Sunday, January 3, 2010

மலேசியா – மூன்று நிகழ்வுகள்

1. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் (மலேசியா)

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் தேசிய அளவில் கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் மலேசிய கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நடனம் பாடல்கள் போன்றவற்றையும் அரங்கேற்றின. பரதநாட்டியம், சீன நாகா நடனம், மலாய் நடனம் என்று கலை மேடை படைப்புகள் மிகவும் பிரமாண்டமாக படைக்கப்பட்டன. 2010 ஆம் ஆண்டை வரவேற்போம்.

2. கடந்தாண்டு பள்ளியின் பரிசளிப்பு விழா

பள்ளியின் வருடாந்திர நிகழ்வான பரிசளிப்பு விழா இந்தாண்டு கூடுதலான அங்கங்களுடன் நடைப்பெற்றது. மாணவர்கள் மாறு வேடப் போட்டியில் பங்கெடுத்தது இவ்வருடம் எல்லோரையும் (தோட்டப்புறத்தைச் சார்ந்த அதன் பின்னனியைக் கொண்டவர்கள்) வியப்படைய வைத்தது. இந்த மாறுவேடப் போட்டியில் பெற்றோர்களும் கலந்துகொள்ளும் வகையில் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தேன்.
4 மாணவர்கள், விவேகானந்தர், திருவள்ளுவர், வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் மேலும் மீராபாய் என்ற 4 விதமான மாறுவேடங்களை அணிந்து குறிப்பிட்ட அந்த அறிஞர்களின் ஆளுமைகளை விளக்கும் சொற்கள் அல்லது வாசகங்களையும் சொன்னார்கள். அங்குள்ள பெற்றோர்கள் அந்த மாறுவேடம் எந்த அறிஞரைக் குறிக்கிறது எனக் கண்டறிந்து ஒரு தாளில் எழுதி அறிவிப்பாளரிடம் கொடுக்க வேண்டும். சரியாக அனுமானித்து முதலில் வந்து கொடுப்பவருக்கே பரிசு என்று தீர்மானிக்கப்படது. எல்லோரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நகர்ப்புரப் பள்ளிகளில் இந்தப் போட்டி வழக்கமானதாக இருந்தாலும், எங்கள் தோட்டப்புறப் பள்ளியில் நிகழும் முதல் நிகழ்வாகும் என்பதால் எல்லோருக்கும் உற்சாகம் வலுவடைந்தது.
3. 2010 ஆம் ஆண்டின் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள்

எங்கள் பள்ளியில் இந்தாண்டு 11 மாணவர்கள் ஒன்றாம் ஆண்டில் பதிந்துள்ளனர். கடந்த வருடத்தைக் காட்டிலும் இவ்வாண்டு குறைவான பதிவே நடைப்பெற்றுள்ளது. இந்தத் தோட்டத்திலிருந்து குடிப்பெயர்ந்து போனவர்கள் தற்பொழுது 5 வகையாக குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். அந்தக் குடும்பங்களிலிருந்துதான் இன்றளவும் மாணவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று பள்ளியின் முதல் நாள் என்பதால் ஆச்சரியமாக ஆர்.டி.எம் தொலைக்காட்சி நிறுவனம் எங்களின் மாணவர்களையும் பள்ளியின் தொடக்க நாள் நடவடிக்கைகளையும் பதிவு செய்து செய்தியில் காட்ட வந்திருந்தனர். ஒருசில மாணவர்கள் 11மணிவரை அழுது கொண்டேதான் இருந்தார்கள். வீட்டின் பிடிமானத்திலுருந்து புற உலகத்தின் வாசலில் வந்து நிற்கும் குழந்தைத்தனத்தின் முதல் பதற்றம். சிறுக சிறுக புற சக்திகள் அவற்றை விழுங்கி, எதார்த்தங்களை உற்பத்திக்கும். இதுதான் ஒன்றாம் ஆண்டின் மாணவர்களின் அகமாற்றங்கள்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா, சுங்கைப்பட்டாணி

3 comments:

Tamilvanan said...

11 மாண‌வர்க‌ள் என்றாலும் ஒவ்வொருவ‌ரையும் சிற‌ந்த‌ ஒரு ந‌ற்குடிம‌க‌னாய் உருவாக்க‌ பாடு ப‌ட்டிடும் ப‌ள்ளி ஆசிரிய‌ர்க‌ள் நிர்வாக‌த்தின‌ர் அனைவருக்கும் வாழ்த்துக்க‌ள்.

கே.பாலமுருகன் said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே.

Se.Gunalan said...

anaithum nanru vaazthukkal Mr.balamurugan

Se.Gunalan