Saturday, February 28, 2009

அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி

அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைப் போட்டி
போட்டி முடிவுகள்

சென்னை, பிப்ரவரி 26, 2009


கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:

முதல் பரிசு (ரூ.20,000)
திரு. தமிழ்மகன், தமிழ்நாடு


இரண்டாம் பரிசு (ரூ. 10,000)
திரு. தி. தா. நாராயணன், தமிழ்நாடு


சிறப்பு பரிசுகள் (ரூ.10000 வீதம்)

இந்தியா
திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு


ஆசியா-பசிபிக்
திரு. கே. பாலமுருகன், மலேசியா


வட அமெரிக்கா
திரு. வ. ந. கிரிதரன், கனடா


இலங்கை
திரு. ஆர். எம். நௌஷத், இலங்கை


பரிசு பெற்றோர்களுக்கான பரிசுகள் சென்னையில் வரும் மார்ச் 7 ஆம் தேதி நடக்கவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளன. மேலதிக விவரங்களுக்கு

ஆழி பதிப்பகம்12, முதல் பிரதான சாலை

யுனைட்டட் இந்தியா காலனி

கோடம்பாக்கம்

சென்னை 600024

1 comment:

Sathis Kumar said...

அன்பரே, தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..