனால் மட்டுமே அந்த மண்ணையும் மண் சார்ந்த வாழ்வையும் அடையாளம்காட்ட முடியும்........Read more