Friday, November 19, 2010

கவிதை: துறவு

1
எனக்கு முன்
மௌனத்திருந்த காலம்
முதன் முதலாய்
நீண்டகால இருப்பை
தொலைத்துக் கொண்டிருந்தது.

2
சன்னலுக்கு வெளியே
நான் காத்திருந்த ஒரு காலம்
எங்கேயோ சென்றுவிட்டிருந்தது.

3
தனது பருவத்தை
முடித்துக்கொண்ட
காலம்
வெறுமையுற்று
திரும்புதலுக்காக அலைந்து திரிந்தது.

கே.பாலமுருகன்
மலேசியா

1 comment:

VELU.G said...

நல்ல கவிதை