Tuesday, April 21, 2009

அதிகாரம்- ஆணவம்- எதிர்வினை

குறிப்பு: ம.நவீன் மீண்டும் நான் அனுப்பிய கருத்துகளை/ எதிர்வினையை பயங்கர இருடடிப்புகள் செய்து தமது கருத்தை மட்டுமே எதிர்வினை போல காட்டி அஞடியில் வெளியிட்டுள்ளார்.

உங்களுக்கு(நவீன்) மீண்டும் பதிலளிப்பதில் உண்மையில் வெட்கம்தான் படுகிறேன். நான் அனுப்பிய கட்டுரையின் தலைப்பை மாற்றி உங்கள் வசதிக்கு எனது கருத்துகளை சிவப்பு வர்ணத்திலும் உங்கள் கருத்துகளை மிகத் தெளிவான வர்ணத்திலும் போடுவது போல போட்டு உங்கள் நியாயங்களை தர்கிப்பதில் ரொம்பவே அக்கறை காட்டி மழுப்புகிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். மேலும் நான் அனுப்பிய கட்டுரையில் சில பகுதிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் உங்கள் மின்னஞ்சலுக்கு கருத்துகளை அனுப்பினேன் என்று வேறு சொல்கிறீர்கள். இவ்வளவு நாளா என்னையும் உட்பட பலரும் அப்படித்தானே அனுப்புகிறார்கள். இப்பொழுது மட்டும் என்ன திடீர் புலம்பல்?
அஞ்டியை நீங்கள் நிர்வகிப்பதால் எடுத்துக் கொண்ட சந்தர்ப்பம். நீங்கள் சொல்வதெலெல்லாம் உண்மை என்று ஆகிவிடாது.

என்னைப் பற்றிய விஷயங்கள் பேசப்படும் இடத்தில் நான் வந்து பேசுவது தவறென்றால், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டுமா? வராவிட்டால் பயந்து தலைமறவாகிவிட்டேன் என்று ஒரு பலி, வந்துவிட்டால் வெட்கமின்றி ஒட்டிக் கொள்வதாக பேச்சு! அப்படியென்றால் எதற்கு ஆரம்ப கட்டுரையில் புத்திமதி சொல்வது போல் எல்லாவற்றையும் புளோக்கில் போட்டுவிட்டு, போன் செய்து அஞ்சடியைப் பாருங்கள் என்கிற அங்கலாய்ப்பு.

ஜெயமோகன் எஸ்.ராமகிருஷ்ணன் நான் விரும்பி படிக்கும் எழுத்தாளர்கள். அவர்களின் படைப்பு மீது தனி ஈர்ப்பும் அபிமானங்களும் எனக்குண்டு. நான் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி என் கதையைப் படிக்க சொல்வதும், அவர்களின் படைப்புகளைப் பற்றி பேசுவதும் குறித்து உங்களுகென்ன அங்கலாய்ப்பு? அது வாசகன் – எழுத்தாளன் சம்பந்தப்பட்டது. அதில் ஏன் உங்கள் பொறாமை மூக்கை நுழைக்கிறீர்கள். பாவம். .

என்னைக் கேட்காமலேயே என் கவிதையை ஜனசக்தியில் பிரசுரித்தது குறித்து நான் கேள்வி எழுப்பவில்லையே. மேலும் மஹாத்மன் என்னைத் தொடர்புக் கொண்டு கதையை அனுப்பும்படி அவரே கேட்டுக் கொண்டதோடு, மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்தார். அது அவரின் உரிமை / நட்பு என்றால், நானும் அதே பாணியில்தான் என் கதையைப் பிரசுரிக்கும்படி உரிமையுடன் கேட்டேன். (விவாதம் எனது கருத்துகளுத்தான்- எனக்கு அல்ல)

என் முதுகின் வலுவைப் பற்றி தயவு செய்து கவலையை விடுங்கள் நவீன். முதலில் உங்கள் முதுகில் தெறித்துக் கிடக்கும் எச்சங்களைச் சரி செய்ய முயலுங்கள்

நண்பர்கள் என கொஞ்சம் உரிமை எடுத்து மன்னிப்பு கேட்டதற்கு அதை அங்கலாய்ப்பு என கூறி உங்களின் கெட்ட குணத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். எனது பழைய கட்டுரையை மீண்டும் போட்டு உங்கள் முகத்தை கழுவிக் கொள்கிறீர்கள்.

என் மீது காழ்ப்பா பொறாமையா என்று ஒருவர் கேட்டதற்கு, அது பாலமுருகனுக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு, உடனே எனக்கு இரகசியமாக குறிந்தகவல் அனுப்பி, “நண்பா எப்படி இருக்கீறீர்கள்? உங்கள் படைப்பாற்றல் பாதிக்கக்கூடாது, பார்த்துக் கொள்ளுங்கள்” என புத்திமதி வேறு. என்ன ஒரு அக்கறை?

ஆமாம் உண்மைதான். உங்களிடம்தான் அந்த விசயங்களில் ஆலோசனை கேட்டேன், அது குலைவு என்றால், என்னை சுங்கைப்பட்டாணியில் ஒரு இதழ் தொடங்குமாறு சொன்னது என்ன குலைவா? இரண்டுமே அக்கறை சார்ந்த விஷயம்தானே. அநங்கத்தைப் பற்றி பேச வேண்டுமென்றால் என்னிடம் பேசியிருக்க வேண்டும் என்றுதானே நான் சொல்லியிருந்தேன். அதை விடுத்து புளோக்கில் பேசியதற்காகத்தான் உங்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதி இல்லை என்று சொன்னேன்.

ஒருவர் சொல்லும் கருத்து, நேரடியான முறையில் தீர்மானிப்பது அவ்வளவு சரி இல்லை. அவர் எந்த சூழ்நிலையில் எந்த மனநிலையில், சொல்லியிருக்கிரார் என்பதற்கு கொஞ்சம் மதிப்பளிக்க வேண்டும். மேலும் அந்த ஒரு கருத்தே இறுதியானது என்றும் ஆகிவிடாது.

நுக்மான் விஷயத்தில் அவருக்கு நாதியே இல்லாமல் நான் விட்டுவிடவில்லை. ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவர் கடாரம் வந்தது, கெடா மாநில எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் கலந்துரையாடல் நிகழ்விற்கு, அதன் உபரி நிகழ்வுதான் அநங்கம் அறிமுகம். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு நான் எங்கும் ஓடவில்லை. இன்றளவும் யாரிடமும் மேற்கொண்டு பணம் கேட்காமல் கிடைத்த பணத்தைக் கொண்டே அநங்கத்தை வெளியீட்டுக் கொண்டிருக்கிறேன். மேலும் பணம் கொடுத்து வாங்கும் வாசகர்களின் பணத்தை அடுத்த அநங்கத்தின் தரத்தை உயர்த்தவே பயன்படுத்துகிறேன்.

பகையையெல்லாம் ஏற்படுத்தவில்லை. உங்களின் அம்பலப்படுத்தும் பாணியிலேயே சில உண்மைகளைச் சொன்னேன்.
உங்களின் குறுந்தகவலை சேகரித்து பாதுகாத்து சந்தர்ப்பம் தேடி அலையும் திட்டங்களுக்கு சபாஸ் சொல்கிறேன்.
நீங்கள் மட்டுமே மலேசிய இலக்கியத்தை வளர்ப்பது போல வேறு பேசியுள்ளதோடு இதில் சில மேற்கொள்கள் வேறு. இவர் பாணியில் அவர் பாணியில் என்று.

இதழுக்காக படைப்பு கேட்டு ஒருவர் உங்களை நச்சரிப்பார், நீங்கள் படைப்பைப் பிரசுரிப்பது பற்றியோ அல்லது உங்கள் படைப்பைப் பற்றியோ நண்பர் என்ற முறையில் கருத்து கேட்டால், நாளை ஒரு பிரச்சனை என்று வரும்போது அந்த மின்னஞ்சல்களை மிகப் பத்திரமாக சேமித்து வைத்து உங்களயே அடிப்பார். அப்படியொரு சந்தர்ப்பவாதி தலைநகரத்தில் உள்ளார் நவீன். கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்

கே.பாலமுருகன்

No comments: