Sunday, August 2, 2009

மௌனத்தின் உரையாடல்கள்

தற்கால கவிதைக்கான சிற்றிதழாக மௌனம் தீவிர கவனத்தைப் பெற்று வெளிவந்துகொண்டிருக்கிறது. எழுத்தாளர் ஏ.தேவராஜன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு மலாக்காவிலிருந்து வெளிவரும் மௌனம் இதழில் மலேசியாவின் முக்கியமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்களின் சமக்காலக் கவிதைகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

கவிதை குறித்த புரிதல்களும், கவிதைகளைப் பற்றிய உரையாடல்களும், கவிதை விமர்சனங்களும் மேலும் தரமான நவீன கவிதைகளும் மௌனம் இதழில் பிரசுரம் கண்டு சமக்காலத்து சூழலின் பிரதிபலிப்பாக ஒரு மாபெரும் களமாக மௌனத்தின் உரையாடல் நவீன இலக்கிய வெளியின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.

நாட்டின் மூத்த எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் அறிமுக எழுத்தாளர்களும் எழுதி வரும் மௌனம் இதழ் 160 பக்கங்களுடன் ஆகஸ்ட் மாத வெளியீடாக மலர்ந்துள்ளது. மேலும் 29 ஆகஸ்ட் நடக்கவிருக்கும் வல்லின விழாவை முன்னிட்டு எழுத்தாளர் தின சிறப்பிதழாக மௌனம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதழைப் பெறும் விவரம் அறிய மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொள்ளவும்:
thevarajan : sathika2009@hotmail.com

கே.பாலமுருகன்

4 comments:

Tamilvanan said...

பகிர்வுக்கு நன்றி

கே.பாலமுருகன் said...

வாங்க தமிழ்வாணன், தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி.
மௌனம் இதழ் வேண்டுமென்றால் மின்னஞ்சல் மூல தொடர்புக் கொள்ளவும்

சென்ஷி said...

தகவலுக்கு நன்றி பாலமுருகன்!

கே.பாலமுருகன் said...

நன்றி சென்ஷி. வருக