Sunday, December 25, 2011

கலை இலக்கிய விழாவும் – நான்கு மலேசியப் படைப்பாளிகளின் நூல் வெளியீடும்


நண்பர்களின் கவனத்திற்கு,

வருகின்ற பிப்ரவரி மாதம் வல்லினம் பதிப்பகம்-இதழ் , கலை இலக்கிய விழாவை நடத்தவுள்ளது. தமிழக எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான ஆதவன் தீட்சன்யா மற்றும் அ.மார்க்ஸ் அவர்களும் இவ்விழாவில் சிறப்புரை வழங்கவுள்ளனர். மேலும் மலேசிய இளம் எழுத்தாளர்களின் 4 நூல்களும் விழாவில் வெளியீடப்படும்.

1. கே.பாலமுருகன்-‘தீர்ந்து போகாத வெண்கட்டிகள்’- குழந்தைகள் சினிமாவைப் பற்றிய பதிவுகள்
2. ம.நவீன் – ‘கடக்க முடியாத காலம்’ சமீபத்தில் நவீன் எழுதிய கட்டுரைகள்/பத்திகள் தொகுப்பு
3. சிவா பெரியண்ணன் -‘என்னை நாயென்று கூப்பிடுங்கள்’- கவிதைகள்
4. யோகி – ‘துடைக்கப்படாத இரத்தக் கறைகள்’- பெண்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் கட்டுரைகள்

Thursday, December 22, 2011

இந்தியப் பயணம்(3) – பாரதியார் தேசம்


(barathiyar house)
(நான் பயணத்தைத் வரிசைக்கிரகமாக-தொடராக எழுதவில்லை, ஆகையால் இது நான் இந்தியா சென்ற ஐந்தாவது நாள்) கழுகு மலைக்குச் சென்று வந்த மறுநாள், எட்டயப்புரம் போவதாகத் திட்டம். பாரதியார் பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என ஏற்கனவே செல்மாவிடம் சொல்லியிருந்தேன். அதைப் பற்றி மறந்திருப்பினும் கோணங்கி அண்ணன் இத்தனை தூரம் வந்தாயிற்று, எட்டயப்புரம் அருகாமையில்தான் இருப்பதாகக் கூறி காலையிலேயே அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார். காலையில் எழுந்ததும் கோணங்கி அண்ணன் வீட்டில் மேல்மாடியிலிருந்து கோவில்பட்டி இரயில் தண்டவாளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் வீட்டு மொட்டைமாடி விசித்திரமாக இருந்தது. தாராளமான இடம். அவர் குடியிருப்பிலேயே நான்குக்கு மேற்பட்ட வீடுகள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. கோணங்கி இருந்த வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி அவருடைய அப்பா தனி அறையில் வசித்துக்கொண்டிருந்தார். முதல் நாள் இரவே அவரையும் சென்று சந்தித்திருந்தோம். அவரும் ஒரு வரலாற்று நாவலாசிரியர்.

Tuesday, December 20, 2011

சிறுகதை: குளியல்

 1
துண்டை இழுத்துக் கட்டும்போது அது தொடைவரை இறங்கி கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. என்னுடைய குளியல் நேரம் சரியாக 6 மணிக்குத் தொடங்கும். முன்கதவை அடைத்துவிட்டு அறைக்கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு முதலில் ஆடையைக் களைவேன். சிறிது நேரம் நிர்வாணமாக இருப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு குளியலுக்கு முன்பும் குளியலின் போதும் உருவாகும் இந்தக் கணம் மட்டுமே. 5 நிமிடம் வந்து போகும் என்னுடைய நிர்வாணம் ஒட்டு மொத்த உலகையே கேலி செய்வது போல இருக்கும்.

நான்சுவர் இல்லாமல், கதவு இல்லாமல், மறைப்பேதும் இல்லாமல், ஒரு சவர்க்காரம், தண்ணீரை அள்ள ஒரு கை வாலி, இது மட்டும், பிறகு ஒரு

Saturday, December 17, 2011

தீர்ந்துபோகாத வெண்கட்டிகள் - சினிமா புத்தகம்

இவ்வருடம் வல்லினம் பதிப்பில் வரும் மூன்றாவது புத்தகம், கே.பாலமுருகனின் 'தீர்ந்து போகாத வெண்கட்டிகள்'. மலேசியாவில் முதன் முதலாக உலக திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. வல்லினம் இணைய இதழில் இந்த வருடம் கே.பாலமுருகன் எழுதி 10 தொடர்களாக வந்த கட்டுரைகளைத்தான் இதில் தொகுத்துள்ளோம்.                   - வல்லினம்
சினிமா என்பது கலை என மீண்டும் மீண்டும் நிருபிக்க வேண்டியிருக்கிறது. அசலான படைப்புக்கும் உலக சினிமாக்களைக் காப்பியடித்து மறுபிரதியெடுக்கும் கற்பழித்தல் முயற்சிக்கும் மத்தியில் எது உண்மையான படைப்பு எது சினிமா என அரைகுறை அறிவுக்கூட இல்லாதவர்களிடம் தொடர்ந்து சினிமா சார்ந்து உரையாட வேண்டியிருக்கிறது. சினிமா என்ற கலையைக் காலம்தோறும் மழுங்கடிக்கும் ஒரே விசயம் 'வெகுசன இரசனைத்தான்'. இன்னும் நூற்றாண்டு பல கடந்தாலும் சினிமா என்பதை அக்குளில் கிச்சுகிச்சு மூட்டி மகிழ்ச்சிப்படுத்தும் ஒன்றாக மட்டுமே புரிந்துகொள்ளப்படும் அவலம் இங்கிருக்கிறது. (மாற்று இரசனைக்குத் தயாராக வேண்டும்) 
- கே.பாலமுருகன்

Wednesday, December 14, 2011

இந்தியப் பயணம் – பரப்பரப்பும் அமைதியும் (2)


3 மணிநேரம் 30 நிமிடத்திற்குப் பிறகு சென்னை விமான நிலையம் வந்திறங்கியப் போது பயணக் களைப்பை உணர முடியவில்லை. உடலுக்கு ஒரு தயாரிப்பு நிலை இருக்கிறது. நம்முடைய உடல் மீதான பலவகை கற்பிதங்களையும் கடந்து உடல் தன்னை உற்பத்தி செய்து கொள்கிறது. சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைகளும் பாதுகாப்பும் கொஞ்சம் கெடுபிடியாகவே இருந்தது. நான் அங்கு வந்து இறங்கியத் தினம் கனிமொழி விடுதலையாகி அநேகமாக இங்கு வரக்கூடும் என ஷோபா சக்தி சொல்லியிருந்தார். அந்தப் பரப்பரப்பை அதனுடன் தொடர்புப்படுத்திப் புரிந்துகொண்டேன். ஆனால் கடைசி வரை கனிமொழியைப் பார்க்க முடியவில்லை.

Monday, December 12, 2011

இந்தியப் பயணம் – அறிமுகங்கள் (1)



இலக்கியப் பயணம் எனச் சொல்லிவிட்டுச் சென்றதெல்லாம் ஒரு பாவனைத்தான். இங்கிருந்துதான் ஆண்டுதோறும் பல ‘எழுத்தாளர்கள்’ இலக்கியப் பயணம் செல்கிறார்களே. அவர்கள் போதாதா மலேசிய இலக்கியத்தைக் கடல் கடந்து சென்று வளர்க்க? கவிஞர் செல்மா அவர்களுடன் பேசித் தீர்மானிக்கப்பட்ட பயணம் இது. அங்குள்ள எழுத்தாளர் நண்பர்களுடன் ஒரு நட்பை ஏற்படுத்திக்கொள்வதே முதண்மையான நோக்கமாக இருந்தது. அதன்படி சென்ற முதல்நாள் முதல் இறுதிநாள் வரை பல சமயங்களில் கவிஞர் செல்மா பிரியதர்ஷனும் யவனிகாவும் உடன் இருந்து என்னுடன் பயணித்தார்கள்.

Sunday, November 27, 2011

இந்தியா பயணம்


இந்தியாவிற்குப் பயணப்படுகிறேன். நாளை மறுநாள் காலையில் இந்தியாவில் இருப்பேன். மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை மேலும் சில ஊர்களில் இலக்கிய நண்பர்களையும், தமிழ்த்திரைப்பட இயக்குனர்களையும் சந்தித்து உரையாடும் நோக்கத்தோடு பயணிக்கிறேன். இந்தப் பயணம் அர்த்தமுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை உண்டு. முடிந்தவரை மலேசிய இளம் படைப்பாளர்கள் இங்குச் செய்துகொண்டிருக்கும் மாற்று முயற்சிகளை அறிமுகப்படுத்தி அங்குள்ள இளம் படைப்பாளர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தமிழ் இலக்கியச் சூழலில் செயல்படும் வகையாக என் பயணம் அமையும் என நினைக்கிறேன். 12 நாட்களுக்குப் பிறகு மலேசிய திரும்பியதும் ஒரு வாரம் சிங்கப்பூர் பயணம். அதுவும் இலக்கியம் தொடர்பானதாக அமைகிறது. 

திரைப்படம்: மயக்கம் என்ன? குரூரமான சினிமா பார்வையாளர்கள்


செல்வராகவனின் படம் என்பதால் அதில் வழக்கமாக இருக்கப் போவது மனச்சிதைவு தொடர்பான அதீதமான பதிவுகள். ஒரு தமிழனுக்கு மனச்சிதைவு வந்தால் அவனை அது அதீதமான மன எழுச்சிக்கு உட்படுத்தும் என்பதைப் போல தன் படத்தின் வழி மனக்கோளாறுகளின் பல எல்லைகளைத் தொட முயன்றவர். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மையைத் தழுவி நின்றது என்பது விமர்சனத்திற்குரியது. ஆனால் செல்வராகவனின் படங்களில் வெறும் காதலால் மட்டும் மனச்சிதைவின் சாத்தியங்களை உருவாக்கிக்காட்டுவது தொடரக்கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. மயக்கம் என்ன அதற்கு மாறான ஒன்றைக் காட்டிச் செல்கிறது.

Thursday, November 24, 2011

My short film: Go Back

My recent short film: just a trial for memorial of harvard 3 tamil school.

starring: henrey, Nalini, my some students, and Siti.
story, direction, cinematography: K.Balamurugan

http://www.youtube.com/watch?v=tjQ5pqYjkGo

Saturday, November 19, 2011

கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”

 சமீபத்தில் கோ.புண்ணியவான் தன்னுடைய மூன்றாவது சிறுகதை தொகுப்பைப் பிரசுரித்திருந்தார். அதன் புத்தக வெளியீடு சுங்கைப்பட்டாணியில் 'கார்னிவல்' எனும் மண்டபத்தில் நடந்தேறியது. மலேசிய தமிழ் இலக்கிய சூழலில் வெகுகாலம் எழுதிக் கொண்டிருப்பவர் கோ.புண்ணியவான். 2005 ஆம் ஆண்டில் கல்லூரியில் பயிலும்போது அவருடைய சிறை நூலின் வழி கதைகளைப் படித்திருக்கிறேன். மேலும் 2008ஆம் ஆண்டு தொடங்கி அவருடைய சிறுகதை வளர்ச்சியையும் கவனித்து வருகிறேன். 2009ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய இதழான 'உயிர் எழுத்து' இதழில் அவர் சிறுகதை எழுதத் துவங்கிய பிறகு பெரும் மாற்றங்களை அடையாளம் காண முடிந்தன. மேலும் பேரவை கதை போட்டியில் மட்டுமே 12 முறைக்கு மேல் தன் சிறுகதை திறனைத் தொடர்ந்து பரிசோதித்து வெற்றியும் பெற்று வரும் ஒரே எழுத்தாளர். 

‘எதிர்வினைகள்’ எனும் அவருடைய சமீபத்திய சிறுகதை தொகுப்பில் மொத்தம் 17 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.