Thursday, June 6, 2013

After earth: திரைவிமர்சனம்

After Earth : ஒரு அறிவியல் புனைக்கதையாக இருந்தாலும்கூட வாழ்க்கை குறித்த பற்பல விசயங்களை உரையாடியுள்ளது. மேற்குலகு சிந்தனையுடைய ஒரு பிரமாண்டமான அறிவியல்/ scinece fiction இயக்குனரால் அப்படிப் படைத்துவிட முடியும் என்பது குறைவான சாத்தியம்தான். ஆனால், இப்படத்தை இயக்கிய night syamalan கீழை சிந்தனையுடைய பின்புலத்திருந்து சென்றவர். 'ஆபத்து என்பதுதான் உண்மை ஆனால் அதன் முன்னால் நாம் அடையும் பயம் என்பது நம்முடைய தேர்வாகும்' என்பது தொடங்கி, எதிர்காலத்தைக் குறித்து ஒருவேளை இல்லாமலே போகக்கூடிய கற்பனைகளை உருவாக்கி அதைக் கண்டு பயப்படுவதுதான் மனித இயல்பு என வில் ஸ்மித் குறிப்பிடுவது வரை, தன் இளைய மகனை அவர் உற்சாகப்படுத்த உபயோகிக்கும் அனைத்துமே தத்துவம்.

'பூமிக்கு அடுத்தது' எனும் தலைப்பில் இரண்டு விசயங்கள் அடங்கியுள்ளன. அது கதையினூடாகவும் வந்துவிடுகின்றன. ஒன்று, பூமியில் பண்டைய காலத்தில் நிகழ்ந்த உயிர் பரிணாமம் மீண்டும் மனித உயிர்கள் முற்றிலுமாக அழிந்துவிடுகையில் தலைக்கீழாக நடக்கிறது. எஞ்சியிருக்கும் உயிர்வாழிகள் மீண்டும் டைனசோர் காலத்திற்குட்பட்ட உயிர் பரிணாமத்தை அடைகின்றன. அப்படியொரு சமயத்தில்தான் வேற்றுக்கிரகத்திலுள்ள மனிதர்கள் பூமிக்கு வருவதாகக் காட்டப்படுகிறது. எப்பொழுதும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதைக் காட்டுவார்கள். ஆனால் இப்படத்தில் பூமியே ஒரு வேற்றுக்கிரகமாக இருக்கின்றது. பிரபஞ்சத்தில் இதைப் போல எண்ணற்ற சூரிய குடும்பங்கள் இருக்கலாம் என்றும் ஆங்கே பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடும் என்றும் நம்பிக்கைகள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே இன்னொரு உலகத்திலிருந்து மனிதர்கள் பிரபஞ்ச எல்லையை உடைத்துக்கொண்டு பூமிக்கு வருகிறார்கள்.



அடுத்ததாக, பூமியைத் தாண்டி அதன் அழிவிற்குப் பிறகு நாம் வாழ்வதற்கு எந்த இடம் இருக்கிறது என்கிற மிகப்பெரிய கேள்வியாகவும் இப்படத்தைக் காண முடிகிறது. after earth what we have? இந்தப் பூமியைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிவிற்கு ஆளாக்கிய பிறகு நாம் தற்காலிகமாகச் சென்று வாழ சாத்தியுடைய இன்னொரு உலகம் இருக்கிறதா? இப்படத்தில் வில் ஸ்மித்தின் மகனை பூமியிலுள்ள ஒரு சிறிய அட்டை கடித்து இரத்தைத்தை உறிஞ்சுகிறது. அதனால், அவன்ம் இரத்தத்தில் பூமியில் வாழும் ஒரு சிறிய அட்டையின் இரத்தை கலக்கிறது. உடனே இதயமும் உடலும் மறுத்துப் போகின்றன. முகம் வெளிரிப் போய் கண்கள் வீங்குகின்றன. அங்குள்ள காற்று அவனுடைய இதயத்தையும் சுவாசத்தையும் பலவீனமாக்குகின்றது. இங்குள்ள புவி ஈர்ப்பு சக்தி அவன் எடையை மேலும் பாரமாக்குகின்றது. இப்படி இன்னொரு உலகத்திலிருந்து பூமிக்கு வந்த அவனால் எவ்வித உதவியும் இல்லாமல் தொடர்ந்து சில மணி நேரங்கள் நீடித்திருப்பதே சாத்தியம் இல்லாததைப் படம் காட்டுகிறது. அப்படியென்றால் நாம் பிறந்த சுவாசித்த இந்தப் பூமியை விட்டால் வாழ்வதற்கு வேறு இடமே இல்லை. இதுவே மகத்தான நிதர்சனம். அதைத்தான் படமும் அழுத்தமாக உணர்த்துகின்றது.

வில் ஸ்மித்தின் மகனே இப்படத்தில் அவருக்கு மகனாக நடித்துள்ளார். வில் ஸ்மித்தின் நடிப்பையே சவாலாக்கும் நடிப்பாக அவருடைய மகனின் பங்களிப்பு அபாரமாக இருந்தது. இராணுவத்தில் சேர்வதற்கான வயது அவனுக்கில்லை என ஆரம்பத்தில் மேல் அதிகாரி அவனைத் தடை செய்கிறார். இதுவொன்றே இங்குக் கடைப்பிடிக்கப்பட்ட இராணுவ செயல்பாடுகளுக்கு எதிராகக் கருதலாம். போர்க்காலத்தில் இங்கு எத்தனையோ சிறார்கள் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி எடுக்கக் கட்டாயப்படுத்தப்பாட்டார்கள். அவர்களின் சிறார் உலகம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. மேலும் இப்படம் புனைக்கதை என்பதால் சில குறைப்பாடுகளையும் கொண்டுள்ளது. ஒருமுறை பார்த்து வியக்கலாம்.

- கே.பாலமுருகன்

No comments: