Monday, April 16, 2012

எதிர்வினை: நடிகர் சேரனின் விலை ஒரு லட்சம்?


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் தமிழ் நாவல் எழுதும் போட்டி-3 கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாக பிரபல நடிகர் சேரன் அவர்கள் வந்திருந்தார். வழக்கமாக இது போன்ற இலக்கியம் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளுக்குத் தொடர்பே இல்லாத பிரமுகர்கள் வந்து தலைமை தாங்குவது சர்வதேச நோயாக நிறுவப்பட்டிருக்கின்றது. சிங்கப்பூரில் நடந்த உலக எழுத்தாளர் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சிக்கு வைரமுத்துவையும் நடிகர் சிவகுமாரையும் வரவழைத்து தங்களின் நிகழ்ச்சிக்கு ஒரு புகழ்ச்சியைத் தேடிக்கொண்ட அதே போன்ற முயற்சிகள்தான் மலேசியாவிலும் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்ற அரசாங்க சார்பற்ற பொது அமைப்புகள் நியாயமாக நடந்துகொள்ளவில்லையென்றாலும் பரவாயில்லை ஆனால், சமூகப் பிரதிநிதியாகச் செயல்படும் ஒரு பொது அமைப்பு

Monday, April 9, 2012

இழக்கப்பட்ட தேசிய சினிமா

 இதுவரை மலேசிய சினிமா அப்படி என்ன சாதித்திருக்கிறது எனக் கேட்டால் ஒட்டுமொத்த வரலாற்றையும் நீண்டு கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு விதமான பாதிப்புக்களுக்குள்ளாகிய மலேசிய சினிமா அதன் தனித்துவத்தை அடைந்திருக்கிறதா என்பதே மிக முக்கியமான கேள்வி. ஒரு நிலப்பரப்பின் சினிமாவுக்கான தனித்துவம் என்றால் எப்படியிருக்க வேண்டும் எனக்கேட்டால், அந்த மண்ணின் வாழ்க்கையை, அங்குள்ள ஆதி உணர்வை, கலாச்சார வெளியைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே முதன்மை பதிலாக இருக்கும்.

இதற்கு முதலில் ஓர் இயக்குநர் அந்த மண்ணைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த மண்ணின் ஒட்டுமொத்த அரசியலின் வரலாற்றையும் கலாச்சாரத்தின் வேர்களையும் அறிந்தவராக அல்லது தேடல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கலைஞனால் மட்டுமே அந்த மண்ணையும் மண் சார்ந்த வாழ்வையும் அடையாளம்காட்ட முடியும்.

Wednesday, April 4, 2012

நூல் அறிமுகம் – ஆர்.டி.எம் தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஆர்.டி.எம் தொலைக்காட்சியிலிருந்து ஒரு குழு என்னை நேர்காணல் செய்தது. மாதந்தோறும் ஒளிப்பரப்பாகும் “நூல் வேட்டை” நிகழ்ச்சிகாகவே அவர்கள் நாவலாசிரியரான என்னைச் சந்தித்தார்கள். ஒரு சில கேள்விகளை மட்டும் முன்வைத்து எங்களின் உரையாடல் நீண்டது. விரைவில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும்.



உங்கள் நாவலின் உட்பொருள் என்ன?

பாலமுருகன்: இந்த நாவல் மலேசியத் தமிழர்களின் தோட்ட அவலங்களைப் பதிவு செய்யும் வகையில் எழுதப்பட்டிருந்தாலும், மையப் பிரச்சனையான வறுமையும் கடன் தொல்லையும் மட்டுமே நாவலின் ஆதாரம். பலமுறை கையாளப்பட்ட கதைக்கருவாக இருந்தாலும் நாவல் அதனை நோக்கி பெரும்வாழ்வாக விரிகிறது. ஒரு குடும்பம் கடனாலும் அதிகார வர்க்கத்தின் சுரண்டலாலும் எப்படிச் சிதைந்து போகின்றன என்பதையே நாவல் மையப்பொருளாகப் பெசுகின்றன.