Wednesday, February 1, 2012

போராளி : மனநோய் சித்திரம்

“இந்தச் சமூகத்தில் ஆளுமைகளுக்கு இரண்டு வகையான தண்டனைகள் மட்டுமே தரப்படுகின்றன. ஒன்று அரசியலுக்கு அவர்களை அடிமையாக்கி அவர்களின் அறிவை அடகு வைப்பது அல்லது அதிகம் படித்தப் பைத்தியம் என மனநோயாளியாகச் சித்தரிப்பது”

மனநோய் என்பது எப்படிப்பட்டது? அதன் உக்கிரம் என்ன? அதை இந்தச் சமூகம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எப்படிக் கையாண்டு வருகிறது? மனநோய் பற்றிய விசயங்களைச் சினிமாவும் மற்ற கலை வடிவங்களும் எப்படிப் பதிவு செய்திருக்கின்றன? என்ற கேள்விகளுடன் இப்படத்தை அணுக வேண்டியுள்ளது. இதன் மூலமே போராளி படத்தின் முக்கியத்துவம் பலவீனம் என உரையாடலை நீடிக்க வாய்ப்பாக இருக்கும்.

சமீபக் காலமாக சமுத்திரக்கனி - சசிக்குமார் கூட்டணி தமிழ் சினிமா சூழலில் உருவாகி நிலைக்கொள்கின்றன. சசிகுமார் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பதும், சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பதும் என அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது. இருவருமே அந்தந்தப் படங்களில் கச்சிதமாகப் பொருந்துவதால் அதை ஒரு முரணாகவும் பார்க்க முடியவில்லை. தமிழ் சினிமா சூழலில்

Friday, January 13, 2012

தீர்ந்து போகாத வெண்கட்டிகள் நூலின் முன்னுரை



நான் ஒரு கதை உருவாக்கி

எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பு மிகவும் நெருக்கமானது. என்னுடைய 5 ஆவது வயதில் என் ஞாபக சக்தியைச் சோதிப்பதற்கு அதிகமாகக் கேட்கப்பட்டது சினிமா தொடர்பான கேள்விகள்தான். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு அப்பா முன் நின்றாக வேண்டும். எந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள், படக்காட்சியைச் சொல்லிவிட்டு படத்தின் பெயரைக் குறிப்பிடுவது என நான்

Monday, January 2, 2012

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு ...1 ( யோ.கர்ணன் சிறுகதை: ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்)

பல வருடங்கள் நீடித்த ஈழப் போர் சூழலிலிருந்துதான் இன்றைய புலம் பெயர் வாழ்வதென்பது தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. 50களில் தலைகாட்டிய ஈழத்தமிழர் பிரச்சனை 80களில் உலகக் கவனத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆங்காங்கே உதவிகளும் ஆதரவுகளும் கிடைக்கப்பெற்றும் அரசியல் சூழ்ச்சியினால் ஆயுத உதவியினால் 2009இல் இறுதி நிலையை எட்டியது. போர் முடிந்துவிட்டதா அல்லது தமிழீழம் எனும் கனவு தகர்ந்துவிட்டதா எனும் கேள்வியே பேரோசையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையுடன் கைக்கோர்த்து பல விசயங்களைச் சாதித்துக்கொள்வதற்காகச் சீனாவைப் போல பல

Sunday, January 1, 2012

இந்தியப் பயணம்-5 –ஆதவன் தீட்சண்யாவுடன் மோட்டார் பயணம்


திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் என்னைப் பேருந்து ஏற்றிவிடுவதற்காக செல்மா வெகுநேரம் காத்திருந்தார். அவர் வீட்டுக்குச் சென்று மிகவும் அவரசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு வரவேண்டிய சூழல். செல்மா குழந்தைகளிடம் அதிகம் பேசவும் முடியவில்லை. அதுவே மிகுந்த வருத்தமாக இருந்தது. ஒரு சகப் பயணியைப் போலவே என்னுடன் செல்மா இந்தியா பயணம் முழுக்கவும் அவ்வப்போது உடன் இருந்தார். சரியாக 10.45க்கு வரவேண்டிய பேருந்து மேலும் தாமதமாக்கியது. எங்களுடன் செல்மா காருக்கு டிரைவராக வந்த தோழர் ஒருவர் அங்கு இருந்ததால் செல்மாவை வீட்டுக்கு அனுப்பிவைத்தேன். தோழர் முன்பு கம்னியுஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறியவர். அவரிடம் வெறும் மௌனம் மட்டுமே இருந்தது. திண்டுக்கல் பற்றி மட்டும் கொஞ்சம் விசாரித்துக்கொண்டேன்.
 
இங்கிருந்து ஓசூருக்குச் செல்வதாகத் திட்டம். அண்ணன் ஆதவன் தீட்சண்யாவைச் சந்தித்தாக வேண்டும் எனப் பிடிவாதமாகவே இருந்தேன். 5ஆம் திகதி அவர் மதுரைக்கு வருவதாக இருந்தது. அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு உரையாற்ற ஆதவன் மதுரைக்கு வரும் அந்த 5ஆம் திகதி என் பயணத்திட்டத்தின்படி நான் பாண்டிச்சேரியில் இருக்க வேண்டும். ஆகையால் முன்னதாகவே பயணத்தை ஓசூருக்கு மேற்கொள்ள முடிவு செய்திருந்தேன். ஆதவனைப் பார்க்க எத்துனைத் தூரம் வேண்டுமென்றாலும் பயணிக்க அப்போதைய மனம் தயாராக இருந்தது.

Friday, December 30, 2011

இந்தியப் பயணம்-4 அம்மாயும் கல்லநேந்தல் கிராமமும்


தஞ்சாவூர் பேருந்து நிலையத்திற்கு நானும் விஷ்ணுபுரம் சரவணனும் வந்து சேர்ந்தோம். பேராசிரியர் வெற்றிச்செல்வனிடமிருந்து விடைப்பெற்று புதுக்கோட்டைக்குப் பயணப்பட்டேன். தங்சாவூரிலிருந்து மேலும் ஒரு 3 மணி நேரம் பயணம். தஞ்சை பெரிய கோவிலைத் தரிசித்த பிரமிப்புகள் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றின. புதுகோட்டை பேருந்து நிலையம் பரப்பரப்பாகவே காணப்பட்டது. பேருந்திலிருந்து இறங்கியதும் நீண்ட சாக்கடை. வரிசையாக ஐவர் நின்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர். சாக்கடை கருமையாகி ஓடிக்கொண்டிருந்தது.

Thursday, December 29, 2011

கவிதை: ஆண்களின் கழிப்பறை

மன்னிக்கவும்
உள்ளே நுழைவதற்கு 30 சென் செலுத்தியாக வேண்டும்
வசூலிக்க ஆள் இல்லாவிட்டாலும் சிதிலமடைந்துவிட்ட மேசையின் மீதுள்ள
பழைய தகற குவளையில் நீங்கள் போடும் சில்லறைகள்
பேரோசையாகக் கேட்க வேண்டும்.

Sunday, December 25, 2011

கலை இலக்கிய விழாவும் – நான்கு மலேசியப் படைப்பாளிகளின் நூல் வெளியீடும்


நண்பர்களின் கவனத்திற்கு,

வருகின்ற பிப்ரவரி மாதம் வல்லினம் பதிப்பகம்-இதழ் , கலை இலக்கிய விழாவை நடத்தவுள்ளது. தமிழக எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான ஆதவன் தீட்சன்யா மற்றும் அ.மார்க்ஸ் அவர்களும் இவ்விழாவில் சிறப்புரை வழங்கவுள்ளனர். மேலும் மலேசிய இளம் எழுத்தாளர்களின் 4 நூல்களும் விழாவில் வெளியீடப்படும்.

1. கே.பாலமுருகன்-‘தீர்ந்து போகாத வெண்கட்டிகள்’- குழந்தைகள் சினிமாவைப் பற்றிய பதிவுகள்
2. ம.நவீன் – ‘கடக்க முடியாத காலம்’ சமீபத்தில் நவீன் எழுதிய கட்டுரைகள்/பத்திகள் தொகுப்பு
3. சிவா பெரியண்ணன் -‘என்னை நாயென்று கூப்பிடுங்கள்’- கவிதைகள்
4. யோகி – ‘துடைக்கப்படாத இரத்தக் கறைகள்’- பெண்களின் வாழ்வியலைப் பதிவு செய்யும் கட்டுரைகள்

Thursday, December 22, 2011

இந்தியப் பயணம்(3) – பாரதியார் தேசம்


(barathiyar house)
(நான் பயணத்தைத் வரிசைக்கிரகமாக-தொடராக எழுதவில்லை, ஆகையால் இது நான் இந்தியா சென்ற ஐந்தாவது நாள்) கழுகு மலைக்குச் சென்று வந்த மறுநாள், எட்டயப்புரம் போவதாகத் திட்டம். பாரதியார் பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என ஏற்கனவே செல்மாவிடம் சொல்லியிருந்தேன். அதைப் பற்றி மறந்திருப்பினும் கோணங்கி அண்ணன் இத்தனை தூரம் வந்தாயிற்று, எட்டயப்புரம் அருகாமையில்தான் இருப்பதாகக் கூறி காலையிலேயே அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்தார். காலையில் எழுந்ததும் கோணங்கி அண்ணன் வீட்டில் மேல்மாடியிலிருந்து கோவில்பட்டி இரயில் தண்டவாளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் வீட்டு மொட்டைமாடி விசித்திரமாக இருந்தது. தாராளமான இடம். அவர் குடியிருப்பிலேயே நான்குக்கு மேற்பட்ட வீடுகள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தன. கோணங்கி இருந்த வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி அவருடைய அப்பா தனி அறையில் வசித்துக்கொண்டிருந்தார். முதல் நாள் இரவே அவரையும் சென்று சந்தித்திருந்தோம். அவரும் ஒரு வரலாற்று நாவலாசிரியர்.

Tuesday, December 20, 2011

சிறுகதை: குளியல்

 1
துண்டை இழுத்துக் கட்டும்போது அது தொடைவரை இறங்கி கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. என்னுடைய குளியல் நேரம் சரியாக 6 மணிக்குத் தொடங்கும். முன்கதவை அடைத்துவிட்டு அறைக்கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு முதலில் ஆடையைக் களைவேன். சிறிது நேரம் நிர்வாணமாக இருப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு குளியலுக்கு முன்பும் குளியலின் போதும் உருவாகும் இந்தக் கணம் மட்டுமே. 5 நிமிடம் வந்து போகும் என்னுடைய நிர்வாணம் ஒட்டு மொத்த உலகையே கேலி செய்வது போல இருக்கும்.

நான்சுவர் இல்லாமல், கதவு இல்லாமல், மறைப்பேதும் இல்லாமல், ஒரு சவர்க்காரம், தண்ணீரை அள்ள ஒரு கை வாலி, இது மட்டும், பிறகு ஒரு

Saturday, December 17, 2011

தீர்ந்துபோகாத வெண்கட்டிகள் - சினிமா புத்தகம்

இவ்வருடம் வல்லினம் பதிப்பில் வரும் மூன்றாவது புத்தகம், கே.பாலமுருகனின் 'தீர்ந்து போகாத வெண்கட்டிகள்'. மலேசியாவில் முதன் முதலாக உலக திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. வல்லினம் இணைய இதழில் இந்த வருடம் கே.பாலமுருகன் எழுதி 10 தொடர்களாக வந்த கட்டுரைகளைத்தான் இதில் தொகுத்துள்ளோம்.                   - வல்லினம்
சினிமா என்பது கலை என மீண்டும் மீண்டும் நிருபிக்க வேண்டியிருக்கிறது. அசலான படைப்புக்கும் உலக சினிமாக்களைக் காப்பியடித்து மறுபிரதியெடுக்கும் கற்பழித்தல் முயற்சிக்கும் மத்தியில் எது உண்மையான படைப்பு எது சினிமா என அரைகுறை அறிவுக்கூட இல்லாதவர்களிடம் தொடர்ந்து சினிமா சார்ந்து உரையாட வேண்டியிருக்கிறது. சினிமா என்ற கலையைக் காலம்தோறும் மழுங்கடிக்கும் ஒரே விசயம் 'வெகுசன இரசனைத்தான்'. இன்னும் நூற்றாண்டு பல கடந்தாலும் சினிமா என்பதை அக்குளில் கிச்சுகிச்சு மூட்டி மகிழ்ச்சிப்படுத்தும் ஒன்றாக மட்டுமே புரிந்துகொள்ளப்படும் அவலம் இங்கிருக்கிறது. (மாற்று இரசனைக்குத் தயாராக வேண்டும்) 
- கே.பாலமுருகன்