Monday, September 14, 2009
டாக்டர் சண்முகசிவாவின் இலக்கிய உரை-(கலை இலக்கிய விழா (காணொளி)
"தனக்கு எது தேவை என்கிற உணர்வுடன் இளைஞர்கள் முரண்பட வேண்டும் ஆனால் அவர்களின் முரண்பாடுகள் தனது மொழியையும் இனத்தையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போக வேண்டும். . மாற்றுச் சிந்தனையுடன் செயல்படுவது இளைஞர்களின் சிந்தனையை வலுப்படுத்தும், நான் சிந்திப்பது போல நீ சிந்திக்காதே, நீ வேறு மாதிரி சிந்திக்க வேண்டும். . . . "
"பெரியார் தனது புதிய சிந்தனைகளினால்தான் இளைஞர்களைக் கவர்ந்தார். .
இளைஞர்கள் எப்பொழுதும் எதிர்க்கக்கூடிய சக்தியாக இருக்கிறார்கள், இது தமிழ்ச் சூழலுக்கு ஆரோக்கியமற்ற தோற்றம் என்கிற தவறான கருத்துச் சொல்லப்படுகிறது. . "
"நிகழ்கால பிரச்சனைகளை நீ எதிர்க்கொள்ளும்போது, இலக்கியத்தின்வழியாக, எப்படிப் புதிய மொழியைப் பயன்படுத்தப் போகிறாய், எப்படிப் புதிய சிந்தனையைப் பயன்படுத்த போகிறாய், என்று பார்க்க வேண்டும், காரணம் இது புதிய பிரச்சனையல்லவா. . "
"புதிய மொழியாடலை அதன் தர்க்கம் சார்ந்து எதிர்க்கொள்ள இயலாததால், அதைக் கொச்சையான மொழியென்று முத்திரை குத்துகிறோம், ஆனால் அதிலிருந்துதானே நாம் வந்தோம். . "-Dr.sanmugasiva
கே.பாலமுருகன்
Sunday, September 13, 2009
விமர்சனங்கள் எதற்காக?
இளைய படைப்பாளிகள் விமர்சன துறைக்கு வருவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலர் மாற்றுச் சிந்தனையாகத் தெரியப்படுத்துகிறார்கள். ஆகையால் இதற்கு முன் இருந்த மரபார்ந்த விமர்சன அம்சங்களை முழுவதும் பின்பற்றாமல் தனக்குரிய பார்வையில் புதிய வடிவத்துடன் அல்லது சில மாற்றங்களுடன் விமர்சனம் செய்வது ஏதுவாக இருக்கிறது. இது பயிற்சியாக இருக்கட்டும்.
விமர்சனங்களில் விரைவான புரிதலையும் எளிமையான விவரிப்புகளையும் அல்லது முழுமையான திருப்திகளையும் எதிர்பார்ப்பென்பது ஒரு சோம்பேறித்தனத்தின் அறிகுறி. விமர்சனம் மூலமே எல்லாவற்றையும் அல்லது படைப்பின் எல்லாம் தரிசனங்களையும் உடைத்துக் காட்டி வாசிப்பவனுக்கு மூலை உழைப்பைத் தவிர்த்து விடுவதாக விமர்சனம் மீது பலருக்கு மோகமுண்டு. ஆகையால் சில விமர்சனங்களின் மீது அதிருப்தியும் ஆற்றாமையும் ஏற்படுவது இயல்பு. விமர்சனங்கள் படைப்பின் கணத்தை சிறுக சிறுக இலகுவாக்கி மேற்பரப்பிற்குக் கொண்டு வருவதோடு அதன் வேலை முடிந்துவிடும் என்று நம்புகிறேன். இனி அதை அடைவது வாசகனின் தனித்திறமையைச் சார்ந்தது. விமர்சனங்கள் இன்றி சுயமாகப் படைப்பை அணுகக்கூடியவர்களுக்கு விமர்சனங்களே அனாவசியமாகிவிடும்.
மலேசிய சூழலைப் பொருத்தவரை விமர்சனம் கவனிக்கப்பட வேண்டிய வரவேற்க்கப்பட வேண்டிய அம்சமாகும். மலேசிய படைப்பாளிகளின் படைப்புகளை நேர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தி அதைப் பரவலாக அறிமுகப்படுத்த வேண்டும். நமக்கான படைப்பாளியை (அவர் யார் என்பது முக்கியமில்லை) நம்மிடம் உள்ள படைப்பாற்றல்மிக்க ஒரு படைப்பாளியைப் பரவலாக பலரும் அறியும்படி சொல்வது ஒரு அக்கறை சார்ந்த விஷயமாகும். நவீன இலக்கியத்தின் முக்கியமான அம்சம் இது.
இதற்கு ஏன் தனிப்பட்ட அக்கறை? ஒரு படைப்பாளியின் புத்தகம் பிரசுரம் கண்டு அது பொது மக்களை அடைந்த பிறகு, அதன் மீது யார் வேண்டுமென்றாலும் விமர்சனங்களை முன் வைக்கலாம். அதன் முக்கியத்துவங்களை, பலவீனங்களை யாரும் சுட்டிக் காட்டலாம். இதில் தனிப்பட்ட யாரையும் வசீகரிக்க வேண்டுமென்ற நோக்கங்கள் கிடையாது. (பெரும்பாலும் ஒரு சக படைப்பாளியைப் புகழ்வதில்கூட இன்னமும் நம்மிடம் சொற்கள் இல்லாமல் நிராயுதபானியாக நின்று கொண்டிருக்கிறோம்). நமக்கு வேண்டியவர்களை, நம்முடைய விருப்பமானவர்களைப் புகழ்வது வேறு, நமக்கு தொடர்பே இல்லாத, அல்லது நமது எதிரியாகவும் இருக்கலாம், அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாது அந்தப் படைப்பை மட்டும் அணுகி விமர்சனத்தை முன் வைப்பது வேறாகும். இது மிக அவசியமானது. முதுகு சொரிந்துவிட வேண்டாம் ஆனால் படைப்பின் நிதர்சனத்தைச் சொல்லும்போது அது நிறைவாக இருந்தால் அதை வெளிப்படுத்துவதில் தயக்கமும் காட்டக்கூடாது.
சிங்கையில் இருக்கும் கண்ணபிரான் அவர்கள், யுவராஜன் அவர்களின் காதல்/வல்லினத்தில் வந்த சிறுகதைகளை விமர்சனம் செய்து யுவராஜனை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். யுவராஜனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி அதை யுகமாயினிக்கும் அனுப்பிவிட்டதாகத் தெரிவித்தார். (வல்லினம் மூலம் ஏற்கனவே யுவராஜன் என்கிற படைப்பாளி வெளிநாடுகளில் பரிச்சயமானர்வதான்)
சிங்கையில் கண்ணபிரானைச் சந்தித்தபோது, “யுவராஜன் நல்ல படைப்பாளி, எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய மலேசிய படைப்பாளி” என்று ஒரு அக்கறையுடன் இதைத் தெரிவித்தபோது அவரைக் கண்டு மகிழ்ந்தேன். முக்கியமாக, “மலேசிய படைப்பாளி” என்கிற சொல் எனக்குள் ஆழமான நெருடலை ஏற்படுத்தியது. இதுவரை எத்தனை மலேசிய படைப்பாளியின் படைப்புகள் குறித்து நான் அக்கறை காட்டியுள்ளேன்/ விமர்சித்துள்ளேன், என்கிற சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன. இனி விமர்சன உரிமைகள் மூத்த இலக்கியவாதிகளிடம்தான் இருப்பதாக எந்தக் கற்பிதமும் இல்லாமல், என் நுகர்வு சார்ந்து, வாசகப் பார்வை சார்ந்து சக படைப்பாளிகளின் படைப்புகளை விமர்சனம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. கையில் இருப்பது மஹாதமன் சிறுதைகள்தான் ( புத்தக வடிவில்). அடுத்ததாக கோ.புண்ணியவான் சிறுகதைகளையும் விமர்சிக்க வேண்டும்.. தொடர்ந்து சை.பீர்முகமது. . இனி அடுத்த படைப்பாளிகளின் புத்தகங்களுக்குக் காத்திருக்க வேண்டும்.
3 வருடத்திற்கு முன்பே மஹாத்மனின் சிறுகதைகளை வல்லினம் இதழிம்/ காதல் இதழில் படித்த அனுபவம் இருப்பதால் நான் அவருடைய வாசசன் என்பதில் எனக்கே எந்த முரணும் இல்லை. ஒரு சிலர் எனக்கு அழைத்து, “ஏன் இவ்வளவு நீளமான விமர்சனம்?” என்று கேட்டபோது, என்னால் முடிகிறது நான் செய்கிறேன் என்றேன். அழைப்புத் திடீரென்று துண்டித்துக் கொண்டது. இன்னும் ஒருவர், “மஹாதமன்தான் உங்களை அப்படி விமர்சனம் செய்து கேலியெல்லாம் செய்துள்ளாரே, பிறகு ஏன் அவருக்கு இதையெல்லாம் செய்து, இறங்கிப் போகிறீர்கள்? ” என்று. எனக்கு மஹாதமன் என்கிற முழு தனி நபர் அனாவசியம். என் கைகளுக்குக் கிடைத்தவிட்ட அவர் முழு தொகுப்பில் வெளிப்படும் மஹாத்மன் என்கிற படைப்பாளியும் 3 வருடமாக அவர் கதைகளைப் படித்து வரும் வாசகன் என்பதாலும் நான் எப்படி வேண்டுமென்றலும் விமர்சனம் செய்யலாம். அது வாசகனுக்குரிய உரிமை. இதைக்கூட சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்தி பார்க்கும் அளவிற்கு உங்கள் மனதில் ஏதோ ஒரு குரோதம் வளர்ந்திருக்கிறது” என்றதும் அவர் அமைதியாகிவிட்டார். இந்த விமர்சனத்தை எழுதுவதால் மஹாதமன் என்ன எனக்கு பணமா கொடுக்கப் போகிறார்?
அடுத்து வரும் மஹாத்மனின் சில கதைகளில் என் பார்வையின் அடிப்படையில் தெரிந்த சில பலவீனங்களும் உண்டு. அந்தப் பலவீனங்களை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த முயல்வேன். அவர் அதை ஏற்றுக் கொள்வாரா அல்லது புறக்கணிப்பாரா என்கிற கவலைக் கொஞ்சம்கூட இல்லாமல், தொடர்ந்து விமர்சிப்பேன்.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
விமர்சனங்களில் விரைவான புரிதலையும் எளிமையான விவரிப்புகளையும் அல்லது முழுமையான திருப்திகளையும் எதிர்பார்ப்பென்பது ஒரு சோம்பேறித்தனத்தின் அறிகுறி. விமர்சனம் மூலமே எல்லாவற்றையும் அல்லது படைப்பின் எல்லாம் தரிசனங்களையும் உடைத்துக் காட்டி வாசிப்பவனுக்கு மூலை உழைப்பைத் தவிர்த்து விடுவதாக விமர்சனம் மீது பலருக்கு மோகமுண்டு. ஆகையால் சில விமர்சனங்களின் மீது அதிருப்தியும் ஆற்றாமையும் ஏற்படுவது இயல்பு. விமர்சனங்கள் படைப்பின் கணத்தை சிறுக சிறுக இலகுவாக்கி மேற்பரப்பிற்குக் கொண்டு வருவதோடு அதன் வேலை முடிந்துவிடும் என்று நம்புகிறேன். இனி அதை அடைவது வாசகனின் தனித்திறமையைச் சார்ந்தது. விமர்சனங்கள் இன்றி சுயமாகப் படைப்பை அணுகக்கூடியவர்களுக்கு விமர்சனங்களே அனாவசியமாகிவிடும்.
மலேசிய சூழலைப் பொருத்தவரை விமர்சனம் கவனிக்கப்பட வேண்டிய வரவேற்க்கப்பட வேண்டிய அம்சமாகும். மலேசிய படைப்பாளிகளின் படைப்புகளை நேர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தி அதைப் பரவலாக அறிமுகப்படுத்த வேண்டும். நமக்கான படைப்பாளியை (அவர் யார் என்பது முக்கியமில்லை) நம்மிடம் உள்ள படைப்பாற்றல்மிக்க ஒரு படைப்பாளியைப் பரவலாக பலரும் அறியும்படி சொல்வது ஒரு அக்கறை சார்ந்த விஷயமாகும். நவீன இலக்கியத்தின் முக்கியமான அம்சம் இது.
இதற்கு ஏன் தனிப்பட்ட அக்கறை? ஒரு படைப்பாளியின் புத்தகம் பிரசுரம் கண்டு அது பொது மக்களை அடைந்த பிறகு, அதன் மீது யார் வேண்டுமென்றாலும் விமர்சனங்களை முன் வைக்கலாம். அதன் முக்கியத்துவங்களை, பலவீனங்களை யாரும் சுட்டிக் காட்டலாம். இதில் தனிப்பட்ட யாரையும் வசீகரிக்க வேண்டுமென்ற நோக்கங்கள் கிடையாது. (பெரும்பாலும் ஒரு சக படைப்பாளியைப் புகழ்வதில்கூட இன்னமும் நம்மிடம் சொற்கள் இல்லாமல் நிராயுதபானியாக நின்று கொண்டிருக்கிறோம்). நமக்கு வேண்டியவர்களை, நம்முடைய விருப்பமானவர்களைப் புகழ்வது வேறு, நமக்கு தொடர்பே இல்லாத, அல்லது நமது எதிரியாகவும் இருக்கலாம், அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாது அந்தப் படைப்பை மட்டும் அணுகி விமர்சனத்தை முன் வைப்பது வேறாகும். இது மிக அவசியமானது. முதுகு சொரிந்துவிட வேண்டாம் ஆனால் படைப்பின் நிதர்சனத்தைச் சொல்லும்போது அது நிறைவாக இருந்தால் அதை வெளிப்படுத்துவதில் தயக்கமும் காட்டக்கூடாது.
சிங்கையில் இருக்கும் கண்ணபிரான் அவர்கள், யுவராஜன் அவர்களின் காதல்/வல்லினத்தில் வந்த சிறுகதைகளை விமர்சனம் செய்து யுவராஜனை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். யுவராஜனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி அதை யுகமாயினிக்கும் அனுப்பிவிட்டதாகத் தெரிவித்தார். (வல்லினம் மூலம் ஏற்கனவே யுவராஜன் என்கிற படைப்பாளி வெளிநாடுகளில் பரிச்சயமானர்வதான்)
சிங்கையில் கண்ணபிரானைச் சந்தித்தபோது, “யுவராஜன் நல்ல படைப்பாளி, எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய மலேசிய படைப்பாளி” என்று ஒரு அக்கறையுடன் இதைத் தெரிவித்தபோது அவரைக் கண்டு மகிழ்ந்தேன். முக்கியமாக, “மலேசிய படைப்பாளி” என்கிற சொல் எனக்குள் ஆழமான நெருடலை ஏற்படுத்தியது. இதுவரை எத்தனை மலேசிய படைப்பாளியின் படைப்புகள் குறித்து நான் அக்கறை காட்டியுள்ளேன்/ விமர்சித்துள்ளேன், என்கிற சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன. இனி விமர்சன உரிமைகள் மூத்த இலக்கியவாதிகளிடம்தான் இருப்பதாக எந்தக் கற்பிதமும் இல்லாமல், என் நுகர்வு சார்ந்து, வாசகப் பார்வை சார்ந்து சக படைப்பாளிகளின் படைப்புகளை விமர்சனம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. கையில் இருப்பது மஹாதமன் சிறுதைகள்தான் ( புத்தக வடிவில்). அடுத்ததாக கோ.புண்ணியவான் சிறுகதைகளையும் விமர்சிக்க வேண்டும்.. தொடர்ந்து சை.பீர்முகமது. . இனி அடுத்த படைப்பாளிகளின் புத்தகங்களுக்குக் காத்திருக்க வேண்டும்.
3 வருடத்திற்கு முன்பே மஹாத்மனின் சிறுகதைகளை வல்லினம் இதழிம்/ காதல் இதழில் படித்த அனுபவம் இருப்பதால் நான் அவருடைய வாசசன் என்பதில் எனக்கே எந்த முரணும் இல்லை. ஒரு சிலர் எனக்கு அழைத்து, “ஏன் இவ்வளவு நீளமான விமர்சனம்?” என்று கேட்டபோது, என்னால் முடிகிறது நான் செய்கிறேன் என்றேன். அழைப்புத் திடீரென்று துண்டித்துக் கொண்டது. இன்னும் ஒருவர், “மஹாதமன்தான் உங்களை அப்படி விமர்சனம் செய்து கேலியெல்லாம் செய்துள்ளாரே, பிறகு ஏன் அவருக்கு இதையெல்லாம் செய்து, இறங்கிப் போகிறீர்கள்? ” என்று. எனக்கு மஹாதமன் என்கிற முழு தனி நபர் அனாவசியம். என் கைகளுக்குக் கிடைத்தவிட்ட அவர் முழு தொகுப்பில் வெளிப்படும் மஹாத்மன் என்கிற படைப்பாளியும் 3 வருடமாக அவர் கதைகளைப் படித்து வரும் வாசகன் என்பதாலும் நான் எப்படி வேண்டுமென்றலும் விமர்சனம் செய்யலாம். அது வாசகனுக்குரிய உரிமை. இதைக்கூட சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்தி பார்க்கும் அளவிற்கு உங்கள் மனதில் ஏதோ ஒரு குரோதம் வளர்ந்திருக்கிறது” என்றதும் அவர் அமைதியாகிவிட்டார். இந்த விமர்சனத்தை எழுதுவதால் மஹாதமன் என்ன எனக்கு பணமா கொடுக்கப் போகிறார்?
அடுத்து வரும் மஹாத்மனின் சில கதைகளில் என் பார்வையின் அடிப்படையில் தெரிந்த சில பலவீனங்களும் உண்டு. அந்தப் பலவீனங்களை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த முயல்வேன். அவர் அதை ஏற்றுக் கொள்வாரா அல்லது புறக்கணிப்பாரா என்கிற கவலைக் கொஞ்சம்கூட இல்லாமல், தொடர்ந்து விமர்சிப்பேன்.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
Friday, September 11, 2009
கடவுளின் சட்டையும் மாணவர்களும்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வியாழக்கிழமையும் சபையில் தேசிய பாடல் ஒலிக்க துவங்கியதும் மாணவர்கள் உடல் உற்சாகம் பெரும். உடலை நிமிர்த்தி நேர்க்கோட்டில் வைத்து வானொலியில் பாடல் ஒலித்ததும் அதனுடன் சேர்ந்து வாயை அசைப்பார்கள். அருகில் செல்ல நேரும்போது அவர்கள் பாடலை இராகம் தப்பியும் வரிகள் விட்டும் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்க முடியும். 
சில ஆசிரியர்கள் பாடலை உடனேயே நிறுத்திவிட்டு மாணவர்கள் தவறவிட்ட சொற்களை அல்லது வரிகளைச் சீர்ப்படுத்தி மீண்டும் பாடலை ஒலிக்கச் செய்து பாட வைப்பார்கள். அப்படியும்கூட இன்னமும் ஒரு சில மாணவர்கள் வாயை மட்டும் அசைத்துக் கொண்டு முகப்பாவனைகளால் ஏமாற்றுவதை அறிய முடிகிறது. நாம் மாணவர்களுக்கு நாட்டுப் பற்றை உணர்த்துவதில் காட்டும் அக்கறையைக்கூட சில சமயங்களில் தேசிய பாடல் அல்லது நாட்டுப் பற்று பாடலைக் கற்றுக் கொடுப்பதில் அவ்வளவாகக் கவனம் செலுத்துவது கிடையாது. பள்ளியின் முதல்நாளில் எல்லோருக்கும் பாடல் வரிகள் அடங்கிய தாளைப் பிரதியெடுத்து வழங்கி அவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப் பழக்குவோம். வாசிக்கத் தெரியாத மாணவர்களின் கைகளிலுள்ள பாடல் வரிகள் பூச்சாண்டியைப் போல அவர்களைப் பயமுறுத்துமே தவிர அது அவர்களுக்குப் பரிச்சியமாகப் போவதில்லை.
பள்ளிக்குப் புதியதாகக் காலடி எடுத்து வைத்திருக்கும் ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் சில மாதங்களுக்குத் தேசிய பாடல் வாயில் நுழைய சிரமப்பட்டு மறுத்துக் கொண்டிருக்கும். அவர்களைப் பாடச் சொல்லி கேட்கும்போது அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் மழலைத்தன்மை அடைந்து ஒரு குழந்தைத் தவழ்ந்து வருவது போல இருக்கும்.
அப்படியொருமுறை ஒர் ஒன்றாம் ஆண்டு மாணவனைப் பாடச் சொல்லிக் கேட்கும் அனுபவம் கிடைத்தது. மிகவும் உற்சாகமாக உடலை நிமிர்த்தி கைகளைப் பக்கவாட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டு பாடத் துவங்கினான்.
“tuhan baju. .”
என்கிற ஒரு வரி பாடலின் இடையில் சிக்கியிருந்தது. மீண்டும் பாட சொன்ன போது அதே வரி மீண்டும் ஒலித்தது. அந்த மாணவனை மீண்டும் அந்த வரியை உச்சரிக்கச் சொல்லி அதைத் திருத்தினேன். “tuhan kurniakan. “ மீண்டும் அவன் அந்த வரியை விடமுடியாமல் அதையும் இழுத்துக் கொண்டே பாடலைப் பாடிய போது சிரிப்பு வந்தது.
“டே. . கடவுளோட சட்டையா? அப்படி இல்லடா. . இப்படி. . என்ன சொல்லுவியா ஒழுங்கா? நீ என்ன கடவுளோட சட்டைய பத்தில்லாம் பேசறெ?”
“tuhan baju. . “
“தம்பி. .யப்பா. . கடவுள் என்ன சட்டை போட்டிருப்பார்னு தெரியுமா?”
“தெரியும் சார். . சுக்குல் சட்டை போட்டுருப்பாரு”
தனது சட்டையைக் காட்டி அதைக் கூறினான். அப்பொழுதுதான் அவனுடைய சட்டையில் இரண்டு பட்டன்கள் இல்லாமல் அதில் ஊக்கு சொருகி குத்தியிருப்பது தெரிந்தது. சட்டை பாக்கெட்டில் பள்ளியின் சின்னம் இருக்க வேண்டிய இடத்தில் வெளிறிய வேறு ஒரு பள்ளியின் சின்னம் உருகுலைந்து இருப்பதைப் பார்க்க முடிந்தது.
“யாரோட சட்டெ இது?”
“எங்க அண்ணனோட சட்டெ சார்”
“உனக்குன்னு சட்டெ இல்லையா?”
“அப்பா அடுத்த வாரம் பாசார் மாலாம்லெ வாங்கி தரேனு சொல்லிருக்காரு சார்”
“சரி நீ வகுப்புக்குப் போ. . உனக்கு புது பள்ளிச் சின்னம் தரச் சொல்லி உங்க வாத்தியார்கிட்ட சொல்றேன்” என்றதும் கடவுளின் சட்டையைச் சரிசெய்துவிட்டு அவன் நகர்ந்தான். அவன் உடலில் தொங்கிக் கொண்டிருப்பது கடவுளின் சட்டையாகத்தான் இருக்க முடியும்.
நமது அன்றாட அவசர அலுவல்களுக்கு நடுவில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் சீறுடைகளைக் கொஞ்சம் கவனிக்க நேர்ந்தால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக உடுத்துவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சில மாணவர்களின் சட்டையில் பட்டன்களுக்குப் பதிலாக சிறியதும் பெரியதுமான ஊக்குகள்தான் பல்லிழித்துக் கொண்டிருக்கும். அவர்கள் அதை மறைப்பதற்காகச் செய்யும் சாகசங்கள் மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கும். வகுப்பில் பிற மாணவர்களை எதிர்க்கொள்ள துணிவில்லாமல் எப்பொழுதும் சட்டையை மேசையின் விளிம்பில் வைத்து மறைத்துக் கொண்டு அமர்ந்தே இருக்கத்தான் முயற்சி செய்வார்கள்.
“சட்டெ யேண்டா கிழிஞ்சிருக்கு? தைக்க முடியாதா?”
“சட்டெ யேன் இப்படி வெளுத்துப் போச்சி? உங்க வீட்டுல ஒரு சட்டை வாங்கித் தர மாட்டாங்களா உனக்கு?”
“நாளைக்கு சட்டையில பள்ளிச் சின்னம் இருக்கனும், இல்லைனா அப்பறம் அவ்ளத்தான் நீ”
மாணவர்களின் சட்டைகளில் தென்படும் கிழசல்களையும் நேர்த்தியின்மைகளையும் நாம் அணுகும் விதமே ஒரு மிரட்டலாகவும் தண்டனை கொடுக்கக்கூடிய ஒரு நாட்டாமையாகவும்தான் இருக்கிறதே தவிர அதன் பின்னனியை அறிந்து அந்தக் கடவுள்களின் சட்டையைச் சரிசெய்ய ஏதாவது ஒரு முயற்சியை எடுக்கும் சிந்தனைகள் மிகக்குறைவாகத்தான் இருக்கின்றன போல. குறைந்தது அந்தச் சட்டையுடன் அவனைப் பிறமாணவர்களுக்கு நிகராக நடத்துவதற்காகவாது நாம் முயற்சிக்க வேண்டும்.
“சார் பாக்கெட்டு கிழ்ஞ்சி தொங்குது பாருங்க”
சில சமயங்களில் நமது சக்திக்கேற்ப எல்லாம் மாணவர்களுக்கும் உதவ முடியாமல் போகும்போது, நம்மிடம் இருப்பது அவர்களுக்கான ஆதரவும் அல்லது அவர்களின் நிலையைச் சரிப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக் கண்டறியும் அக்கறையும்தான். இன்றும் பேருந்தில் கண்ணாடியோர சன்னலைத் தேடிப் பிடித்து தனது புத்தகப்பையால் தனது சட்டையை மறைத்துக் கொண்டு ஏதும் அறியாத பாவனையில் பள்ளிக்கு வந்திறங்கும் மாணவர்கள் அணிந்திருக்கும் கடவுளின் சட்டையை நீங்கள் பார்த்ததுண்டா?
ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
சில ஆசிரியர்கள் பாடலை உடனேயே நிறுத்திவிட்டு மாணவர்கள் தவறவிட்ட சொற்களை அல்லது வரிகளைச் சீர்ப்படுத்தி மீண்டும் பாடலை ஒலிக்கச் செய்து பாட வைப்பார்கள். அப்படியும்கூட இன்னமும் ஒரு சில மாணவர்கள் வாயை மட்டும் அசைத்துக் கொண்டு முகப்பாவனைகளால் ஏமாற்றுவதை அறிய முடிகிறது. நாம் மாணவர்களுக்கு நாட்டுப் பற்றை உணர்த்துவதில் காட்டும் அக்கறையைக்கூட சில சமயங்களில் தேசிய பாடல் அல்லது நாட்டுப் பற்று பாடலைக் கற்றுக் கொடுப்பதில் அவ்வளவாகக் கவனம் செலுத்துவது கிடையாது. பள்ளியின் முதல்நாளில் எல்லோருக்கும் பாடல் வரிகள் அடங்கிய தாளைப் பிரதியெடுத்து வழங்கி அவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப் பழக்குவோம். வாசிக்கத் தெரியாத மாணவர்களின் கைகளிலுள்ள பாடல் வரிகள் பூச்சாண்டியைப் போல அவர்களைப் பயமுறுத்துமே தவிர அது அவர்களுக்குப் பரிச்சியமாகப் போவதில்லை.
பள்ளிக்குப் புதியதாகக் காலடி எடுத்து வைத்திருக்கும் ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் சில மாதங்களுக்குத் தேசிய பாடல் வாயில் நுழைய சிரமப்பட்டு மறுத்துக் கொண்டிருக்கும். அவர்களைப் பாடச் சொல்லி கேட்கும்போது அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் மழலைத்தன்மை அடைந்து ஒரு குழந்தைத் தவழ்ந்து வருவது போல இருக்கும்.
அப்படியொருமுறை ஒர் ஒன்றாம் ஆண்டு மாணவனைப் பாடச் சொல்லிக் கேட்கும் அனுபவம் கிடைத்தது. மிகவும் உற்சாகமாக உடலை நிமிர்த்தி கைகளைப் பக்கவாட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டு பாடத் துவங்கினான்.
“tuhan baju. .”
என்கிற ஒரு வரி பாடலின் இடையில் சிக்கியிருந்தது. மீண்டும் பாட சொன்ன போது அதே வரி மீண்டும் ஒலித்தது. அந்த மாணவனை மீண்டும் அந்த வரியை உச்சரிக்கச் சொல்லி அதைத் திருத்தினேன். “tuhan kurniakan. “ மீண்டும் அவன் அந்த வரியை விடமுடியாமல் அதையும் இழுத்துக் கொண்டே பாடலைப் பாடிய போது சிரிப்பு வந்தது.
“டே. . கடவுளோட சட்டையா? அப்படி இல்லடா. . இப்படி. . என்ன சொல்லுவியா ஒழுங்கா? நீ என்ன கடவுளோட சட்டைய பத்தில்லாம் பேசறெ?”
“tuhan baju. . “
“தம்பி. .யப்பா. . கடவுள் என்ன சட்டை போட்டிருப்பார்னு தெரியுமா?”
“தெரியும் சார். . சுக்குல் சட்டை போட்டுருப்பாரு”
தனது சட்டையைக் காட்டி அதைக் கூறினான். அப்பொழுதுதான் அவனுடைய சட்டையில் இரண்டு பட்டன்கள் இல்லாமல் அதில் ஊக்கு சொருகி குத்தியிருப்பது தெரிந்தது. சட்டை பாக்கெட்டில் பள்ளியின் சின்னம் இருக்க வேண்டிய இடத்தில் வெளிறிய வேறு ஒரு பள்ளியின் சின்னம் உருகுலைந்து இருப்பதைப் பார்க்க முடிந்தது.

“யாரோட சட்டெ இது?”
“எங்க அண்ணனோட சட்டெ சார்”
“உனக்குன்னு சட்டெ இல்லையா?”
“அப்பா அடுத்த வாரம் பாசார் மாலாம்லெ வாங்கி தரேனு சொல்லிருக்காரு சார்”
“சரி நீ வகுப்புக்குப் போ. . உனக்கு புது பள்ளிச் சின்னம் தரச் சொல்லி உங்க வாத்தியார்கிட்ட சொல்றேன்” என்றதும் கடவுளின் சட்டையைச் சரிசெய்துவிட்டு அவன் நகர்ந்தான். அவன் உடலில் தொங்கிக் கொண்டிருப்பது கடவுளின் சட்டையாகத்தான் இருக்க முடியும்.
நமது அன்றாட அவசர அலுவல்களுக்கு நடுவில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் சீறுடைகளைக் கொஞ்சம் கவனிக்க நேர்ந்தால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக உடுத்துவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சில மாணவர்களின் சட்டையில் பட்டன்களுக்குப் பதிலாக சிறியதும் பெரியதுமான ஊக்குகள்தான் பல்லிழித்துக் கொண்டிருக்கும். அவர்கள் அதை மறைப்பதற்காகச் செய்யும் சாகசங்கள் மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கும். வகுப்பில் பிற மாணவர்களை எதிர்க்கொள்ள துணிவில்லாமல் எப்பொழுதும் சட்டையை மேசையின் விளிம்பில் வைத்து மறைத்துக் கொண்டு அமர்ந்தே இருக்கத்தான் முயற்சி செய்வார்கள்.
“சட்டெ யேண்டா கிழிஞ்சிருக்கு? தைக்க முடியாதா?”
“சட்டெ யேன் இப்படி வெளுத்துப் போச்சி? உங்க வீட்டுல ஒரு சட்டை வாங்கித் தர மாட்டாங்களா உனக்கு?”
“நாளைக்கு சட்டையில பள்ளிச் சின்னம் இருக்கனும், இல்லைனா அப்பறம் அவ்ளத்தான் நீ”
மாணவர்களின் சட்டைகளில் தென்படும் கிழசல்களையும் நேர்த்தியின்மைகளையும் நாம் அணுகும் விதமே ஒரு மிரட்டலாகவும் தண்டனை கொடுக்கக்கூடிய ஒரு நாட்டாமையாகவும்தான் இருக்கிறதே தவிர அதன் பின்னனியை அறிந்து அந்தக் கடவுள்களின் சட்டையைச் சரிசெய்ய ஏதாவது ஒரு முயற்சியை எடுக்கும் சிந்தனைகள் மிகக்குறைவாகத்தான் இருக்கின்றன போல. குறைந்தது அந்தச் சட்டையுடன் அவனைப் பிறமாணவர்களுக்கு நிகராக நடத்துவதற்காகவாது நாம் முயற்சிக்க வேண்டும்.
“சார் பாக்கெட்டு கிழ்ஞ்சி தொங்குது பாருங்க”
சில சமயங்களில் நமது சக்திக்கேற்ப எல்லாம் மாணவர்களுக்கும் உதவ முடியாமல் போகும்போது, நம்மிடம் இருப்பது அவர்களுக்கான ஆதரவும் அல்லது அவர்களின் நிலையைச் சரிப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக் கண்டறியும் அக்கறையும்தான். இன்றும் பேருந்தில் கண்ணாடியோர சன்னலைத் தேடிப் பிடித்து தனது புத்தகப்பையால் தனது சட்டையை மறைத்துக் கொண்டு ஏதும் அறியாத பாவனையில் பள்ளிக்கு வந்திறங்கும் மாணவர்கள் அணிந்திருக்கும் கடவுளின் சட்டையை நீங்கள் பார்த்ததுண்டா?
ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
Thursday, September 10, 2009
“ஓ லாவே” மஹாத்மன் சிறுகதைகள் - தூக்கி வீசப்படுதலும் சூதாட்டம் என்கிற சிதைவின் நகர்வுகளும்

மலேசிய படைப்பாளியான மஹாத்மன் சிறுகதைகள், வல்லினம் (மலேசியா)பதிப்பகத்தின் வெளியீடாக அன்மையில் வெளியீடு கண்டது. மறுவாசிப்பிற்கும் ஆழ்ந்த விமர்சனங்களுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டிய கதைகள் மஹாத்மனுடையது. முழு தொகுப்பையும் வாசித்து முடித்தபோது, புத்தகத்திலுள்ள 10 கதைகளையும் ஒரே தளத்தில் ஒரே புரிதலில் வைத்து மதிப்பீடுவது அல்லது விமர்சிப்பது சிரமமானது. ஒவ்வொரு கதையும் தனக்கான களத்தைக் கண்டடையும் நுட்பம் அனுபவ ரீதியிலான வெளிப்பாடுகளின் தனித்தனி சரடுகளாகும்.
ஏற்கனவே மலேசிய படைப்பாளி மஹாத்மனின் “கடவுள் கொல்ல பார்த்தார்” , “அலறலும் பரதேசியின் நடையும், மூன்றாவது அற்புதம் போன்ற கதைகளை வாசித்தபோது, முதன் முதலில் புதுமைப்பித்தனின் “கயிற்றரவு” சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வுகளை இனம்காண முடிந்தது.
சராசரி மனோபாவங்களுக்குள் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்ப்பது போல இது வெற்றியடைந்தவனின் வரலாறோ, சுகமான வாழ்பனுபவத்தின் சாதனை கதைகளோ கிடையாது. தனக்கான அனுபவம், கண்டடைந்த விரக்தி, தன்னைக் கடந்து தன் இருப்பைத் தூக்கிக் கொண்டு அலையும் சந்தர்ப்பங்கள், போதாமைகளின் அடுக்குகளில் சிக்கிய எச்சங்களாக, ஒரு பரதேசியென கொள்கைகள் அற்று, பிடிப்புகள் அற்று, பல கூர்மையான கேள்விகளுடன் படைத்தவனைத் தேடி அலையும் ஒரு மனிதனின் விளிம்பு கதைகள் மஹாத்மனின் களம் என்பது போல தோன்றியது. முன்பு அவரிடம் இதைப் பற்றி உரையாடியபோது அவரின் வெளிப்பாடுகளும் தன் கதை தன்னை வெளிப்படுத்திக் கொண்ட உணர்வையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மஹாத்மனின் வாழ்பனுபவம் மலேசிய சூழலிலிருந்து சராசரி மனிதனின் வாழ்க்கை சுழற்சியிலிருந்து சற்று விலகி வாழ்வின் மகத்துவங்களின் கால்களில் சிக்கிக் கொண்டு தனது பிம்பத்தை மற்றொரு இருண்ட பரிணாமத்தில் தூக்கி வீசக்கூடிய எல்லாம் தனித்துவங்களையும் கொண்டது. அந்த வாழ்வைக் கொண்டாடுவதன் மூலமாகவோ அல்லது படைப்பாக்குவதன் மூலமாகவோ மஹாத்மனுக்குள் இருக்கும் படைப்பாளன் வெற்றிப் பெற்றுள்ளான். மீண்டு வருவது அல்லது இயலாமைகளைச் சரிக்கட்டுவது அசாதரணமானது. தனது பரதேசி அடையாளத்தைப் பதிவு செய்வது, பதிவு செய்து வெற்றிப் பெறுவது, சமூக அங்கீகாரங்களுக்கு சமூக புறக்கணிப்புகளுக்கு அஞ்சாமல், மிகத் துணிவாக தன்னுடைய சுயத்தை தன்னுடைய அனுபவத்தை பொது நியாங்களின் நெருக்குதல்களைத் துண்டித்துவிட்டு, வெளிப்படுத்துகிறார் மஹாத்மன். அவருடன் பயணிக்க நீங்களும் பரதேசியைப் போல சாலையில் படுத்துறங்கியும் அலைந்தும், சிறைப்பட்டும், தண்டிக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், மதத் தீவிரத்தில் சிக்குண்டும், மீண்டும், எதிர்த்தும், ஒட்டு மொத்தமாக சாமான்ய வாழ்விலிருந்து தூக்கி வீசப்படவும் வேண்டும். இல்லையென்றால் ஒரு சராசரி பார்வையாளனாக, விளிம்பு நுகர்வற்ற, பின்புலமற்ற வாசகனாக மட்டுமே மஹாத்மனின் அனுபவங்களின் ஆழத்தின் மேற்பரப்பில் மிதக்கக்கூடும். மிதத்தல் சுவையான அனுபவம். மஹாத்மன் கண்டடைந்த ஆழத்தின் அபாயங்களும், இருளும் ஒரு செய்தியாக மட்டுமே நம்மை வந்தடைகிறது.
முதலில் “ஓ லாவே” என்ற கதையிலிருந்து என் விமர்சன பார்வைக்குள் நுழைகிறேன். இதுவரை விமர்சனங்களுக்கு ஒரு மரபார்ந்த வடிவம் இருந்திருக்கலாம். அவ்வளவு மரபாக விமர்சிக்க முடியாவிட்டாலும் கதையின் போக்குடன் அதன் மேற்பரப்பில் நான் மிதந்து வந்து அடைந்த ஒரு புரிதலை மட்டும் பகிர்கிறேன்.

ஒரு நட்சத்திரமில்லாத தங்கும் விடுதியில் இருக்கும் இரு நண்பர்களுக்கிடையேயான நட்பின் பின்னனியில் இயங்கக்கூடிய கதைக் களம், தனது சீன நண்பனை மையப் பாத்திரமாக வடிவமைத்துக் கொண்டு இன்னொரு கதைச் சொல்லியின் மூலம் கதை நகர்த்தப்படுகிறது. வழக்கமான உத்தி. எவ்வித புதுமையும் கிடையாது. சிறுகதைகளில் பெரும்பாலும் கையாளப்பட்டவைத்தான்.
கெசினோ ரோலட் என்கிற சூதாட்டத்தில் எல்லாம் பணத்தையும் கரைத்துவிட்ட பிறகு ஏற்படும் அடுத்த நகர்வை ஒரு சம்பவம் சார்ந்ததாக கட்டமைத்து, கொண்டு வரப்படுகிறது. தொலைத்த பணத்தை ஈடுகட்ட ஒரு சாமி சிலை கிடைக்கிறது, அதைக் கொண்டு போய் கடை கடையாக விற்பனை செய்கிறார்கள். எல்லாம் இடத்திலும் வேண்டாமென்கிறார்கள். விற்பனையாகாத சிலையை இரவில் எழுந்து தடவிப் பார்க்கிறான். மறுநாள் சிலையைக் காடொன்றின் ஆற்றோரத்தில் வைத்துவிட்டு வருகிறார்கள். பிறகு இரு நண்பர்களும் பிரிய நேரிடுகிறது. மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கும்போது சிலை வைத்த இடத்திற்குச் சென்று பார்க்கும்போது அங்கு ஒரு கோவில் உருவாகியிருப்பதைக் கண்டு “ஓ லாவே” என்று வியக்கிறான் சீன நண்பன் என்பதாகக் கதை முடிகிறது. இந்த “ஓ லாவே”க்கும் அவனுக்குள் இருக்கும் இன்னொரு “ஓ லாவே”க்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு இருப்பதை உங்களால் கண்டறிய முடியுமானால், வாசிப்பு அடுத்த கட்டத்தில் மீண்டும் தொடங்கும்.
ஓ லாவே என்ற சொல்லுக்கு அர்த்தம் சீனர்களின் ஒரு பிரிவினர், ஹோக்கின் மொழியைப் பேசக்கூடியவர்கள், தனக்கு வியப்பை அளிக்கக்கூடிய ஒன்றைப் பார்த்து அதிசயித்து உச்சரிக்கக்கூடிய ஒரு சொல்லாகும். அதிசயங்களுக்கு முன் அவர்கள் மண்டியிட வைக்கும் ஓர் உணர்வுதான் “ஓ லாவே”. அன்றாடங்களின் சலிப்பிலிருந்தும் அதன் நேர்த்தியான ஒழுங்கு அளிக்கக்கூடிய இறுக்கங்களிருந்தும் தப்பித்துக் கொள்ள அடுத்த வடிவமாக இருந்தது சூதாட்டம், மது, மாது போன்றவற்றைக் குறிப்பிடலாம். அப்படியொரு தப்பித்தலில் மனோநிலையில் சூதாட்டம் கொடுக்கக்கூடிய சிற்றின்ப அதிசயங்களுக்கு முன் மனிதன் எப்படி மண்டியிட்டுக் கிடக்கிறான் என்பது போன்ற ஓசையுடன் துடிக்கிறது ஓ லாவே சிறுகதை.

கெந்திங் மலையில் இருக்கும் கெசினோ சூதாட்ட களத்தில் பெரும்பாதியான கதை நடக்கிறது. தன் சக சீன நண்பன் சூதாட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டு மீண்டும் அதை நாடும் சூட்சம வஸ்த்துவின் எதார்த்தங்களை முன் வைக்கும்போது எளிமையான நடையால் எந்த இடத்திலும் குழப்பம் தட்டாமல் வெகு இயல்பாக கதையுடன் இணையக்கூடும். சூதாட்டம் அளிக்கக்கூடிய சிறிது நேரப் போதையில் முழுவதும் தொலைத்துக் கொள்ளும் ஒரு பிம்பத்தைக் காட்டும்போது அந்தப் பிம்பத்தின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு சமூகத்தையும் நாம் அடையக்கூடும்.
பத்துடுவா கம்பத்தில் இருக்கும்போது, அம்மா ஒரு சீனக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். முன்பகுதி செலவு பொருள்கள் விற்கும் கடை, பின்பகுதியில் சீன முதலாளியின் மிதமான ஆடம்பர வீடு. அம்மாவுடன் அந்தச் சீனனுடைய வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் ஒரு காயா ரொட்டி இலவசமாகக் கிடைக்கும், மேலும் சீன காமிக்ஸ் புத்தகங்களும் கிடைக்கும். அதிலுள்ள படங்களைக் கிழித்து பறக்கவிடுவது எனது பொழுதுபோக்கு. அந்தச் சீன் முதலாளியின் வீட்டில் எப்பொழுதும் சீட்டாட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கும். எல்லாம் நேரங்களிலும் அங்குள்ளவர்கள் வட்டமாக அமர்ந்துகொண்டும் புகைப்பிடித்துக் கொண்டும் ஆயாசமாகவும் சிரித்துக் கொண்டும் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களின் கைகள் இலாவகமாக சீட்டுத் தாள்களை விரித்துக் காட்டும். மேசையில் சில்லறை காசுகளும் பண நோட்டுகளும் அங்குமிங்குமாக சிதறிக் கிடப்பதைப் பார்க்கும்போது. .”ஓ லாவே” என்று சொல்லியிருக்கக்கூடும். (அப்பொழுதே இந்தச் சிறுகதையைப் படித்திருந்தால்)
அடுத்ததாக கோலாலம்பூரில் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், வீட்டு வசிப்பிடத்திலுள்ள குதிரை பந்தயம் வீடியோ கேமில் சீன சிறுவர்கள் குவிந்து கிடந்து நாள் முழுக்க அங்கேயே கதியாகக் கிடக்கும் அந்தக் கூட்டத்தின் ஆர்வத்தையும் சூதாட்டத்தில் அவர்களுக்கிருக்கும் அதிசய உணர்வுகளையும் பார்க்க நேர்ந்தது. என்னுடைய பள்ளிப் பருவம் முழுக்க சீன நண்பர்கள் சூதாட்டம் குறித்த அதீத ஈடுபாட்டு உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அவர்களின் பொழுதுகளைச் சீட்டுக் கட்டுகளும், தாயங்களும் நிரப்பியிருப்பதை நேரிலேயே காணக்கிடைத்தது.
மஹாத்மனின் “ஓ லாவே”வில் ஒரு இனம் சூதாட்டத்தின் நகர்வில் தன்னை நிறுவிக் கொண்டு அதன் உள் அமைப்புகளாக, எல்லாம்வித உளவியல் சிக்கல்களுக்கும், வாழ்வியல் தோல்விகளுக்கும், ஆளானதைக் காட்டப்படுகிறது. சூதாட்டம் ஒரு மனிதனை எங்கு கொண்டு நிறுத்தும் என்கிற விரிந்த மனோத்துவ அணுகுமுறையுடன் மஹாதமன் அவருடைய கதையில் தற்கொலைகளின் உச்சத்தில் அதன் வீழ்ச்சியில் நம்மையெல்லாம் அமர வைத்து, சூதாட்டமும் அதன் போதையும் உருவாக்கிய மரண பாதாளங்களையும் அதன் இடுக்குகளில் வீழ்ந்து மரணித்த முகங்களையும் காட்டுகிறார். பயங்கரமான தற்கொலைகளின் பின்னனியில் பெரும்பாலும் ஒரு சூதாட்டத்தின் வீழ்ச்சியும் குரோதமும் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
நாம் வாழும் சமூகத்திலேயே இது வெகு இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. பிறரை ஏமாற்றுவதன் மூலமே இன்னொருவன் முன்னேற முடியும் என்பதாகப் பொருளாதார சிந்தனைகள் ஒரு இயல்பாகிவிட்டதென்றும் சொல்லக்கூடும்., பொருளியல் தேடலின் அதீத மாயாவாத புத்தி தரக்கூடிய போராட்டமே இந்தச் சூதாட்டம்தான் என்று அடையாளம் காணக்கூடிய அளவிற்கு சூதாட்டம் வெளிப்படுத்தக்கூடிய மாயை, புராணக் காலங்களிலும் ஒரு வரலாறாக இழப்புகளின் குறியீடுகளாக இருந்ததை, பாண்டவர்களின் வீழ்ச்சிகளைக் கதையுடன் சேர்த்துக் காட்டுவதன் மூலம் நிறுபிக்கிறார் மஹாத்மன்.
மேலும் கதையின் ஆழத்தை உங்களுக்கு நான் சொல்வதைவிட நீங்களே வாசிக்கும்போது அதன் எளிமையான உள் அடுக்குகளைக் கண்டறிய முடியும். மஹாத்மனின் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளிலே மிக இயல்பாக எளிமையாக பலரும் அடையக்கூடிய களத்தைக் கொண்டுள்ள கதை இது மட்டுமே. எவ்வித இருண்மைகளும் இல்லாத நடை, எளிமையான கதையாடல். சிக்கலில்லாத மொழி.
தொடரும் விமர்சனம்
கே.பாலமுருகன்
Wednesday, September 9, 2009
பழ.நெடுமாறன் மலேசியா வருகை (இன்று சுங்கைப்பட்டாணியில் எழுச்சி உரை)

அறிவிப்பு: இன்று சுங்கைப்பட்டாணி (மலேசியா)வில் சுப்ரமண்ய ஆலய தேவஸ்தானத்தின் அண்னாசாமி மண்டபத்தில் பழ.நெடுமாறன் அவர்களின் எழுச்சி உரை நடைபெறவிருக்கிறது. கீழ்க்கண்ட விவரத்தின்படி:
திகதி: 09.09.2009(புதன்) இன்று
நேரம்: மாலை மணி 7.30க்கு
இடம்:சுங்கைப்பட்டாணி அண்ணாசாமி மண்டபம் (சுப்ரமண்ய தேவஸ்த்தானம்
திகதி: 09.09.2009(புதன்) இன்று
நேரம்: மாலை மணி 7.30க்கு
இடம்:சுங்கைப்பட்டாணி அண்ணாசாமி மண்டபம் (சுப்ரமண்ய தேவஸ்த்தானம்
பழ. நெடுமாறன் (1933, தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் தில்லியில் முடிவு செய்யும் தில்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தை தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார்.

தமிழீழப் போராட்டத்தில் ஈடுபாடு
1982 - யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.சி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்து தலைமை அமைச்சர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.சி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு புது தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த முறையீடு ஒன்றை அளித்தது.
1982 - சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, செகன் ஆகியோரின் மரண தண்டனையை கைவிட வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார்.
1983 - கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மதுரையிலிருந்து இலங்கை நோக்கி 5000 தொண்டர்களுடன் தமிழர் தியாகப் பயணம் நடத்தினார்.
1985 - விடுதலைப் புலிகளின் துணையோடு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் கமுக்கமாகச் சுற்றுப்பயணம்[1] மேற்கொண்டு சிங்களப் படையாட்களின் அட்டூழியங்களைப் பற்றிய விவரங்களையும், ஈழத் தமிழர்களின் துயரங்களையும் நேரில் கண்டறிந்து அவற்றை ஒளிப்படமாக எடுத்து வந்து இந்தியா உட்பட உலக நாடுகளில் காட்டச் செய்தார்.
1987 - திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அங்கு சென்று நிலைமையை அறிந்து வந்து தமிழக மக்களுக்குத் தெரிவித்தார்.
1987 - 1990 - தமிழர் தேசிய இயக்கமும் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஈழத் தமிழர் போராட்டத்துக்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தின.
20-12-1990 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகளின் கூட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றினை நிறுவி கூட்டாக செயல்படுவதற்கு முடிவு செய்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அமைப்பாளராக பொறுப்பேற்றார்.
1991 முதல் இன்று வரை இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் சார்பில் போராட்டங்களும் மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் அரசு தடை விதித்த போது அதை மீறி தோழர்கள் சிறை புகுந்தனர்.
1991 - மீண்டும் இலங்கை சென்று இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளைத் திரட்டி வந்து தலைமை அமைச்சர் வி. பி. சிங்கைப் பார்த்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார்.

தமிழீழப் போராட்டத்தில் ஈடுபாடு
1982 - யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.சி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்து தலைமை அமைச்சர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.சி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு புது தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த முறையீடு ஒன்றை அளித்தது.
1982 - சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, செகன் ஆகியோரின் மரண தண்டனையை கைவிட வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார்.
1983 - கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மதுரையிலிருந்து இலங்கை நோக்கி 5000 தொண்டர்களுடன் தமிழர் தியாகப் பயணம் நடத்தினார்.
1985 - விடுதலைப் புலிகளின் துணையோடு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் கமுக்கமாகச் சுற்றுப்பயணம்[1] மேற்கொண்டு சிங்களப் படையாட்களின் அட்டூழியங்களைப் பற்றிய விவரங்களையும், ஈழத் தமிழர்களின் துயரங்களையும் நேரில் கண்டறிந்து அவற்றை ஒளிப்படமாக எடுத்து வந்து இந்தியா உட்பட உலக நாடுகளில் காட்டச் செய்தார்.
1987 - திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அங்கு சென்று நிலைமையை அறிந்து வந்து தமிழக மக்களுக்குத் தெரிவித்தார்.
1987 - 1990 - தமிழர் தேசிய இயக்கமும் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஈழத் தமிழர் போராட்டத்துக்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தின.
20-12-1990 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகளின் கூட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றினை நிறுவி கூட்டாக செயல்படுவதற்கு முடிவு செய்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அமைப்பாளராக பொறுப்பேற்றார்.
1991 முதல் இன்று வரை இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் சார்பில் போராட்டங்களும் மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் அரசு தடை விதித்த போது அதை மீறி தோழர்கள் சிறை புகுந்தனர்.
1991 - மீண்டும் இலங்கை சென்று இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளைத் திரட்டி வந்து தலைமை அமைச்சர் வி. பி. சிங்கைப் பார்த்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார்.

மாணவப் பருவத்திலிருந்து இன்று வரை பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும் மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டார்.
தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார்.
தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார்.
1969-இல் காங்கிரசு கட்சியில் இருந்த போது, தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு 6 மாத காலம் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பொய் வழக்கு என்று வெளிப்படுத்தியே வெளி வருவேன் என்று பிணையில் வெளிவர மறுத்து விட்டார். ஆறு மாத காலம் முடிவதற்கு ஓரு நாள் இருந்த போது உயர் நீதிமன்றம் அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று தீர்ப்புரைத்தது. இதற்காக பெருந்தலைவர் காமராசர் நெடுமாறனை மாவீரன் என பாராட்டினார்.
1993 - தடா சட்டத்தின் கீழும் 2002ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.
2002ஆம் ஆண்டு பொடாவில் கைது[4] செய்யப்பட்ட போது ஓராண்டு 5 மாத காலம் சிறையில் இருந்தார்.
பிணையில் வெளியே வந்த பிறகு சுமார் இரண்டு ஆண்டு காலம் வாய்ப்பூட்டுப் போடப்பட்டு பேச்சுரிமை பறிக்கப்பட்டார்.
இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தி அதற்காக 1 வாரம் பத்து நாட்கள் என சிறையில் அடைக்கப்பட்டும் பின்னர் பிணையில் வெளிவந்து தொடர்ந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று வருவதும் தொடர்கிறது
சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் உள்ளவர்கள், ஈழ போராட்டம் குறித்த தகவல்களுக்கும் உண்மை நிலவரங்களுக்கும் இந்த எழுச்சி உரையைக் கேட்க தவறாமல் வரலாம்.
கே.பாலமுருகன்
தகவல்: தமிழ் வீக்கியோபிடியா
Monday, September 7, 2009
கால் முளைக்கும் பென்சில்கள்
பள்ளிப் பருவத்தில் நாம் அதிகமாகத் தொலைத்தது பென்சிலாகத்தான் இருக்க முடியும். என் ஒன்றாம் ஆண்டு பருவத்தை மீட்டுணர்ந்து பார்க்கும் தருணங்களிலெல்லாம் பென்சிலைத் தொலைத்துவிட்டு வகுப்பில் அழுது கொண்டிருந்த காட்சிகள்தான் அதிகமாக நினைவுக்கு வருகிறது. கணித ஆசிரியர் மாரியம்மா அவர்கள் உள்ளே வந்ததும் முதலில் எல்லோரையும் பென்சிலை எடுத்து மேசையின் மீது வைக்கச் சொல்லி, பென்சில் கொண்டு வராதவர்களைத் தண்டிப்பார். அப்பொழுதெல்லாம் காதைப் பிடித்து திருகுவது உயர்ந்த தண்டனையாக இருந்தது. தினமும் 5 மாணவர்களாவது பென்சிலைத் தொலைத்துவிட்டு அடி வாங்குவார்கள். 
மாணவர்களிடமிருந்து அதிகபடியாகத் தொலைந்துபோகும் பொருளாக ஏன் இந்தப் பென்சில் இருக்கிறது? அதெப்படி பென்சில் இவ்வளவு எளிமையாக நம்மிடமிருந்து தொலைந்து போகிகிறது? பென்சிலுக்குக் கால்கள் முளைத்து ஓடி போய்விடுவதாக நம்பும் மாணவர்களும் இருக்கவே செய்கிறார்கள். பென்சிலைத் தொலைத்துவிட்டு வீடு திரும்பிய நாட்களில் என் அம்மா என்னிடம் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.

மாணவர்களிடமிருந்து அதிகபடியாகத் தொலைந்துபோகும் பொருளாக ஏன் இந்தப் பென்சில் இருக்கிறது? அதெப்படி பென்சில் இவ்வளவு எளிமையாக நம்மிடமிருந்து தொலைந்து போகிகிறது? பென்சிலுக்குக் கால்கள் முளைத்து ஓடி போய்விடுவதாக நம்பும் மாணவர்களும் இருக்கவே செய்கிறார்கள். பென்சிலைத் தொலைத்துவிட்டு வீடு திரும்பிய நாட்களில் என் அம்மா என்னிடம் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.
“எப்படிடா உன் பென்சிலுக்கு மட்டும் கால் முளைச்சி ஓடிருதா?”
அந்தக கேள்விக்கு அடுத்தபடியாக முதுகில் ஒரு அறையும் விழுந்துவிடும். இரவில் கடவுளிடம் கேட்டுருக்கிறேன், ஏன் என் பென்சிலுக்குக் கால்கள் முளைக்கிறதென்று. இன்றும் தெரியவில்லை அதற்கான பதில்.
இப்பொழுது ஆசிரியராக பணியாற்றும் காலத்தில் எப்பொழுதும் வகுப்பிற்குச் செல்லும்போதெல்லாம் கையில் 2 பென்சிலாவது கொண்டு செல்வதுண்டு. ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடம் போதிக்கும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் இந்தப் பழக்கம் வந்துவிட்டால் அது ஆச்சார்யப்படுவதற்கில்லை. எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர், ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பாசிரியராக இருப்பதால், அவர் எப்பொழுதும் ஒரு பெட்டி பென்சில்களுடன்தான் காட்சியளிப்பார். அந்தப் பென்சில்களைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு ஒன்றாம் ஆண்டு மாணவனைப் போல மிகப் பத்திரமாக வகுப்பிற்கு நுழைவார்.
“எங்க சார், இந்தப் பிள்ளைங்க ஒவ்வொருநாளும் பென்சலெ காணாடிச்சிட்டு பாடம் செய்யாம உக்காந்துருக்காங்க. என்னாத்தான் பண்ண முடியும் சொல்லுங்க? நம்பளே பென்சில் வாங்கிக் கொடுக்கனும் போல, அப்பத்தான் முடியும். அதான் கொடுத்துட்டு உடனே வாங்கி வச்சிக்குவேன் சார்”

மாணவர்களுக்குப் பென்சிலைத் தொலைப்பது ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டிருக்கிறது. பென்சிலைத் தொலைக்காமல் வீட்டிற்குச் செல்லும் மாணவர்கள் அனேகமாக மேல்வகுப்பு மாணவர்களாகத்தான் இருக்க முடியும். ஒன்றாம் – இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வீடு திரும்புகையில் ஒரு பென்சிலையாவது விட்டுவிட்டுத்தான் போகிறார்கள். கால் முளைத்த அவர்களின் பென்சில்கள் வகுப்பறை முழுவதும் பள்ளிக்கூடம் முழுவதும் சுற்றி அலைந்துகொண்டிருக்கக்கூடும்.
“சார் என் பென்சிலே காணம் சார். இங்கத்தான் வச்சேன்”
“சார் இவன் என் பென்சில எடுத்துக்கிட்டுக் கொடுக்கவே மாட்டறான் சார்”
“சார் என் பென்சிலெ எடுத்துக்கிட்டு அவனோட பென்சிலுன்னு சொல்றான் சார்”
வகுப்பினுள் நுழைந்ததும் இப்படிப்பட்ட பென்சில் புகார்கள் ஓயாமல் வந்துகொண்டே இருக்கும். பல மாணவர்கள் ஆசிரியர் மேசைக்கு முன் வந்து நின்றுவிடுவார்கள். குழந்தைத்தனமான சொற்களுடன் தன் பென்சில் தொலைந்த கதையை அல்லது திருட்டுப் போன பென்சிலைப் பற்றிப் பேசத் துவங்குவார்கள். நான் எல்லாவற்றையும் இரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பேன். ஆக மொத்தத்தில் ஒரு மாணவனின் பென்சில் தொலைந்த சம்பவத்தில் எல்லோருக்கும் பங்கு இருப்பது போல், சம்பந்தபட்ட மாணவன் எல்லாம் மாணவர்களின் மீது புகார் கொடுத்துக் கொண்டிருப்பான். எவ்வளவு திறமையாக விசாரித்தும் பரிசோதனை செய்தும் காணாமல் போன அந்தப் பென்சிலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
ஒருநாள் அடிக்கடி பென்சிலைத் தொலைக்கும் ஒரு மாணவனின் அம்மா வகுப்புவரை வந்து சண்டையிட்டார். தன் மகனின் பென்சில்கள் எங்கே போய்விடுகின்றன என்றும் யார் அதைத் திருடுகிறார்கள் என்றும் அதட்டிக் கொண்டிருந்தார். மாணவர்கள் மீது திருட்டு என்கிற சொல்பிரயோகம் கடுமையான ஒன்றாகவே கருதுகிறேன். சக மாணவனின் பென்சிலை எடுத்துக் கொள்வதற்குப் பெயர் எப்படித் திருட்டு என்று அவ்வளவு பெரிய சுமையை அவர்களின் சுட்டித்தனத்தின் மீது சுமத்த முடியும்?
என் பள்ளிப் பருவத்தில் சக மாணவர்களிடம் இருக்கும் வர்ணப் பென்சில்கள் மீது ஆசை அதிகமாக எழும், வீட்டிற்குச் செல்லும்போது அவனுடைய பெண்சில் பெட்டியிலிருந்து அந்தப் பெண்சிலை எடுத்துக் கொள்வேன். அதற்குப் பெயர் திருட்டு என்று பிறகுத்தான் பெரியவர்களால் கற்பிக்கப்பட்டன. ஆனால் நாம் அதைத் திருட்டு என்று அணுகுவதைவிட அவனுக்கு வேறு வகையில் அப்படிச் செய்வது தவறு என்று வலியுறுத்தி அவன் மனம் பாதிக்காதபடி செய்ய வேண்டும். ஒன்றாம் ஆண்டு மாணவர்களிடையே காணாமல் போகும் பென்சில் சம்பவங்களுக்கு அதை ஒரு திருட்டு என்று அவர்களின் குழந்தை உலகத்தைச் சிதைப்பதைவிட, காணாமல் போகும் பென்சில்களுக்குக் கால்கள் முளைத்துவிட்டது என்று சொல்லி அவர்களின் உலகத்தைக் காப்பாற்துவதே மேல் என்று நினைக்கிறேன்.
இன்றும் வகுப்பில் ஒரு பென்சில் காணாமல் போய்கொண்டே இருக்கின்றன. அந்தத் தொலைந்தபோன ஒவ்வொரு சம்பவங்களுக்கும் நான் ஒரு கதை சொல்ல வேண்டியிருக்கிறது, மாணவர்கள் அதை ஒரு திருட்டு என்று உணராதவரை அவர்களின் உலகத்தைக் காப்பாற்ற முயன்று வருகிறேன்.
நம்முடைய பால்ய வயதில் நாம் தொலைத்த பென்சில்களெல்லாம் இப்பொழுது திரும்ப கிடைத்தால் என்ன நேரும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? நமக்கு அருகில் ஒரு பென்சில் மலை உருவாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

“சார் என் பென்சிலுக்குக் கால் முளைச்சிருச்சி சார்” என்று சொல்லும் ஒரு மாணவனைப் பார்த்து என்ன சொல்லப் போகிறீர்கள்?
“டேய், அது இல்லைடா, எவனோ உன் பென்சிலே திருடிட்டாண்டா” என்று சொல்லப் போகிறார்களா? அவர்களின் கால் முளைத்த உலகத்தை உடைக்காதீர்கள்.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி : யுகமாயினி ஆகஸ்ட்
Friday, September 4, 2009
சரியாக இசை கேட்பது பற்றியான உயிர்மை விவாதங்களை முன் வைத்து ( இசை ஒழுங்குகளின் உச்சமும் பாமரர்களும்)
கடந்த உயிர்மை 3 இதழ்களிலும் இசை கேட்பதன் இலச்சணங்கள் குறித்து அதன் தொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதைக் வாசித்தேன். ஷாஜியின் இசை தொடர்பான கட்டுரைகள் பலவிதமான அனுபங்களையும் இசை குறித்த மரபறிவை கடந்த அணுகுமுறைகளையும் கற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம். ஷாஜியின் முழு தொகுப்பையும் தேடிக் கொண்டிருக்கிறேன். இங்கு மலேசியாவில் அது கிடைப்பதற்கான சாத்தியங்களை இன்னமும் கண்டறியவில்லை. முழு தொகுப்பையும் வாசிக்கும்போது ஒட்டுமொத்தமான இசையைப் பற்றிய விரிவான பார்வையும் பயிற்சியும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. 
மே உயிர்மை இதழில் பிரசுரமான சாருவின் ‘யுவன் சந்திரசேகருக்கான பதில்” கட்டுரையில் மிகவும் கவர்ந்த இசையைப் பற்றியான பல்வேறு புதிய தகவல்களையும் அதன் இணையத்தள இணைப்புகளையும் கொடுத்திருந்தார். இசையைப் பற்றி ஆரம்ப அறிவுள்ள பலருக்கு மேற்கத்திய, தமிழ்நாட்டைக் கடந்த, பூளோக வரையறைகளைக் கடந்த இசைகளை அறிமுகப்படுத்தும் என்பதிலிருந்து இசையின் பாமர இரசனை குறியீடுகளை உடைத்தெறியும் என்றே கருதுகிறேன்.
கடந்த 6 வருடமாக ரஹ்மான் இசைகளைக் கேட்டு வருகிறேன். அவர் பயன்படுத்தும் இசை கருவிகள், அதன் பயன்பாடுகள், எந்த இடத்தில் எந்த இசைக் கருவியை எவ்வளவு நேரம் பாவிக்கிறார் மேலும் அவரின் இசை குழுவில் உள்ளவர்களின் ஆளுமைகளை எப்படி ரஹ்மான் முக்கியத்துவப்படுத்தி பயன்படுத்திக் கொள்கிறார் என்று மட்டுமே கவனித்துள்ளேன். அதுவும் அரைகுறையாகத்தான். எடுத்துக்காட்டாக ரஹ்மான் இசையில் வெளிவந்த இந்திய தேசியப் பாடலான “ஜனகனமன” பாடல் ஆகும். பல பன்மொழி இசைகலைஞர்களையும் இசை கருவிகளின் ஆளுமைகளையும் ரஹ்மான் இணைத்துள்ளார். பாலைவன பிரதேசத்தின் பின்னனியில் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர்களையும் இசை கலைஞர்களையும் ஒன்றாக இணைத்து, ரஹ்மான் கடற்கரை பாறையின் மீது நின்றுகொண்டு பியானோ வாசிக்கும்பொது ஒரு நிமிடம் அழுது கரைந்து அந்த இசையில் சரணடைந்துவிடுகிறேன்.
பிரபல பாடகர்களான லதா மங்கேசஷ்கர், பட்டமல், பிம்ஷேன் ஜோஷி, டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, ஜக்ஜித் சிங், உஷ்தாட் ரஷ்சிட் கான், சுருதி சடோலிக்கார், உஷ்தாட் குலாம், சுதா ரகுநாதன், பாலசுப்ரமணியம், ஹரிஹரன், ஆஷா போஷ்லே, கவிதா கிருஷ்ணமூர்த்தி, உன்னிகிருஷ்ணன், நித்யா மேலும் இசை ஆளுமைகளான புல்லாங்குழல் ( ஹரி பிரசாத்) , சரோட் ( உஷ்தாட் அம்ஜாட், அமான் அலி, அயான் அலி) , கடம் ( விக்கு விநாயக்ராம், உமா சங்கர்) , வீனை (விஷ்வ மோஹன் பாட்), சித்ரவீனை ( ரவிகிரன்), சித்தார்( பண்டிட் கார்த்தி குமார், நிலாட்ரி குமார், வைலின் (குமரேஷ், கணேஷ்) என்று பல இசை கலைஞர்களின் ஒட்டு மொத்த ஆன்மாவாக தேசிய பாடலைக் கேட்கும்போது ஆரம்ப இசை இரசனையாளர்களின் உடல் சிலிர்த்து வைக்கும். இசையைப் பற்றி ஆழமான நுட்பமான விரிவான அனுபவமும் பயிற்சியும் இல்லாதவர்களுக்கு இப்படி உடல் சிலிர்த்து இரசிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியபோவதில்லை.
சாரு குறிப்பிட்டது போல இசை கேட்கும் இலச்சணங்கள் குறித்து பொதுவில் எல்லோர் மேலும் வீசுவது, அல்லது பூளோக வரையறை தாண்டாத இசை பைத்தியங்கள் மீது வீசுவதோ எந்த அளவிற்கு ஏற்புடைமை என்று பார்க்க வேண்டியிருக்கிறது. துறை சார்ந்த சொல்லாடல்களைப் பயன்படுத்தி சாரு அவர்கள் பல இசை மேதைகளைப் பற்றியும், அந்த இசை நுட்பங்களைப் பற்றியும் எந்த மாதிரியான இசைகளைக் கேட்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். அது அவரின் இசை குறித்தான தேடலையும், அக்கறையையும் காட்டுகிறது. இருக்கட்டும். வாசிக்க தெரிந்த இசை ரசிகர்கள் அவரின் அக்கறைகேற்றவாறு மொராக்கோவையோ, அசிங்கத்தின் தொட்டிலையோ, ராய் இசையையோ கேட்டறிந்து உணரலாம், இதுவரை கேட்டு வந்த அடித்தட்டு “சுரண்டலின் மன்னன்” தேவாவின் இசையை ஒப்பிட்டு காரி உமிழலாம். ஆனால் பாமரர்கள் என்று பல மேதாவிகளால் வகைப்படுத்தப்படும் படிப்பறிவு இல்லாத மக்களிடம் எப்படி இசை குறித்த உங்களின் ஆளுமைத்தனங்களைப் புகுத்த போகிறீர்கள்? எனக்கு தெரிந்த இங்குள்ள(மலேசியாவில்) ஒரு ஊரில் முன்பொரு காலகட்டத்தில் இளையராஜாவைத் தாண்டாத ஒரு மக்கள் கூட்டம் இருந்தது. அதைப் பற்றி ஒரு சிறுகதையே எழுதலாம்.
அந்தக் குடியிருப்புப் பகுதியைப் பத்து டுவா என்று சொல்வார்கள். 9 வயதுவரை நானும் அங்குத்தான் இருந்தேன். மலாய்க்காரர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. தமிழர்கள் ஒரு 30 குடும்பங்கள் அங்கு வசித்தனர். எல்லோர் வீட்டிலும் காலையில் இளையராஜாவின் ஏதாவது ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்கலாம். எங்கள் வீட்டில் அப்பொழுது வானொலி இல்லாததால் ஓசியிலேயே இளையராஜாவின் பாடலை (எந்தவித இசை குறித்தான அறிவும் இல்லாதவனாக) கேட்பேன். நாங்கள் காலையில் பள்ளிக்குக் கிளம்ப துவங்கும் அதிகாலை பொழுதிலே ஏதோ ஒரு வீட்டில், “சென்பகமே சென்பகமே” பாடல் சத்தமாக ஒலிக்கத் துவங்கும். மிகவும் குறுகிய பூளோக வரையறையைக் கடக்காத மக்களின் இரசனை இலையராஜாவின் இசையாகவே இருந்தது.
8 மணிநேர தொழுற்சாலை வேலை முடிந்து, ஒரு இயந்திரத்திற்கு நிகராக நேர்த்தியான இயக்கங்களுடன், சலிப்பூட்டும் கருவிகளுடன் இருந்துவிட்டு வீடு திரும்பும் அவர்களின் உலகை (எந்தவித இசை நுட்பமும், பயிற்சியும் அற்றவர்களான) மகிழ்ச்சிப்படுத்தியது, நிம்மதியை ஏற்படுத்தியது, களைப்பை மறக்கடித்தது தமிழ்நாட்டு கலாச்சார இசைவெளியைக் கடக்காத இளையராஜாவின் இசைத்தான். இது வரலாற்றுக் குற்றம் என்றும், முட்டாள் மக்களின் அறிவின்மை என்றும் பாமரத்தன இசை அனுபவம் என்றும் சில கிறுகெடுத்த ஆளுமைகள் வகைப்படுத்தலாம். தவறில்லை. தொழிலாளர்களால் ஆன (பெரும்பான்மை மலாய்க்காரர்களோடு அடிமைத்தனமான சமரசங்களுக்கும் ஆளாகி) இந்த நிலப்பரப்பில் வாழ்ந்திருந்தால், அவர்களின் வாழ்வை அந்த வாழ்வில் அவர்கள் கேட்டுப் பழகிய ஒரு இசையை அந்த இசை கேட்கும் இலச்சணங்களை என்னனென்று சொல்ல வேண்டும் என்று புரிந்திருக்கும்.
இன்று அந்தக் குடியிருப்பு மக்கள் புலம்பெயர்ந்து நகரத்தில் சிதைந்துவிட்டார்கள். ஆளுக்கொரு திசைகளில் வாழ்வு மாற்றம் ஏற்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தற்செயலாக அவர்களின் யாரேனும் ஒருவர் வீட்டிற்குப் போனாலும், இன்னமும் இளையராஜா பாடலை அவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் மடத்தனமா? அல்லது பெரிய பெரிய இசைக்கருவிகளில் பாடல் கேட்காத அவர்களின் இழப்புகளா?குற்றமா? நீங்கள் சொல்லும் இசை பயிற்சிகள் ஒரு பொது புத்தியென நிறுவுவது இன்னமும் தனது இசைக் கலாச்சாரத்தில் ஊறிப் போன, அதிலிருந்து அவர்களை மீட்க முடியாத சாத்தியங்களுடன் அதுனூடே வாழ்ந்து ஒன்றாகிவிட்ட ஒரு சமூகத்த்தினரையோ அல்லது ஒரு வகையினரையோ புறகணிப்பதாகக் கருதப்பட வாய்ப்புண்டு.
சாரு சொல்வதைப் போல பன்மொழி, கலாச்சார இசைகளைக் கேட்டு இரசிக்கும் அல்லது பழகும் ஆற்றலும் வாய்ப்பும் இப்பொழுதுள்ள இளைஞர்களுக்குச் சாத்தியப்படும். ஆனால் அதே வேளையில் இந்த வாய்ப்பு கிட்டாமலே இசைக் கேட்பதை வாழ்வின் ஒரு அனுபனமாகவே கருதி இன்றும் அதிலிருந்து வெளிவராத சிலரை “இசை பயிற்சியில்லாத முட்டாள்கள்” என்று சொன்னால், அவர்களை(அப்படிச் சொல்பவர்களை) எதைக் - - - - - - - - - - - - - - - - - - - - - - - சமூகம்தான் தீர்மானிக்க வேண்டும். மேலும் ஒரு சிலர் இசை கேட்பதை ஒரு பொழுது போக்காக பாவிக்கிறார்கள். வாழ்வின் ஒரு தருணமாக, அதிசயமாக இசை கேட்பதை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த இசைக் கேட்கும் வாழ்வனுபத்தில்கூட, “பயிற்சி” , வழிமுறை” என்று சொல்லி அவர்களை பயமுறுத்துவது போலவே தோன்றுகிறது. மனிதன் இன்னமும் சுதந்திரமாகச் செய்யக்கூடியவையாக அவனவனின் பொழுது போக்குகளைத்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதிலும் பயிற்சி, ஒழுங்கு, என்று சொல்லி வைத்தால் எல்லாவற்றிலும் தேர்ச்சிப் பெற்ற தேர்ச்சிப் பெறாத என்கிற அளவுகோல்கள் வந்து சிலரை முட்டாளாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இசையைப் பற்றி தெரிந்து கொள்வதும் இசையைப் பற்றி உரையாடுவதும் என்றுமே தவறென சொல்ல முடியாது. இசையை வெறும் நுகர்வு பொருளாகப் பார்க்கும் மனிதர்களும் நியாயமானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இசை பல்வேறு மனிதர்களால் பலவகையில் புரிந்து கொண்டும் அனுபவிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அந்த நிதர்சனத்தில் தற்போதையை “இசை ஒழுங்குகளை” கொண்டு அவர்களை இசைபாமரர்கள் இசை ஆளுமைகள் என்று வகைப்படுத்துவதுதான் அறியாமை என்று நினைக்கிறேன்.
ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

மே உயிர்மை இதழில் பிரசுரமான சாருவின் ‘யுவன் சந்திரசேகருக்கான பதில்” கட்டுரையில் மிகவும் கவர்ந்த இசையைப் பற்றியான பல்வேறு புதிய தகவல்களையும் அதன் இணையத்தள இணைப்புகளையும் கொடுத்திருந்தார். இசையைப் பற்றி ஆரம்ப அறிவுள்ள பலருக்கு மேற்கத்திய, தமிழ்நாட்டைக் கடந்த, பூளோக வரையறைகளைக் கடந்த இசைகளை அறிமுகப்படுத்தும் என்பதிலிருந்து இசையின் பாமர இரசனை குறியீடுகளை உடைத்தெறியும் என்றே கருதுகிறேன்.
கடந்த 6 வருடமாக ரஹ்மான் இசைகளைக் கேட்டு வருகிறேன். அவர் பயன்படுத்தும் இசை கருவிகள், அதன் பயன்பாடுகள், எந்த இடத்தில் எந்த இசைக் கருவியை எவ்வளவு நேரம் பாவிக்கிறார் மேலும் அவரின் இசை குழுவில் உள்ளவர்களின் ஆளுமைகளை எப்படி ரஹ்மான் முக்கியத்துவப்படுத்தி பயன்படுத்திக் கொள்கிறார் என்று மட்டுமே கவனித்துள்ளேன். அதுவும் அரைகுறையாகத்தான். எடுத்துக்காட்டாக ரஹ்மான் இசையில் வெளிவந்த இந்திய தேசியப் பாடலான “ஜனகனமன” பாடல் ஆகும். பல பன்மொழி இசைகலைஞர்களையும் இசை கருவிகளின் ஆளுமைகளையும் ரஹ்மான் இணைத்துள்ளார். பாலைவன பிரதேசத்தின் பின்னனியில் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர்களையும் இசை கலைஞர்களையும் ஒன்றாக இணைத்து, ரஹ்மான் கடற்கரை பாறையின் மீது நின்றுகொண்டு பியானோ வாசிக்கும்பொது ஒரு நிமிடம் அழுது கரைந்து அந்த இசையில் சரணடைந்துவிடுகிறேன்.

பிரபல பாடகர்களான லதா மங்கேசஷ்கர், பட்டமல், பிம்ஷேன் ஜோஷி, டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, ஜக்ஜித் சிங், உஷ்தாட் ரஷ்சிட் கான், சுருதி சடோலிக்கார், உஷ்தாட் குலாம், சுதா ரகுநாதன், பாலசுப்ரமணியம், ஹரிஹரன், ஆஷா போஷ்லே, கவிதா கிருஷ்ணமூர்த்தி, உன்னிகிருஷ்ணன், நித்யா மேலும் இசை ஆளுமைகளான புல்லாங்குழல் ( ஹரி பிரசாத்) , சரோட் ( உஷ்தாட் அம்ஜாட், அமான் அலி, அயான் அலி) , கடம் ( விக்கு விநாயக்ராம், உமா சங்கர்) , வீனை (விஷ்வ மோஹன் பாட்), சித்ரவீனை ( ரவிகிரன்), சித்தார்( பண்டிட் கார்த்தி குமார், நிலாட்ரி குமார், வைலின் (குமரேஷ், கணேஷ்) என்று பல இசை கலைஞர்களின் ஒட்டு மொத்த ஆன்மாவாக தேசிய பாடலைக் கேட்கும்போது ஆரம்ப இசை இரசனையாளர்களின் உடல் சிலிர்த்து வைக்கும். இசையைப் பற்றி ஆழமான நுட்பமான விரிவான அனுபவமும் பயிற்சியும் இல்லாதவர்களுக்கு இப்படி உடல் சிலிர்த்து இரசிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியபோவதில்லை.
சாரு குறிப்பிட்டது போல இசை கேட்கும் இலச்சணங்கள் குறித்து பொதுவில் எல்லோர் மேலும் வீசுவது, அல்லது பூளோக வரையறை தாண்டாத இசை பைத்தியங்கள் மீது வீசுவதோ எந்த அளவிற்கு ஏற்புடைமை என்று பார்க்க வேண்டியிருக்கிறது. துறை சார்ந்த சொல்லாடல்களைப் பயன்படுத்தி சாரு அவர்கள் பல இசை மேதைகளைப் பற்றியும், அந்த இசை நுட்பங்களைப் பற்றியும் எந்த மாதிரியான இசைகளைக் கேட்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். அது அவரின் இசை குறித்தான தேடலையும், அக்கறையையும் காட்டுகிறது. இருக்கட்டும். வாசிக்க தெரிந்த இசை ரசிகர்கள் அவரின் அக்கறைகேற்றவாறு மொராக்கோவையோ, அசிங்கத்தின் தொட்டிலையோ, ராய் இசையையோ கேட்டறிந்து உணரலாம், இதுவரை கேட்டு வந்த அடித்தட்டு “சுரண்டலின் மன்னன்” தேவாவின் இசையை ஒப்பிட்டு காரி உமிழலாம். ஆனால் பாமரர்கள் என்று பல மேதாவிகளால் வகைப்படுத்தப்படும் படிப்பறிவு இல்லாத மக்களிடம் எப்படி இசை குறித்த உங்களின் ஆளுமைத்தனங்களைப் புகுத்த போகிறீர்கள்? எனக்கு தெரிந்த இங்குள்ள(மலேசியாவில்) ஒரு ஊரில் முன்பொரு காலகட்டத்தில் இளையராஜாவைத் தாண்டாத ஒரு மக்கள் கூட்டம் இருந்தது. அதைப் பற்றி ஒரு சிறுகதையே எழுதலாம்.

அந்தக் குடியிருப்புப் பகுதியைப் பத்து டுவா என்று சொல்வார்கள். 9 வயதுவரை நானும் அங்குத்தான் இருந்தேன். மலாய்க்காரர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. தமிழர்கள் ஒரு 30 குடும்பங்கள் அங்கு வசித்தனர். எல்லோர் வீட்டிலும் காலையில் இளையராஜாவின் ஏதாவது ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்கலாம். எங்கள் வீட்டில் அப்பொழுது வானொலி இல்லாததால் ஓசியிலேயே இளையராஜாவின் பாடலை (எந்தவித இசை குறித்தான அறிவும் இல்லாதவனாக) கேட்பேன். நாங்கள் காலையில் பள்ளிக்குக் கிளம்ப துவங்கும் அதிகாலை பொழுதிலே ஏதோ ஒரு வீட்டில், “சென்பகமே சென்பகமே” பாடல் சத்தமாக ஒலிக்கத் துவங்கும். மிகவும் குறுகிய பூளோக வரையறையைக் கடக்காத மக்களின் இரசனை இலையராஜாவின் இசையாகவே இருந்தது.
8 மணிநேர தொழுற்சாலை வேலை முடிந்து, ஒரு இயந்திரத்திற்கு நிகராக நேர்த்தியான இயக்கங்களுடன், சலிப்பூட்டும் கருவிகளுடன் இருந்துவிட்டு வீடு திரும்பும் அவர்களின் உலகை (எந்தவித இசை நுட்பமும், பயிற்சியும் அற்றவர்களான) மகிழ்ச்சிப்படுத்தியது, நிம்மதியை ஏற்படுத்தியது, களைப்பை மறக்கடித்தது தமிழ்நாட்டு கலாச்சார இசைவெளியைக் கடக்காத இளையராஜாவின் இசைத்தான். இது வரலாற்றுக் குற்றம் என்றும், முட்டாள் மக்களின் அறிவின்மை என்றும் பாமரத்தன இசை அனுபவம் என்றும் சில கிறுகெடுத்த ஆளுமைகள் வகைப்படுத்தலாம். தவறில்லை. தொழிலாளர்களால் ஆன (பெரும்பான்மை மலாய்க்காரர்களோடு அடிமைத்தனமான சமரசங்களுக்கும் ஆளாகி) இந்த நிலப்பரப்பில் வாழ்ந்திருந்தால், அவர்களின் வாழ்வை அந்த வாழ்வில் அவர்கள் கேட்டுப் பழகிய ஒரு இசையை அந்த இசை கேட்கும் இலச்சணங்களை என்னனென்று சொல்ல வேண்டும் என்று புரிந்திருக்கும்.

இன்று அந்தக் குடியிருப்பு மக்கள் புலம்பெயர்ந்து நகரத்தில் சிதைந்துவிட்டார்கள். ஆளுக்கொரு திசைகளில் வாழ்வு மாற்றம் ஏற்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தற்செயலாக அவர்களின் யாரேனும் ஒருவர் வீட்டிற்குப் போனாலும், இன்னமும் இளையராஜா பாடலை அவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் மடத்தனமா? அல்லது பெரிய பெரிய இசைக்கருவிகளில் பாடல் கேட்காத அவர்களின் இழப்புகளா?குற்றமா? நீங்கள் சொல்லும் இசை பயிற்சிகள் ஒரு பொது புத்தியென நிறுவுவது இன்னமும் தனது இசைக் கலாச்சாரத்தில் ஊறிப் போன, அதிலிருந்து அவர்களை மீட்க முடியாத சாத்தியங்களுடன் அதுனூடே வாழ்ந்து ஒன்றாகிவிட்ட ஒரு சமூகத்த்தினரையோ அல்லது ஒரு வகையினரையோ புறகணிப்பதாகக் கருதப்பட வாய்ப்புண்டு.
சாரு சொல்வதைப் போல பன்மொழி, கலாச்சார இசைகளைக் கேட்டு இரசிக்கும் அல்லது பழகும் ஆற்றலும் வாய்ப்பும் இப்பொழுதுள்ள இளைஞர்களுக்குச் சாத்தியப்படும். ஆனால் அதே வேளையில் இந்த வாய்ப்பு கிட்டாமலே இசைக் கேட்பதை வாழ்வின் ஒரு அனுபனமாகவே கருதி இன்றும் அதிலிருந்து வெளிவராத சிலரை “இசை பயிற்சியில்லாத முட்டாள்கள்” என்று சொன்னால், அவர்களை(அப்படிச் சொல்பவர்களை) எதைக் - - - - - - - - - - - - - - - - - - - - - - - சமூகம்தான் தீர்மானிக்க வேண்டும். மேலும் ஒரு சிலர் இசை கேட்பதை ஒரு பொழுது போக்காக பாவிக்கிறார்கள். வாழ்வின் ஒரு தருணமாக, அதிசயமாக இசை கேட்பதை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த இசைக் கேட்கும் வாழ்வனுபத்தில்கூட, “பயிற்சி” , வழிமுறை” என்று சொல்லி அவர்களை பயமுறுத்துவது போலவே தோன்றுகிறது. மனிதன் இன்னமும் சுதந்திரமாகச் செய்யக்கூடியவையாக அவனவனின் பொழுது போக்குகளைத்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதிலும் பயிற்சி, ஒழுங்கு, என்று சொல்லி வைத்தால் எல்லாவற்றிலும் தேர்ச்சிப் பெற்ற தேர்ச்சிப் பெறாத என்கிற அளவுகோல்கள் வந்து சிலரை முட்டாளாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இசையைப் பற்றி தெரிந்து கொள்வதும் இசையைப் பற்றி உரையாடுவதும் என்றுமே தவறென சொல்ல முடியாது. இசையை வெறும் நுகர்வு பொருளாகப் பார்க்கும் மனிதர்களும் நியாயமானவர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இசை பல்வேறு மனிதர்களால் பலவகையில் புரிந்து கொண்டும் அனுபவிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அந்த நிதர்சனத்தில் தற்போதையை “இசை ஒழுங்குகளை” கொண்டு அவர்களை இசைபாமரர்கள் இசை ஆளுமைகள் என்று வகைப்படுத்துவதுதான் அறியாமை என்று நினைக்கிறேன்.
ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
Thursday, September 3, 2009
90களின் கவனிக்கத்தக்க நாவல்கள்
அண்மையில் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கும்/ வாசித்துவிட்ட சில குறிப்பிடத்தக்க நாவல்கள் இவை. அநேகமாக மறுவாசிப்பின்றி கவனிக்கப்படாமல் போய்விட்ட நாவல்களாக இவை இருக்கலாம். மீட்டுணர்தல் – மறுவாசிப்பு புதிய களங்களை உற்பத்திக்கும். 
1.மஞ்சள் வெளி
எழுதியவர்: சி.ஆர்.ரவீந்திரன்
தமிழில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, குறிப்பாக இனக்குழு என்று அறியத்தகும் சமூகத்தை, அதன் பழக்க வழக்கங்களை சித்தரிக்கும் முறையில் சில பதிவுகளுடன் “மஞ்சள் வெளி” குறவர் சமூகத்தின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். பாப்பாத்தி என்கிற கதாபாத்திரத்தின் வழியே மார்க்சியமும் ஒரு வகையில் இந்தக் குடும்பத்தில் ஒரு நீருற்றுப் போல குடும்பத்தின் அகப்பண்போடு முரண் இன்றிக் கலக்கிறது.
எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் : கொங்கு நாட்டுத் தமிழில் விளைந்த செங்கரும்புப் படைப்பாளி. எனினும் பிற சமூகங்களைப் பற்றிய நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.

2.வெயில் மழை
எழுதியவர்: சி.ஆர்.ரவீந்திரன்
மலைப் பிஞ்செனக் கல்லுடைக்கும், மலையைப் பிளக்கும், சுரங்கத் தொழிலாளிகளின் வாழ்க்கையைத் தனக்கே உரிய பாசாங்கற்ற நடையில் கனமாக இந்நாவலில் படைத்துள்ளார்.
3.தொலைந்து போனவர்கள்
எழுதியவர்: சா.கந்தசாமி
எளிய நடை, கூடிய மட்டிலும் குறைவாக எழுதும் இயல்பு. தான் வியக்காமல் பாத்திரங்களைப் படைக்கும் திறமை. மனோபாவங்களாலான மனிதர்களைப் புலப்படுத்தும் கதை. பால்ய காலத்திலிருந்து பிற்காலத்திற்கு நீண்ட பாதையில் ஓரிடத்தில் இணையும் நினைவுகளின் நுட்பத்தைக் கதை விரிவாக்குகிறது. தொலைந்தவர்களின் இருப்பு பலமாக கனக்கிறது கதாபாத்திரிங்களில்.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

1.மஞ்சள் வெளி
எழுதியவர்: சி.ஆர்.ரவீந்திரன்
தமிழில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, குறிப்பாக இனக்குழு என்று அறியத்தகும் சமூகத்தை, அதன் பழக்க வழக்கங்களை சித்தரிக்கும் முறையில் சில பதிவுகளுடன் “மஞ்சள் வெளி” குறவர் சமூகத்தின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். பாப்பாத்தி என்கிற கதாபாத்திரத்தின் வழியே மார்க்சியமும் ஒரு வகையில் இந்தக் குடும்பத்தில் ஒரு நீருற்றுப் போல குடும்பத்தின் அகப்பண்போடு முரண் இன்றிக் கலக்கிறது.
எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் : கொங்கு நாட்டுத் தமிழில் விளைந்த செங்கரும்புப் படைப்பாளி. எனினும் பிற சமூகங்களைப் பற்றிய நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.

2.வெயில் மழை
எழுதியவர்: சி.ஆர்.ரவீந்திரன்
மலைப் பிஞ்செனக் கல்லுடைக்கும், மலையைப் பிளக்கும், சுரங்கத் தொழிலாளிகளின் வாழ்க்கையைத் தனக்கே உரிய பாசாங்கற்ற நடையில் கனமாக இந்நாவலில் படைத்துள்ளார்.

3.தொலைந்து போனவர்கள்
எழுதியவர்: சா.கந்தசாமி
எளிய நடை, கூடிய மட்டிலும் குறைவாக எழுதும் இயல்பு. தான் வியக்காமல் பாத்திரங்களைப் படைக்கும் திறமை. மனோபாவங்களாலான மனிதர்களைப் புலப்படுத்தும் கதை. பால்ய காலத்திலிருந்து பிற்காலத்திற்கு நீண்ட பாதையில் ஓரிடத்தில் இணையும் நினைவுகளின் நுட்பத்தைக் கதை விரிவாக்குகிறது. தொலைந்தவர்களின் இருப்பு பலமாக கனக்கிறது கதாபாத்திரிங்களில்.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
சிறுகதை: தங்கவேலுவின் 10ஆம் எண் மலக்கூடம்
கொஞ்சம்கூட பிசிறில்லாத பளிங்கு கற்கள் வெறித்துக் கிடக்க, நவீன கழிவறை மிக நேர்த்தியான ஒழுங்குடன் கண்ணாடி தரை படர பெரிய சவாலாக இருந்தது. மெதுவாக பாலித்தின் கதவைத் தள்ள வேண்டும். ஒரே மையத்தில் போய் குவிந்து கொள்கின்ற கதவு. மீண்டும் இழுத்தால் பழைய நிலைக்கே வந்து கழிவறையை மூடிக் கொள்ளும்.
இதை இழுத்து உள்ளே நுழையவே சிரமமாக இருந்துவிடுகிறது. சடசடவென ஒரு சத்தம் வேறு. உள்ளே நுழைந்து கதவை உள்தாழ்ப்பாள் போடுவதற்குள் வயிற்றிலிருந்து கழிவு கீழே ஒழுகிவிடும் போல. கொக்கி போல ஒன்று, அதை வலது பக்கமாக நகர்த்தி கொக்கியின் வாயை மற்றுமொரு இரும்பில் சொருக வேண்டும். பல சமயங்களில் கொக்கி அந்த இரும்பில் சிக்கிக் கொள்ளாமல் பாதியிலேயே நின்றுவிடும் அதைக் கவனிக்கத் தவறும் கணங்களில் கதவை மூடாமலேயே வேட்டியைக் கழற்றி கழிவு தொட்டியில் ஏறி அமர்ந்து கொள்வேன். அப்படியொரு அலட்சியமாக இருந்துவிட்ட பொழுதில்தான் வீட்டிலுள்ளவர்களுக்குப் பல மாதங்களாக நான் அனுபவித்த மலப் போராட்டத்தைப் பற்றித் தெரிய வந்தது.
“ஐயோ. . அம்மா! தாத்தாவே பாரு. . கசம் கசம்!”
இதை இழுத்து உள்ளே நுழையவே சிரமமாக இருந்துவிடுகிறது. சடசடவென ஒரு சத்தம் வேறு. உள்ளே நுழைந்து கதவை உள்தாழ்ப்பாள் போடுவதற்குள் வயிற்றிலிருந்து கழிவு கீழே ஒழுகிவிடும் போல. கொக்கி போல ஒன்று, அதை வலது பக்கமாக நகர்த்தி கொக்கியின் வாயை மற்றுமொரு இரும்பில் சொருக வேண்டும். பல சமயங்களில் கொக்கி அந்த இரும்பில் சிக்கிக் கொள்ளாமல் பாதியிலேயே நின்றுவிடும் அதைக் கவனிக்கத் தவறும் கணங்களில் கதவை மூடாமலேயே வேட்டியைக் கழற்றி கழிவு தொட்டியில் ஏறி அமர்ந்து கொள்வேன். அப்படியொரு அலட்சியமாக இருந்துவிட்ட பொழுதில்தான் வீட்டிலுள்ளவர்களுக்குப் பல மாதங்களாக நான் அனுபவித்த மலப் போராட்டத்தைப் பற்றித் தெரிய வந்தது.“ஐயோ. . அம்மா! தாத்தாவே பாரு. . கசம் கசம்!”
“ஏண்டா கத்தறே! என்னாச்சி?. . அட ஆண்டவா!”
பேரன் கதவைத் தள்ளியதும், அரைகுறையாக இரும்பைப் பற்றியிருந்த கொக்கி டமாரென்று விலகி, வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது என் மல சமாதியை. தரையிலிருந்து 2 அடி உயரத்திற்கு எழுந்து வாய் பிளந்து நின்றிருந்த கழிவுத் தொட்டியில் ஏறி மேலும் உயரமாக அமர்ந்து கொண்டு இருந்த என் கோலத்தைப் பார்த்து எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.
“என்ன மாமா? இப்படி உக்காந்துருக்கீங்க? அட ஆண்டவா!”
அவ்வளவு விரைவாக உயரமான கழிவுத் தொட்டியிலிருந்து இறங்கிவிட முடியாது. பக்கத்திலிருக்கும் நீர்த் தொட்டியின் விளிம்பைப் பிடித்துக் கொண்டுதான் ஒவ்வொரு காலாக தரையில் இறக்கி நிமிர வேண்டும். மருமகளும் பேரனும் பார்த்துக் கொண்டிருக்க அவிழ்ந்த வேட்டியுடன் தடுமாறிக் கொண்டிருந்த என் உலகம் அன்றுதான் வெடித்து சின்னாம்பின்னமாக மலம் போல ஒழுகிப் போனது.
“ஒன்னுமில்ல. . நீங்க போங்க! ஐயோ. .”
வாயிலிருந்து வார்த்தைகள் நீர்ப் போல சலசலவென ஒடிந்து விழுந்தன. வேட்டியை மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு கதவைப் படாரென்று அடைத்து மூடினேன். தரையில் நீர் கொத்து அங்குமிங்குமாகத் தேங்கியிருந்தன. கால் தொடையில் ஏதோ பிசுபிசுவென ஒட்டிக் கொண்டிருந்தது. குனிந்து கீழே பார்த்தேன். மல நீர் கால் முட்டிவரை வந்து ஒழுகிக் கொண்டிருந்தது. அசௌகரிகம். அதன் மொத்த சுயரூபத்தையும் இந்தக் கழிவறையில் தினமும் சந்தித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் சாப்பிட்டப் பிறகு தினக் கடமையாக இந்தக் கழிவறைக்குள் நுழைய வேண்டும் என்று ஏற்படும் அட்டவனை சுழற்சி அச்சுறுத்தலாக இருக்கின்றது.
மருமகள் வெளியில்தான் நின்று கொண்டிருந்தாள். என் மூத்த மகனுடன் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதும் நன்றாகவே கேட்டது.
“என்னாங்க! கதவெ சாத்தாமே உள்ளே போய்க்கிட்டு இருக்காரு. யாராவது வந்தா என்னா ஆவும்? மானமே போய்டும் போல இவரே வச்சிக்கிட்டு. எப்படி உக்காந்திருந்தாருனு பாத்திங்கனா மயக்கமே போட்டு விழுந்துருவீங்க”
“இப்பெ யேன் இத பெருசா பேசிக்கிட்டு இருக்கெ? எப்படி உக்காந்தாரு?”
“தொட்டி மேல அதை வச்சுத்தானே உக்காரனும். இவரு அதுக்கும் மேல ஏறி கால வச்சி உக்காந்து போறாரு. . பல தடவெ நான் டொய்லேட் கழுவும் போது பாத்திருக்கேன், அந்தத் தொட்டி இடுக்குலலாம் பீ இருக்கும். . அப்பயே சந்தேகமா இருந்துச்சிங்க”
“சரி விடு! சொல்லிக்கலாம்”
மனம் படபடவென துடித்துக் கொண்டிருந்தது. கழிவறைக்குள்ளே அபாரமாக எரிந்து கொண்டிருக்கும் வெளிச்சத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். குளியலறையில் எங்கோ ஏதோ ஓர் இடத்திலிருந்து நீர் ஒழுகும் சத்தம் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. வெளியே சென்றால் இவர்களின் முகத்தைப் பார்க்க வேண்டும். அந்தத் திராணி அற்றுப் போயிருந்தது. உடல் முழுக்க அறுவறுப்பான ஒரு பிம்பம் நெடித்து வளர்ந்து பேயோசையாக எனக்குள் சரிந்து கொள்வது போல திக்பிரமை.

“ப்பா! ப்ப்பா! வெளிய வாங்க”
வேட்டியைச் சரி செய்துவிட்டு, செயற்கையாக ஏதோ முனகிக் கொண்டே கதவை மெல்ல அதன் இரும்பு தாழ்ப்பாளிலிருந்து விலக்கினேன். எதிரில் மகன் என்னை மேலேயும் கீழேயும் பார்த்துக் கொண்டிருந்தான். வேட்டியின் நனைந்திருந்த பகுதியை உற்றுப் பார்த்துவிட்டு நெருங்கினான்.
“யேன் ப்பா. . எப்படி உக்காந்து நீங்க டொய்லேட் போறிங்க? இது மேல கால் வச்சா உக்காருவாங்க? என்னா இது? நல்லா தாராளமா இப்படி இது மேல உக்காந்துகிட்டு போலாமே? இப்படித்தான் போய்கிட்டு இருக்கிங்களா?”
“அட போடா! எப்படி வசதி வருதோ அப்படித்தான் போவ முடியும். .”
அங்கிருந்து மெல்ல அகன்றேன். மகனின் ஆத்திரமான குரல் பின் தொடர்ந்தது. அதைச் சட்டை செய்து கொள்ளாதது போல பயத்தை உள்ளுக்குள்ளே அடக்கிக் கொண்டு வரவேற்பறைக்குள் நுழைந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.
“ப்பா.. நீங்க உங்க இஸ்த்ததுக்குச் செய்யாதீங்க. புரியுதா? அது அந்த மாதிரி உக்காந்து போற தொட்டித்தான். அதுலே போய் கால் வச்சி ஏறி உக்கார முடியாது. வீணா போயிறும். நீங்க உயரமா உக்காந்துக்கிட்டு போறதுனாலே பீ கீழலாம் வந்து விழுந்துருது. யேன் இப்படிப் பண்றீங்க?”
அவனுடைய சொற்கள் எங்கோ தூரத் தேசத்து பாலைவனத்தில் நீருக்காக அலைந்து கொண்டிருப்பது போன்ற விரக்தியில் உதிர்ந்து கரைந்தன. அதன் கரைதலில் அக்கறை இல்லாதவன் போல் முனகல் தீராத பாவனையுடன் கண்களை இறுக மூடிக் கொண்டு உறங்க முயன்றேன். பறி போய்விட்ட தன்மானத்தைச் சரிக்கட்டிக் கொள்ள இதுதான் சரியான முயற்சியாக இருக்கக்கூடும். இங்கு வந்ததிலிருந்து எல்லாமே செயற்கையான வாழ்வுதான். மலம் கழிப்பது முதல் எல்லாக் கடமைகளும் ஒழுங்குத் தவறாமல் பிறர் விருப்பப்படிதான் நடக்க வேண்டும். நான் எனக்காக வாழ்ந்து பல நாட்களாகிவிட்டிருக்கும் போல. யாரோ எப்பொழுதும் என் முதுகில் சாட்டையால் அடித்து வழிநடத்துவது போல உணரப்படுகிறது. எனக்குள் இவ்வளவு காலம் இயங்கிக் கொண்டிருந்த உந்து சக்தி வலுவிழந்து ஏதோ ஒரு பொழுதில் இந்தக் கழிவறை போராட்டத்தில்தான் காணாமல் போயிருக்கக்கூடும்.
“அபார வெளிச்சம்! கண்ணுலாம் கூசுது! ஏறி இந்தப் பீ தொட்டியில உக்காரனும், காலுலாம் நோவுது! தொட்டியோட விளிம்புல காலெ வச்சி உக்காந்து முக்கனும். ஒரு பக்கம் கால் நழுவிட்டா தொட்டியோட வாயில டமார்னு விழுந்து பிட்டம் ரெண்டா உடைஞ்சிருமோனு பயம், இன்னொரு பக்கம் பின்னாலேருந்து பீ கீழே உழுந்துருமோனு பயம், கண்களெ கூசும் வெளிச்சம் தலைக்கு மேல விரிஞ்சி கிடக்க அப்பத்தான் தொடை சுளிர்னு வலிக்கும். கீழே எறங்கி காலெ நல்ல உதறிட்டு மீண்டும் மேல ஏறி உக்காந்து உயிரோட போராடனும்!”
தோட்டத்தில் இருந்த காலம்வரை எல்லாமும் சரியாகத்தான் நிகழ்ந்தன. நில அடுக்குகளில் நிமிடத்திற்கு ஒரு மாற்றம் ஏற்படுவது போல வாழ்க்கை அடுக்குகள் அவ்வப்போது தன்னை மாற்றியமைத்துக் கொள்கின்றன. அப்பா தங்கவேலு இரப்பர் காட்டில் வேலை செய்தவர். ஏணி கோட்டில் வேலை செய்யும்போது ஏணியிலிருந்து சரிந்து விழுந்து இறந்து போனார். அப்பாவின் அந்தத் துர் மரணத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் கூடவே அந்த அதிர்ச்சியும் கிளர்ந்துவிடும். வலியில் துடிதுடித்து மரணம் தொடும் தொலைவில் இருந்தபோது அவருக்கே தெரியாமல் அவர் மலம் கழித்திருக்கிறார். பிணத்தை அள்ளும்போது அப்பாவின் சிலுவாரில் மலம் ஒழுகியிருந்ததைப் பார்த்தேன்
“அட கடவுளே! கொண்டு போய்ட்டியே! ப்பா! ப்பா!”
அந்த மலத்தைப் பார்த்தவுடன்தான் உள்ளுக்குள் உறைந்திருந்த அதிர்ச்சியும் சோகமும் கிளர்ந்து வெளியேறின.
“எப்ப மனுசன் உடம்புலேந்து அவனுக்கே தெரியாம மலம் வெளிவருதோ அப்பவே அவன் பாதி பொணமா ஆயிட்டானு அர்த்தம்”
என் அப்பா தங்கவேலு அடிக்கடி யாரிடமாவது இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார். தோட்டத்தில் அப்பாவுக்கென்று ஒரு மலக்கூடம் இருந்தது. எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே அந்த மலக்கூடத்தைப் பயன்படுத்த முடியும்.
தங்கவேலுவின் 10-எண் மலக்கூடத்தைப் பற்றிய கதை
பிரிட்டிஸ்காரர்கள் காலத்தில் கட்டியெழுப்பப்பட்ட மலக்கூடங்கள்தான் என் வீட்டு லயத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் வரிசைப்பிடித்து நின்று கொண்டிருப்பது. நாள் முழுக்க யாரையாவது அந்த மலக்கூடங்களில் பார்த்துவிடலாம். தகரக் கதவைத் திறந்தபடியும் மூடியபடியும், கையில் தகர வாளியுடன் அந்தச் சின்ன மேட்டில் ஏறியபடியும் இறங்கியபடியும் யாரையாவது அடிக்கடி அங்கே பார்க்கலாம். காலையில் எல்லோரும் பிரட்டுக்குப் போகும் முன்னே முதலில் மலக்கூடத்திற்குப் போய்விட்டு வருவார்கள். காலையில் 6மணிக்கு மரப்பத்திகளுக்குச் செல்பவர்கள் 5 மணிக்கே எழுந்து மலக்கூடத்திற்குப் போய்விட்டு வருவதுதான் வழக்கம். 6 மணியாகிவிட்டால் மலக்கூடங்களில் கூட்டம் நிரம்பி வழியும்.
ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் சோம்பல் உற்சாகம் என்று கொஞ்ச நேரத்தில் மலக்கூடத்தின் முன் சலசலப்பு தொடங்கிவிடும். மலக்கூடத்திலிருந்துதான் காலை பொழுது விடியும். அங்கிருந்துதான் அன்றைய நாள் தொடங்கும் என்றுகூட சொல்லலாம்.
அப்பா தங்கவேலு காலையில் 4.45 போல எழுந்து அரிக்கன் விளக்கை எரியவிடுவார். அதைத் தூக்கிக் கொண்டு மெல்ல எழுந்து முன் கதவைத் திறக்கும்போது தோட்டமே அகால இருளில் உறங்கிக் கொண்டிருக்கும். இரவு பூச்சிகளின் சத்தமும் ஓய்ந்திருக்காது. பால் வாளியை எடுத்து சிறிது நேரத்திற்கு உருட்டிக் கொண்டிருப்பார். அதில் வைக்க வேண்டிய பொருட்களையெல்லாம் எடுத்து நேர்த்தியாக அடுக்கி வைத்துவிட்டு முன் வாசலில் போடப்பட்டிருக்கும் வாங்கில் அரிக்கன் விளக்கை வைத்துவிட்டு அமர்ந்து கொள்வார்.
“அவளுக்கென்ன உறங்கிவிட்டாள். . அகப்பட்டவன் நான் அல்லவா”
“பகவானே மௌனமேனோ. . இது யாவும் உன் லீலைதானோ?”
ஏதாவது பழைய பாடலைப் பாடிக் கொண்டு சுருட்டு புகைத்துக் கொண்டிருப்பார். இருளின் மௌனமான நகர்தலில் அப்பாவின் சுருட்டுப் புகை ஆவியைப் போல படர்ந்து மறையும். உள்ளே உள்ள பாயில் படுத்துக் கொண்டே அப்பாவின் காலை நேரத்து அசைவுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் என்னுடைய காலை பொழுதின் மிகப் பெரிய கடமையாக இருந்தது. பிறகு அரிக்கன் விளக்கின் நிழலில் அப்பா எழுந்து நிற்பது தெரியும். விளக்கைத் தூக்கிக் கொண்டு அவருடயை உருவம் மெல்ல காணாமல் போகிறது என்றால் அப்பா மலக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
அந்த வரிசையில் மொத்தம் 10 மலக்கூடங்கள் இருந்தன. அதில் அப்பாவுக்கென்று ஒரு மலக்கூடம் இருந்தது. 10 ஆம் எண் மலக்கூடம் அப்பாவிற்குச் சொந்தமாகி 2 வருடம் இருக்கலாம். அப்பா தோட்டத்தில் முக்கியமான ஆள் என்பதாலும் வெள்ளைக்காரர்கள் மத்தியில் அவருக்குக் கொஞ்சம் செல்வாக்கும் இருந்தபடியால் ஒரு மலக்கூடம் அவருக்கு இலவசமாகச் சொத்துடமையாக்கப்பட்டிருந்தது. அப்பாவும் நானும் அம்மாவும் அக்காளும்தான் அந்த மலக்கூடத்தைப் பயன்படுத்துவோம். பட்டணத்திலிருந்து பெரியப்பா, மாமா இப்படி யாராவது வந்தால் அப்பா அவர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்பே மலக்கூடத்தைக் கழுவி சுத்தம் செய்துவிடுவார்.
ஆரம்பத்தில் யாராவது திருட்டுத்தனமாக அப்பாவின் மலக்கூடத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்பா பத்திக்குச் சென்றவுடன் மேட்டு லயத்தில் இருக்கும் ஆட்கள் 10 ஆம் எண் மலக்கூடத்தில் நுழைந்து பயன்படுத்திவிட்டுப் போய்விடுவதுண்டு. அப்பா திரும்பி வரும்போது மலக்கூடத்தின் கதவு வாய் பிளந்து திறந்து கிடக்கும். யாராவது வந்து பயன்படுத்தியிருந்தால், அப்பா அதைக் கண்டுபிடித்துவிடுவார். சுத்தமாகக் கழுவிவிடாமல் அவசரத்தில் அப்படியே போட்டுவிட்டுப் போயிருப்பார்கள். குழிக்கு மேலாக மலம் நிறைந்து கிடக்கும். எல்லோருக்கும் கேட்கும்படியாகவே கத்திக் கொண்டே அப்பா அதைச் சுத்தப்படுத்தத் தொடங்கிவிடுவார்.
“எந்த நாசமா போற ஜென்மம்னு தெரில, பேண்டுட்டு கழுவாமே போயிருக்கு! என்னா ஜென்மங்களோ? நாத்தம் கொடலெ புடுங்குது. . கம்பிய சுத்தி வச்சி சாத்திட்டுப் போனாலும் பேத்துக்கிட்டு வந்து பீயெ போட்டுட்டுப் போறானுங்க”
அப்பா மலக்கூடத்தின் கதவிற்குப் பக்கத்திலுள்ள சட்டத்தில் அடிக்கப்பட்ட ஆணியில் கம்பியைச் சுற்றி இறுகக் கட்டியிருப்பார். தகரக் கதவில் ஓட்டையிட்டு அதில் கம்பியைச் சொருகி கட்டுவதற்கு இலகுவாகச் செய்தும், அப்பாவால் அந்த மலக்கூடத்தைத் தனி சொத்தாகப் பாதுகாத்து வைத்திருக்க முடியவில்லை. இப்படித்தான் தினமும் காவலாளியைப் போல காலையில் விடிவதற்கு முன்பே எழுந்து வீட்டிலிருந்தவாறே அதிகாலை இருளில் மலக்கூடங்களுக்கு அமைதியில் ஊர்ந்து வரும் ஆட்களின் நடமாட்டங்களைக் கவனித்துக் கொண்டேயிருப்பார். யாராவது 10 ஆம் எண் மலக்கூடம் பக்கமாகச் சென்றாலோ அல்லது அதன் கதவை அசைத்துப் பார்க்க முயன்றாலோ அப்பா இங்கிருந்து கொண்டே கத்துவார்.
“டே! நுழைய பாக்கறானுங்கடா. . தொலைஞான் கைய வச்சானா”
பிறகு 10 நிமிடத்திற்கு மலக்கூடத்தின் அருகிலேயே நின்று கொண்டு வருபவர் போவோரை எச்சரிக்கையுணர்வுடன் பார்த்துக் கொண்டே காவலிருப்பார். அப்பாவிற்கு இது ஒரு தனிசுபாவமாகவே மாறியிருந்தது. அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்பவர்கள் யாராகினும் அப்பாவிற்கு அவர்களின் நடத்தையில் சந்தேகமும் அதிருப்தியும் தொற்றிக் கொள்ளும். ஏற இறங்க அவர்களைப் பார்த்துவிட்டு கையில் வைத்திருக்கும் அரிக்கன் விளக்கை உயர்த்திப் பிடித்து முகத்தை அடையாளம் காண்பார்.
“யாரு, துரைசாமி பையனா? காலைலே வயித்த கலக்கிருச்சி போல? பாத்து. அங்குட்டு உள்ள கொட்டாயெ பாய்ச்சிக்க”
“வாடா அம்மா கண்ணு பேரனா? எப்பவும் இந்த நேரத்துக்குத் தூங்கிட்டுக் கெடப்ப? இப்ப என்னா புது பழக்கம்? ஆங்ங்ங். . அங்குட்டு போ. . சுத்தமா வச்சிக்கங்கடா. .”
அங்குள்ள 10 மலக்கூடங்களுக்கும் தான் மட்டும்தான் கங்காணியாக இருக்க முடியும் என்கிற பாவனையும் எண்ணமும் அப்பாவிற்குள் வந்துவிட்டிருந்தது. அரிக்கன் விளக்குடன் குட்டி வெளிச்சத்தைப் பரப்பி அந்த அதிகாலை இருளிலும் கங்காணித்தனம் காட்டிக் கொண்டு அவ்வப்போது 10 ஆம் எண் மலக்கூடத்தின் கதவைத் திறந்து உள்ளேயும் பார்த்துக் கொள்வார். அம்மாவிற்கு எப்பொழுதும் அப்பாவின் இந்தப் பழக்கம் குறித்து அதிருப்திதான். சில சமயங்களில் அம்மாவும் அப்பாவுடன் பெரட்டுக்குச் செல்வதற்காகக் கிளம்பி வீட்டின் முன்னாலேயே காத்துக் கொண்டிருப்பார். அப்பா மலக்கூடத்தைச் சரிபார்த்துவிட்டு வருவதற்குள் அம்மாவிற்கு கோபம் உச்சந்தலையில் ஏறியிருக்கும்.
“யேங்க! உங்களெ என்னா அல்லூர் கூட்டியாவா போட்டுருக்காங்க? அங்குட்டே ஒரு கொட்டாயெ கட்டி படுத்துக்குங்க! எப்ப பாத்தாலும் அந்தச் சாமான் கொட்டாய்லே கிடக்குறீங்க. என்ன ஜென்மமோ?”
“நம்பளோட அசிங்கம்லாம் அங்கத்தான் இருக்கு! அசிங்கத்தெ தாங்கறெ கடவுள் தெரியுமா? வீடு மாதிரி பாத்துக்கனும். என்னா பேசறே? கொஞ்சம் உட்டுட்டா நாசமா ஆக்கிருவானுங்க”
“என்னமோ பண்ணுங்க! உலகத்துலே இல்லாத கொட்டாய்தான்”
அப்பா எந்தச் சலனமுமின்றி மல்லாந்து பார்த்து நேரத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பார். அவரின் உலகம் அப்பொழுதுதான் விழிக்கத் துவங்கும். தனது உயிரை 10 ஆம் எண் மலக்கூடத்தில் ஒளித்து வைத்துவிட்டு மரத்திற்குக் கிளம்பத் தயாராவார். அதற்குப் பிறகு அம்மா அப்பாவைத் திட்டும் போதெல்லாம் அல்லுர் கூட்டி அல்லூர் கூட்டி என்று சாடித்தான் பேசுவார். அல்லூர் கூட்டி என்றால் எங்கள் தோட்டத்தில் மலக்கூடங்களைச் சுத்தம் செய்வதற்கே உள்ள பணியாள். அந்த அல்லூர் கூட்டி இரு தினங்களுக்கு ஒரு முறை மலக்கூடங்களைச் சுத்தம் செய்ய வந்துவிடுவார். அதுவும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான நேரம் இங்குதான் இருப்பார். அப்பா கண்களில் அவர் சிக்கிவிட்டால் அல்லூர் கூட்டிக்குப் பாதி உயிர் போய்விடும்.
“அதெ நல்லா அள்ளு! இங்க கொஞ்சம் அழுத்திக் கூட்டு! குழி நெறைஞ்சிருச்சி பாரு! எவன் பேண்டு வச்சதோ! அங்க பாரு. தகரத்துலே ஒட்டிருக்குப் பாரு! நல்லா கூட்டு”
அல்லூர் கூட்டியின் பொழுது அன்று முழுவதும் விடியாமல் இருந்துவிடும். அப்பாவின் அதட்டலில் மலக்கூடங்கள் அனைத்தும் கால்கள் இருந்திருந்தால் எழுந்து ஓடியே போயிருக்கும். அப்பாவும் அல்லூர் கூட்டியுடன் சேர்ந்து கொண்டு மலக்கூடங்களில் புகுந்து சுத்தப்படுத்தத் தொடங்கிடுவார். வீட்டிலிருந்து வாளிகளையும் எடுத்துக் கொண்டு போய்விடுவதால் அம்மா ஒருபக்கம் கத்திக் கொண்டிருப்பார். வாளியில் நீரை அள்ளி ஒவ்வொரு கூடமாக ஊற்றிக் கொண்டே வர அல்லூர்கூட்டி குனிந்து நிமிர்ந்து குழிகளின் ஓரம் தேய்த்துச் சுத்தப்படுத்திக் கொண்டே வருவார். தோட்டத்திலுள்ளவர்கள் அப்பாவை இரண்டாவது அல்லூர் கூட்டி என்றே பெயர் வைத்துக் கூப்பிடத் தொடங்கிய காலக்கட்டத்தில்தான் எனக்குப் பெருத்த அவமானம் ஏற்படத் துவங்கியிருந்தது.
வங்காளி ரொட்டிக்காரர் முதல் சீன அப்பே வரை எல்லோரும் அல்லூர் கூட்டி மகன் அல்லூர் கூட்டி மகன் என என்னையும் சேர்த்துக் கூப்பிடத் தொடங்கினார்.
நானும் 10ஆம் எண் மலக்கூடத்தின் காவலாளியாக மாறிய காலம்
முதன் முதலாக நான் 10 ஆம் எண் மலக்கூடத்தின் காவலாளியாக மாற்றப்பட்ட தினம் அப்பா பெரட்டுக்குப் போகாத ஒரு தினத்தில்தான். காய்ச்சலால் பாயிலேயே சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார். சரியாகக் காலை மணி 6 இருக்கும், என்னைத் தட்டியெழுப்பினார்.
“டே! அங்குட்டு நின்னு கொட்டாயே பாத்துக்கடா. எவனாது கம்பிய நெம்பி கதவ தெறக்கறானுங்களானு. நைசா உள்ள புகுந்துருவானுங்க ஆள் இல்லனா. இங்குட்டே நின்னு பாத்துக்க”
வெளியில் வந்து நின்றேன். தோட்டத்திலிருந்த மரங்களிலிருந்து அப்பொழுதுதான் சிறு அசைவு ஏற்படத் துவங்கியிருந்தது. மெல்ல சோம்பலை அகற்றி வாங்கில் அமர்ந்து கொண்டே மலக்கூடங்களைப் பார்த்தேன். ஒரு சில கதவுகள் திறந்தபடியும் மற்றும் சில மூடியபடியும் அகால இருளில் அப்பாவைப் போலவே மௌனமாக சைகை காட்டி பேசுவது போலவே தோன்றியது.
தூரத்திலிருந்து பார்க்க மலக்கூடத்திலிருந்து யாரோ வெளியேறுவதும் உள்ளே நுழைவதுமாக ஒரு பிரமை தட்டியது. கண்களை விரித்து பார்க்கையில் அங்கு யாரும் இல்லை. மணிகுஞ்சி அண்ணனுடைய பேரன்தான் ஏதோ ஒரு பாடலை முனகிக் கொண்டே 8 ஆம் எண் மலக்கூடத்தில் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார். அவருடைய பாடல் வரிகள் கதவுக்கு அடியிலிருந்து மெல்லிய ஓசையாக மாறி வெளிவந்து கொண்டிருந்தன. அந்த அண்ணன் பழைய பாடலைப் பாடுவதில் கெட்டிக்காரர். ரம்மியமான இசையை அவர் வாயிலேயே எழுப்பிக் கொண்டு காலைக் கடனை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். வானம் விடிந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் படர ஆரம்பித்தது. அப்பா உள்ளேயிருந்து கொண்டு மீண்டும் முனகினார்.
“டே. . அப்படியே அங்குட்டு போய் பக்கத்துலே நில்லுடா. . சுத்தம் முக்கியம்டா. எவனாவது உள்ள புகுந்துருவானுங்க. போ”
அப்பாவின் குணத்தை நினைத்தால் விசித்திரமாகவும் அதே சமயம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றியது. காலை பனி முதுகில் பளார் என்று அறைய, மெல்ல நடந்து மலக்கூடம் பக்கமாக சென்றேன். பனி இன்னமும் உலாவிக் கொண்டுதான் இருந்தது. மலக்கூடங்களின் கதவுகளில் பனி ஊர்ந்து ஒழுகிக் கொண்டிருந்தது.
ஒவ்வொரு மலக்கூடத்திற்கு நடுவிலும் பலகை தடுப்பு இருந்தது. எழுந்து நின்று பார்த்தால் பக்கத்து கொட்டாயின் தடுப்பும், ஆள் அமர்ந்திருந்தால் அவரின் தலையும் நன்றாகத் தெரியும். ஏதாவது பேசிக் கொண்டும் பலகை தடுப்பைத் தட்டி ஓசையை எழுப்பிக் கொண்டும், வெளியிலிருந்தபோது பேசாமல் விடப்பட்ட விஷயங்களும் என்று உரையாடல்கள் எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். தோட்டம் விடிந்ததும் மலக்கூடங்கள் பேசத் தொடங்கிவிடும்.
தோட்டத்திற்குள் நிலவும் பிரச்சனைகள், ஒழுக்கம் தவறவிட்ட மனிதர்களின் இரகசியங்கள், தோட்டத்துப் பள்ளிக்குப் புதியதாக வந்திருக்கும் ஆசிரியர்களைப் பற்றி, பால் கொட்டாயில் நடக்கும் வாய்ச் சண்டைகள் என்று மலக்கூடங்களில் அமர்ந்திருப்பவர்களின் வாயிலிருந்து இவையாவும் சொற்களாக மாறி கதவுக்கடியிலும் பலகை தடுப்பு சுவர்களிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆள் அரவமற்ற பொழுதுகளில் அந்தப் பக்கமாகப் போகும்போது யாரோ பேசிக் கொண்டிருப்பது போலவே தோன்றும்.
ஒவ்வொரு மலக்கூடமும் பாடுவதைப் பற்றியும் பேசிக் கொண்டே இருக்கலாம். பிழையான இராகத்திலிருந்து தொடங்கும் பாடல்கள் முதல் கேளியான பாடல், பாதியிலே நிறுத்தப்பட்ட பாடல், காதல் பாடல், சிவாஜி படத்தின் பாடல்கள் என்று மாறுபட்ட தொனியில் முக்கிக் கொண்டு குரலைத் தளர்த்தியபடி யாராவது பாடிக் கொண்டே இருப்பார்கள். வானொலியில் ஒழுங்கில்லாமல் இடறி விழும் நிலையங்களின் குரல்களைப் போல காலையிலேயே மலக்கூடத்தில் பல நிலையங்கள் உற்சாகமாக இயங்கத் தொடங்கியிருக்கும். அப்பாவும் ஏதாவது பாடலைப் பாடிக் கொண்டேதான் உள்ளே இருப்பார். 10 நிமிடத்திற்கு மேலாகப் பாடல் உச்சம்வரை போய்க் கொண்டிருக்கும். எங்காவது பாடலின் வரி பாதியிலேயே நிற்கும்போது அப்பா தன் கடமையை முடித்துவிட்டார் என்று அர்த்தமாகும்.
“டெ! ஒழுங்கா ஜாகா பாத்துக்க கொட்டாயெ! புரியுதா?”
அன்று முதல் என்னையும் அறியாமல் 10 எண் மலக்கூடத்தின் மீது சொந்தம் கொண்டாட ஆரம்பித்துவிட்டேன். வீட்டிற்கு வெளியில் வந்ததும் பார்வையையும் கவனத்தையும் 10 ஆம் எண் கதவின் மீது குவித்து ஆள் நடமாட்டத்தைக் கண்கானிப்பேன். இது வழக்கமாக மாறத் துவங்கிய காலம், நானும் அப்பாவைப் போல அல்லூர்கூட்டியைப் போல ஆகியிருந்தேன்.
மதியத்தில் மலக்கூடங்களில் நடக்கும் அதிசயங்கள்
மதியம் 12 மணிக்கு மேற்பட்டு மலக்கூடங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். மலக்கூடத்திற்கு மேலேயுள்ள திறப்பு வெயிலைச் சுளிரென உள்ளே இறக்கிக் கொண்டிருக்கும். வெயில் உள்ளே புகுந்து அனலாக எறிந்து கொண்டிருப்பதால் அந்தச் சமயங்களில் அதிசயமாக யாராவது வந்துவிட்டுப் போவார்கள்.அவ்வளவுதான்.
காற்று மெல்லிய வேகத்தில் கிளம்பி வேகத்தை அதிகரிக்கும்போது 4ஆம் எண் கொட்டாயின் கதவு சொந்தமாகத் திறந்து கொண்டு பக்கத்திலிருக்கும் சுவருடன் டமாரென்று மோதிக் கொள்ளும். இது எப்பொழுதும் நடக்கும். மதியத்தில் அந்தப் பக்கமாக வீசும் காற்று நான்காம் எண் கதவை எதற்காகவோ பயன்படுத்திக் கொள்கிறது. தூரத்திலிருந்தாலும் இந்தக் கதவின் ஓசை மதியத்தை ஞாபகப்படுத்திவிடும்.
“எவனோ அங்க இருக்கான்! ஒளிஞ்சிகிட்டு என்னவோ வேலைப் பண்றானுங்க”
“எவன்னு தெரியலே! யேன் அடிக்கடி சரியா 12மணிக்கு மேல அந்தக் கதவு சொந்தமா சாத்திகிறதும் திறந்துகறதும்?”
“அது காத்தா இருக்கும், இருந்தும் அது யேன் சரியா அந்த நேரத்துக்கு மட்டும் தினமும் இப்படி நடக்குது? என்னமோ இருக்கு”
தோட்டத்தில் அந்தச் சம்பவத்தைப் பற்றிய அனுமானங்கள் பரவத் துவங்கியிருந்தன. எல்லோரும் அதைப் பற்றியே பேசிக் கொள்ளத் துவங்கினர். அதன் பிறகுதான் மதியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மலக்கூடங்கள் மனிதர்களை இழக்க நேரிட்டது. வீட்டின் முன்பக்க கால்வாயின் ஓரம் மிகவும் கதகதப்பாக இருக்கும். அங்கிருந்து பார்த்தால் மலக்கூடம் மிக அருகாமையில் தெரியும். மதியத்தில் அங்கு அமர்ந்து கொண்டு மலக்கூடத்தின் கதவுகளையே பார்த்துக் கொண்டிருப்பேன்.
அதே ஆண்டில்தான் சிவராமன் அண்ணன் 6ஆம் எண் மலக்கூடத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அந்தச் சம்பவம்தான் எல்லோரையும் தோட்டத்திலிருந்த மலக்கூடங்களின் மீது பீதியைக் கிளப்பிவிட்டது. எப்படி அவர் இறந்து போனார் என்ற எவ்வித தடயமும் இல்லாமல் நிகழ்ந்த அந்த மரணத்தின் இரகசியம் அந்த 6ஆம் எண் மலக்கூடத்திற்கு மட்டுமே தெரியும். பலகை தடுப்பில் தலை சாய்த்து கால்கள் இரண்டும் சம்மனமிட்டப்படி சிலையாகக் கிடந்தார். நகரத்திற்கு எடுத்துக் கொண்டு போய் என்னமோ ஆராய்ச்சியெல்லாம் நடத்தியும் மரணத்திற்கான காரணங்கள் எது என்றே யாருக்கும் தெரியவில்லை, அறிவிக்கப்படவும் இல்லை.
“6ஆம் நம்பர் கொட்டாய்லே, யாரோ முக்கிக்கிட்டு இருக்கற சத்தம் கேக்குது. ரொம்ப நேரமா அந்த சத்தம் இருக்கு. ஆனா உள்ள ஆளு இல்லடா.”
“சரியா போச்சி! சிவராமன்தான் உள்ள இருக்காண்டா. . இங்கத்தானே செத்துப் போனான். . உள்ள அவன்தான்”
“5 ஆம் நம்பர் கொட்டாய்லெ உக்காந்துகிட்டு இருக்கும்போது பக்கத்துலே சிவராமனோட குரலே கேட்டன்டா. . ஏதோ பாட்டுப் பாடறே குரலு! அவன் குரல்தான். . வந்ததும் உள்ளயெ போச்சி போ!”
அந்தச் சம்பவத்திற்குப் பிறகும் ஆள் அரவம் முற்றிலுமாக மதிய நேரத்தில் அறுந்து போய்க் கொண்டிருந்தது. காலையில் உற்சாகத்துடன் மலக்கூடத்திற்கு ஓடும் ஆட்கள் மதியத்தில் அந்தப் பக்கம்கூட எட்டிப் பார்க்கமாட்டார்கள்.
அப்பாவின் மலக்கூடம்
“மாமா! மாமா! ஏஞ்சிருங்க. . பண்றதையும் பண்ணிட்டு. . தூக்கம் வேற. . வயசாய்ட்டா இப்படித்தான் போல”
கண் இமை கனமாக இருந்தது. யாரோ அருகில் நின்று என்னையே உற்றுக் கவனிப்பது போல இருந்தது. அவர்களின் சுவாசம் என் காதுகளில் கேட்கிறது. அவர்கள் பாடுகிறார்கள். எங்கோ தொலைவில் யாரோ கதவைத் திறக்கும் ஓசையும் கேட்கிறது. அனேகமாக அது தகரக் கதவாகத்தான் இருக்க முடியும்.
“டெ! நல்லா பாத்துக்கடா! எவனாவது உள்ள நுழைய போறான்”
“அப்பா! அப்பா!”
கண்களை மெல்ல திறந்தேன்.மகன் கணேசன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். குளிரூட்டி மென்மையான சத்தத்துடன் வரவேற்பறையில் இறங்கிக் கொண்டிருந்தது.
“உங்களுக்கு யேன் எங்கள மாதிரி உக்காந்து போக முடியலெ தொட்டியில? இந்த மாதிரி பண்ணிங்கனா, அது உடைஞ்சிறும்! எல்லாரும் அது மேலத்தான் உக்காந்து போவாங்க. நீங்க அதுக்கும் மேல கால வச்சி. .. யேன் அசிங்கம் பண்றீங்க? உங்களுக்கு நான் பிளாஸ்ட்டிக் தொட்டி தனியா கடையில விக்குது, அதெ வாங்கித் தர்றேன். . அதுல போயி பழகுங்க!”
வெளியே இருளத் துவங்கியிருந்தது. மகனும் மருமகளும் எங்கோ கிளம்பி வெளியே போய்விட்டிருந்தனர். வயிறு சத்தம் போட்டது. அவசரமாக அவிழ்த்து விட வேண்டும். கழிப்பறையைப் பார்த்தாலே அந்த உயரமான கழிவுத் தொட்டி எழுந்து நின்று முகத்திற்கு நேராகக் கையைக் குவித்து குத்துக் காட்டுவது போலவே தென்படுகிறது. கதவைத் திறந்து வெளியே வந்தேன். வீட்டிற்கு வெளியே இருள் முனகிக் கொண்டிருந்த சத்தத்தில் யாரோ பேசுவதும் மென்மையாகக் கேட்டது.
“நம்பளோட அசிங்கத்தே காக்கற கடவுள் மாதிரிடா அது! சுத்தமா வச்சிக்கனும்.. சுத்தமா இருந்தாதான் வசதியா போக முடியும்!”
“மனசனுக்கு எப்ப அவனுக்கே தெரியாம மலம் வெளிவருதோ அப்பயே அவன் பாதி செத்துட்டாண்டா”
அப்பா மீண்டும் மீண்டும் இதையேதான் உச்சரித்துக் கொண்டிருப்பார். அழ வேண்டும் என்று தோன்றியது. உள்ளுக்குள் இருந்த இறுக்கம் அதிகமாகி அப்படியே கீழே அமர்ந்து கொண்டேன். வேட்டியிலிருந்து மலம் ஒழுகியிருந்தது. அப்பா அவருடைய 10 ஆம் எண் மலக்கூடத்தைத் தூக்கிக் கொண்டு கனவு தேசத்தினூடாக ஓடி வந்து கொண்டிருந்தார். வாழ்வு எங்கோ மீதமிருக்கிறது.
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
thanks uyireluttu magazine
மீண்டும் சந்திப்போம்
என்னுடைய சிறுகதை, கவிதைகள் என் “கதைகளும் கால்களும்/கவிதைகளும்”
http://balamurugankathaigal.blogspot.com/
எனும் வலைப்பூவில் தொடர்ந்து வாசிக்கலாம். நன்றி அன்பார்ந்த நண்பர்களே.
சந்திப்போம்.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
http://balamurugankathaigal.blogspot.com/
எனும் வலைப்பூவில் தொடர்ந்து வாசிக்கலாம். நன்றி அன்பார்ந்த நண்பர்களே.
சந்திப்போம்.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
Subscribe to:
Posts (Atom)