Friday, December 24, 2010

பாராட்டு விழா - மூத்த எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு தியான ஆசிரம இலக்கிய விருது

நாவலாசிரியர் உயர்திரு அ.ரெங்கசாமி ஐயாஅவர்களுக்கு நாளை (24/12/2010), வெள்ளிக்கிழமை இரவு 8-லிருந்து 10 வரை கூலிம் தியான ஆசிரமத்தில் (பாயா பெசார், லுனாஸ், கூலிம் கெடா) பாராட்டு விழா நடைப்பெறவிருக்கின்றது. ஐயா அவர்களின் முக்கிய படைப்புகளில் உயிர் பெறும் உண்மைகள், புரட்சிப்பூக்கள், புயலும் தென்றலும், புதியதோர் உலகம், நினைவுச்சின்னம், இமயத்தியாகம், லங்காட் நதிக்கரை போன்ற நாவல்களும் அடங்கும். 2005-யில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய மலேசியத் தமிழ் நாவல் எழுதும் போட்டியில் இவரது 'லங்காட் நதிக்கரை' என்ற நாவல் முதன்மைப் பரிசை வென்றது.
நன்றி: தகவல்: மு.வேலன்

வருடந்தோறும் ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களையும் கூலிம் தியான ஆசிரமம் சிறப்பித்து வருகிறது. இந்த வருடம் வரலாற்று நாவலாசிரியரான அ.ரெங்கசாமி விருது கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்படவிருக்கிறார். அவருக்கு வழங்கப்படும் இந்த இலக்கிய விருது மிகவும் முக்கியமானதாகும். வல்லினம் தைப்பிங் சந்திப்புக்கூட்டத்திற்குப் பிறகு அறியப்பட்ட மகிழ்ச்சிக்கரமான விசயம் என்பதால் அ.ரெங்கசாமி எனும் படைப்பாளியின் பங்களிப்பும் இருப்பும் மேலும் பெரியதொரு கவனத்திற்குச் செல்கிறது. அவர் தொடர்ந்து இன்னமும் ஆழமாக வாசிக்கப்பட வேண்டும்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி