Tuesday, June 17, 2008

வீடு திரும்புகிறார்கள்


சாயும்காலம் தொடங்கி

எல்லோரும்

வீடு திரும்புகிறார்கள்


வீடுகள் மதியத்திலிருந்து

வெயிலில் காய்ந்து

சோர்ந்து போயிருந்தன!


அவர்கள் வாசலை நெருங்கியதும்

வீடுகள் நிமிர்ந்து

உற்சாகம் கொள்கின்றன!


வீடு திரும்புவர்களுக்கென

ஒரு வரவேற்பு

எப்பொழுதும்

அவர்களுடைய வீடுகள்

சேகரித்து வைத்திருக்கின்றன!


வாய் பிளந்து

அவர்களை விழுங்கிக்

கொள்கின்றன!


-கே.பாலமுருகன் மலேசியா

No comments: