Saturday, February 28, 2009

தனிமையின் உக்கிரம் சுமக்கும் வீடுகள்



1
இனி
என் வீட்டில்
இருக்கப்போவது
நான் மட்டுமே
என்கிற தீர்மானங்களுடன்
கரைகிறது
எனக்கான வெறுமை

2
எனது
பொழுதுகளை
தொலைத்துவிட்டு
சன்னலில்
எக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அமைதியாக
இயங்கிக் கொண்டிருக்கும்
உலகை

3
இனி
யார் வரப்போகிறார்
என்கிற விரக்தியில்
கதவு அடிக்கடி
சாத்திக் கொள்ளும்
பழக்கத்திற்கு
ஆளாகியிருந்தது



1 comment:

M.Rishan Shareef said...

//இனி
யார் வரப்போகிறார்
என்கிற விரக்தியில்
கதவு அடிக்கடி
சாத்திக் கொள்ளும்
பழக்கத்திற்கு
ஆளாகியிருந்தது//

அழகான வரிகள் !