Tuesday, June 17, 2008

இறந்தவர்களின் கைகள்


அந்த மங்கிய

நீர் முகப்பில்

அவர்களின் கைகள்

நெருங்கி வருகின்றன!


நீர் அலைகளில்

அவர்களின் கைகள்

விட்டுவிட்டு தவறுகின்றன!


எப்பொழுதோ ஏதோ ஒரு பொழுதில்

அவர்களின் கைகள்

உயிர் வாழ வேண்டி

நீர் முகப்பின் மேற்பரப்பில்

அசைந்து அசைந்து

எத்தனை பேர்களை

அழைத்திருக்கும்!


இன்று

அது இறந்தவர்களின்

கைகள்!

“எத்தன பேரு இங்க

உழுந்து செத்துருக்கானுங்க. . .

இந்தத் தண்ணீ அப்படியே ஆளே

உள்ளெ இழுத்துரும்”


நீர் முகப்பின்

அருகில் அமர்ந்துகொண்டு

ஆழத்தை வெறிக்கிறேன்!


மங்கிய நிலையில்

ஓர் இருளை சுமந்திருக்கிறது!


இருளுக்குள்ளிலிருந்து

எப்பொழுது வரும்

இறந்தவர்களின் கைகள்?


கே.பாலமுருகன் மலேசியா

No comments: