Tuesday, April 21, 2009

நாடகக் குரலுக்கு எதிரான எனது குரல்

குறிப்பு: ம.நவீன் அவர்கள் அஞ்சடி எனும் புளோக்கை பிறரை தூற்றுவதற்கும் சந்தர்ப்பம் பார்த்து அடிப்பதற்காகவும் என்கிற ஒரு நவீன நாடகத்தனத்துடன் நடத்திக் கொண்டுருக்கிறார். எப்பொழுதோ வெவ்வேறு சூழலில் மனநிலையில் அனுப்பிய மின்னஞ்சலை எல்லாம் இன்னமும் பாதுகாத்து வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.

"அஞ்சடியை" இயக்கிக் கொண்டு சுய திருப்தி அடைந்து கொள்ளுங்கள்


எனது நாடகங்களை சிரமம் பாராமல் புலம்பலாக (நிதானமாக என்று அறிவிப்பு வேறு) அம்பலப்படுத்தியதற்கு மிக்க நன்றி நவீன். அது நாடகமா இல்லையா என்பதை பற்றி நான் கவலைப்படுவதற்கில்லை. ஆனால் நீங்கள் ஆடும் தொடர் மெகா சீரியல் நாடகத்தை மிகவும் கவனமாக கையாளுகிறீர்கள். அது என்று வெளிச்சத்திற்கு வரும் என்று காத்திருக்கவும் எனக்கு நேரமில்லை.

12 மணி இல்லை நவீன். சுங்கைப்பட்டாணியிலிருந்து ஜொகூருக்கு 10.30 மணியே கடைசி பேருந்து. என்ன நவீன் நீங்கள்? எதையும் சரியாகக் கவனிக்காமல்தான் பேசுவீர்களோ? ஓடவில்லை நவீன், நல்லா சொகுசாக பேருந்து சீட்டில் அமர்ந்து கொண்டுதான் சென்றேன். பழைய கதை என்று நீங்களே குறிப்பிட்ட பின் அதை மீண்டும் பேச எனக்கு விருப்பமில்லை.

நீங்கள்தானே வல்லினம் ஆசிரியர்? உங்களிடம்தான் படைப்பு குறித்தும் பிரசுரிப்பது குறித்தும் கேட்க வேண்டும் பேச வேண்டும். ஒருவகை ஆணவம்தான் உங்களுக்கு. இதற்கு முன் வல்லினத்திற்க்காக வங்கியில் பணம் சேர்ப்பிக்க 3-4 முறை மின்னஞ்சல் வந்துவிடும். அது எந்தவகைக் கெஞ்சல்? இதழை நடத்த நீங்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு அனுப்பும் மின்னஞ்சலை, என்னச் சொல்லலாம்? உங்கள் பாணியிலேயே சொல்வதென்றால். தரமான இதழ் வல்லினம்,ஆதலால் அதில் நம் படைப்பு பிரசுரம் ஆகுவது குறித்து நினைவூட்டல் வகையில் கேட்டால், அது என்ன நாடகமா? நாடகம் என்றால் என்ன என்பதில் உங்களுக்குப் பிசகல்.

யுவராஜனுக்கு நன்றி சொல்லும் நீங்கள் அதே அன்றைய தினம், “அவனை (யுவராஜனை) பார்க்க நான் விரும்பலா, பாத்தனா அவன மூஞ்சிலே குத்திருவேன்னு” உங்கள் நண்பரிடம் சொன்னது மறந்து போயிற்றா நவீன்? என்னமா நாடகம் இது?

நீங்கள் செய்தால் அது எதிர்வினையாக்கும், நாங்கள் செய்தால் அது புலம்பலாக்கும். எனக்கான சாவி உங்களிடத்தில் இல்லை நவீன்.

உங்களின் ரெட்டத்தன நாடகமும் அஞ்சடி வாசகர்கள் அறிந்ததுதான். பா.ம விஷயத்தில் மூக்கை நுழைத்து நாட்டாமையெல்லாம் பண்ணிவிட்டு, பிறகு மன்னிப்பு கேட்டதை என்ன “செல்வி” நாடகத்திற்கு இணையான “செல்வன்” நாடகன் என்று சொல்லலாமோ? பா.மவிடம் தொலைபேசியில் பேசிய பிறகு அஞ்சடியில் கூழை கும்பிடுவை நன்றாகவே போட்டுள்ளீர்கள்.

மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா குறித்து எல்லோரையும் எங்களுடன் சேர்ந்து கொண்டு குரலெழுப்புங்கள் என்று ஏன் வற்புறுத்த வேண்டும்? நீங்களே முதுகெலும்பை வளைக்கும் கழகத்தைத் தொடங்கிவிடுவீர்கள் போல?

முதலிலிருந்து ஒரு பாலர் பள்ளி மாணவனுக்கு சொல்வது போல சொல்ல வேண்டும் போல உங்களுக்கு. போலி கண்ணிரும் அநங்கமும் என்கிர கட்டுரையின் மூலம் நான் அநங்கத்தின் நிலைபாடுகளைச் சொன்னதற்குக் காரணமே உங்களின் முதல் கட்டுரையும் அதன் பிறகு வந்த நக்கல் கட்டுரையும்தான். ஆலோசனை வழங்க உங்களுக்குத் தெரியவில்லை. எப்படி ஒரு இதழ் குழுவை அணுக வேண்டும் தெரியாமல் புத்திமதி சொல்லும் அளவிற்கு வளர்த்துவிட்டதாக மமதை வேறு. ஆமாம் நீங்கள் இதழியல் துறையின் மிகப் பெரிய தூண். நீங்கள் விலகுவதால் மனம் வலிக்கத்தான் செய்கிறது. அட போங்கப்பா!

'இறுதியாக நவீனுக்கு: அதுதான் மின்னஞ்சலிலேயே அநங்கத்தின் ஆலோசகரிலிருந்து விலகுவதாகச் சொல்லிவிட்டீர்களே! பிறகு ஏன் இங்கேயும் பதிவு செய்ய வேண்டும்? பகீங்கரமாக எல்லோரும் அநங்கத்தைவிட்டு வெளியேறுவதை இப்படிப் பொதுவில் அம்பலப்படுத்த வேண்டுமா?

இதற்கே இன்னும் பதிலில்லை. ஏற்கனவே நீங்கள் பேசுவதெல்லாம் காழ்ப்பு என்றுதான் நினைக்கத் தூண்டியது. சக நண்பருக்கு புத்திமதி சொலவது போன்ற ஒரு நாடகத்தை அஞ்சடியில் அரங்கேற்றி அதில் பலரின் கவனம் பெற வேண்டும் என்பதற்காக எனது அஞ்சடி புளோக்கைப் பாருங்கள் என்று குறுந்தகவல் பிரச்சாரம் வேறு.

ஒருவரின் எழுத்தை வெகுசன எழுத்து என்று ஒட்டு மொத்தமாக முடிவுக்கட்டும் அளவுக்கு அவ்வளவு நுட்பமாக யாரும் சொல்ல இயலாது. தமது எழுத்தில் எங்கேனும் சில சமயங்களில் வெகுசன அம்சங்களோ வணிகத்தனமான சொல்லாடல்களோ வெளிப்படலாம். அதை தொடர் பயிற்சியின் மூலமே நீக்கவோ குறைக்கவோ இயலும்.


அஞ்சடியை இயக்கிக் கொண்டு சுய திருப்தி அடைந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன உண்மையைப் போட்டுக் கிழித்தாளும் - படைப்பும் படைப்பாளனும் அவன் சார்ந்த சுதந்திரத்துடன் எதிர்வினைகளுக்குப் பயந்து தன்னை ஒடுக்கிக் கொள்பவன் அல்ல. அதிகாரத்திற்கு இரண்டு முகம் இருப்பது போல ஒருவரின் நியாய-கற்பிதம்-உண்மைக்கும் கூட இரண்டு முகங்கள் உண்டு.

கூட்டணி சேர்த்து எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எல்லாம் மின்னஞ்சல்களையும் மிகப் பத்திரமாக இன்னும் தொலைபேசியில் வைத்திருபதற்க்காக மிக்க நன்றி.

ஒன்றத் தெரிந்து கொள்ளுங்கள். படைப்பாளன் உருவாக்கப்படுவதில்லை. அவனே உருவாகுகிறான், பல தளங்களில், வெவ்வேறு சூழலில், வெவ்வேறு மனநிலைகளுடன். உங்கள் ஆதிக்கத்தனத்தை, கிண்டல் கேலியை, மாற்று சிந்தனை என்கிற போர்வையில் நாடகமாடுகிறீர்கள் என்றால் நடத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்.

கே.பாலமுருகன்


No comments: