நான் எங்கேயும்  போவதற்கில்லை
ஆகையால் வீட்டில்தான் இருக்கிறேன்.
ஒவ்வொரு இரவுகளையும் 
மௌனமாகக்  கவனித்தபடி இருக்கும்
நான் வழக்கமாக
வீட்டில்தான்  இருக்கிறேன். 
உறங்கி எழும்போது
நான் வீட்டில் இருப்பதை
மறப்பதில்லை.
எல்லாப் பொழுதுகளையும்
பாதுகாப்புடன் கடக்க
எனக்குத்  தேவை
நான் வீட்டில் இருப்பது.