Sunday, November 21, 2010

சிங்கப்பூர் பயணம்

இன்று மதியம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன். நண்பர் பாண்டித்துரை அவர் தங்கியிருக்கும் இல்லத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். மூன்று நாள் இங்குள்ள இலக்கிய நண்பர்களைச் சந்தித்து உரையாடுவதாகத் திட்டம்.

ஒரு சில நண்பர்களைத் தொடர்புக் கொள்ள இயலவில்லை. மின்னஞ்சல் மூலம் என்னைத் தொடர்புக் கொள்ளலாம். bala_barathi@hotmail.com

23 ஆம் திகதி கடாரத்திலிருந்து ஆசிரியர் குழு ஒன்று சிங்கப்பூருக்கு வருகிறார்கள். தலைமை ஆசிரியர் தேவராஜன் அவர்களின் தலைமையில் கல்வி இலாகாவின் மொழித்துறை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் அவர்களும் இந்தக் குழுவில் இணைந்து இங்கு வருகிறார். அவர்கள் அனைவரையும் 23ஆம் திகதி உமர் புழவர் தமிழ் மொழி நிலையத்தில் மாலை 6.30க்கு சந்திக்கின்றேன். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடாரத்திலிருந்து வரும் தமிழாசிரியர்கள் குழு சிஙக்ப்பூர் எழுத்தாளர்களைச் சந்திக்கும் நிகழ்வு அங்கு நடைப்பெறுகிறது.

மேலும் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர்கள் சிலரைச் சந்தித்து கேள்வி பதில் அங்கத்தையும் உரையாடலையும் நிகழ்த்தவும் திட்டமுண்டு.

கே.பாலமுருகன்
மலேசியா.

1 comment:

தயாஜி said...

உங்கள் பயணம் சிறப்படைய வாழ்த்துகள்.
காத்திருக்கின்றோம் உங்கள் அனுபவப் பதிவுக்கு......