Monday, September 14, 2009

டாக்டர் சண்முகசிவாவின் இலக்கிய உரை-(கலை இலக்கிய விழா (காணொளி)


"தனக்கு எது தேவை என்கிற உணர்வுடன் இளைஞர்கள் முரண்பட வேண்டும் ஆனால் அவர்களின் முரண்பாடுகள் தனது மொழியையும் இனத்தையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போக வேண்டும். . மாற்றுச் சிந்தனையுடன் செயல்படுவது இளைஞர்களின் சிந்தனையை வலுப்படுத்தும், நான் சிந்திப்பது போல நீ சிந்திக்காதே, நீ வேறு மாதிரி சிந்திக்க வேண்டும். . . . "

"பெரியார் தனது புதிய சிந்தனைகளினால்தான் இளைஞர்களைக் கவர்ந்தார். .

இளைஞர்கள் எப்பொழுதும் எதிர்க்கக்கூடிய சக்தியாக இருக்கிறார்கள், இது தமிழ்ச் சூழலுக்கு ஆரோக்கியமற்ற தோற்றம் என்கிற தவறான கருத்துச் சொல்லப்படுகிறது. . "

"நிகழ்கால பிரச்சனைகளை நீ எதிர்க்கொள்ளும்போது, இலக்கியத்தின்வழியாக, எப்படிப் புதிய மொழியைப் பயன்படுத்தப் போகிறாய், எப்படிப் புதிய சிந்தனையைப் பயன்படுத்த போகிறாய், என்று பார்க்க வேண்டும், காரணம் இது புதிய பிரச்சனையல்லவா. . "

"புதிய மொழியாடலை அதன் தர்க்கம் சார்ந்து எதிர்க்கொள்ள இயலாததால், அதைக் கொச்சையான மொழியென்று முத்திரை குத்துகிறோம், ஆனால் அதிலிருந்துதானே நாம் வந்தோம். . "-Dr.sanmugasiva
கே.பாலமுருகன்

No comments: