Sunday, November 16, 2008

எல்லாமும் நகர்வில்தான்


உலகம்
நகர்கிறது
கிழமைகளும்
கரைகின்றன
காலம் ஊர்கிறது
என் சவத்தின் மீதேறி



இங்கு
எல்லாமும்
நிகழ்ந்து முடிந்து
மீண்டுமொரு நகர்தலில்
தொடங்குகிறது
நேற்றிருந்த நினைவுகளை
விழுங்கி தின்று தீர்த்தவாறு

No comments: