Saturday, February 28, 2009

தனிமையின் வீதி


1

யாரோ
அழைக்கிறார்கள்
. . . .

சூன்ய வெளிக்குள்
புகுந்தபின்
இன்னும் என்ன
அழைப்பு?
பிரமை!

கடந்துவிடுகிறேன்





2

மீண்டும்
உற்பத்திக்கும்
ஆற்றல் இருந்திருந்தால்
அந்த 14 நாட்களின்
தொடக்கத்தை
உருவாக்கியிருப்பேன்


3
எல்லாமும்
நடந்தேறிவிட்டது
இனி நான் யார்
என்ற கேள்விகளுடன்
நிற்கிறது
எனது சாலை


No comments: