Friday, January 13, 2012

தீர்ந்து போகாத வெண்கட்டிகள் நூலின் முன்னுரை



நான் ஒரு கதை உருவாக்கி

எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பு மிகவும் நெருக்கமானது. என்னுடைய 5 ஆவது வயதில் என் ஞாபக சக்தியைச் சோதிப்பதற்கு அதிகமாகக் கேட்கப்பட்டது சினிமா தொடர்பான கேள்விகள்தான். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு அப்பா முன் நின்றாக வேண்டும். எந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள், படக்காட்சியைச் சொல்லிவிட்டு படத்தின் பெயரைக் குறிப்பிடுவது என நான்

Monday, January 2, 2012

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு ...1 ( யோ.கர்ணன் சிறுகதை: ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்)

பல வருடங்கள் நீடித்த ஈழப் போர் சூழலிலிருந்துதான் இன்றைய புலம் பெயர் வாழ்வதென்பது தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. 50களில் தலைகாட்டிய ஈழத்தமிழர் பிரச்சனை 80களில் உலகக் கவனத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆங்காங்கே உதவிகளும் ஆதரவுகளும் கிடைக்கப்பெற்றும் அரசியல் சூழ்ச்சியினால் ஆயுத உதவியினால் 2009இல் இறுதி நிலையை எட்டியது. போர் முடிந்துவிட்டதா அல்லது தமிழீழம் எனும் கனவு தகர்ந்துவிட்டதா எனும் கேள்வியே பேரோசையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையுடன் கைக்கோர்த்து பல விசயங்களைச் சாதித்துக்கொள்வதற்காகச் சீனாவைப் போல பல

Sunday, January 1, 2012

இந்தியப் பயணம்-5 –ஆதவன் தீட்சண்யாவுடன் மோட்டார் பயணம்


திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் என்னைப் பேருந்து ஏற்றிவிடுவதற்காக செல்மா வெகுநேரம் காத்திருந்தார். அவர் வீட்டுக்குச் சென்று மிகவும் அவரசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு வரவேண்டிய சூழல். செல்மா குழந்தைகளிடம் அதிகம் பேசவும் முடியவில்லை. அதுவே மிகுந்த வருத்தமாக இருந்தது. ஒரு சகப் பயணியைப் போலவே என்னுடன் செல்மா இந்தியா பயணம் முழுக்கவும் அவ்வப்போது உடன் இருந்தார். சரியாக 10.45க்கு வரவேண்டிய பேருந்து மேலும் தாமதமாக்கியது. எங்களுடன் செல்மா காருக்கு டிரைவராக வந்த தோழர் ஒருவர் அங்கு இருந்ததால் செல்மாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தேன். தோழர் முன்பு கம்னியுஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறியவர். அவரிடம் வெறும் மௌனம் மட்டுமே இருந்தது. திண்டுக்கல் பற்றி மட்டும் கொஞ்சம் விசாரித்துக்கொண்டேன்.
 
இங்கிருந்து ஓசூருக்குச் செல்வதாகத் திட்டம். அண்ணன் ஆதவன் தீட்சண்யாவைச் சந்தித்தாக வேண்டும் எனப் பிடிவாதமாகவே இருந்தேன். 5ஆம் திகதி அவர் மதுரைக்கு வருவதாக இருந்தது. அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு உரையாற்ற ஆதவன் மதுரைக்கு வரும் அந்த 5ஆம் திகதி என் பயணத்திட்டத்தின்படி நான் பாண்டிச்சேரியில் இருக்க வேண்டும். ஆகையால் முன்னதாகவே பயணத்தை ஓசூருக்கு மேற்கொள்ள முடிவு செய்திருந்தேன். ஆதவனைப் பார்க்க எத்துனைத் தூரம் வேண்டுமென்றாலும் பயணிக்க அப்போதைய மனம் தயாராக இருந்தது.