இன்று தமிழின் மிக முக்கியமான படைப்பாளியாக அடையாளங்காணப்பட்டு வருபவர்
ஷோபா சக்தி. புனைவு எல்லைக்குள் தங்களின் தீவிரமான மறுவாசிப்பைச் செய்யும்
யாவரும் ஷோபா சக்தியை மிகச் சிறந்த கதைச்சொல்லியாக உணர்கிறார்கள். இவர்
எழுதிய ‘கொரில்லா ‘ மற்றும் ‘ம்’ நாவல் இரண்டுமே தமிழ் இலக்கியச் சூழலில்
பெரிதும் கவனப்படுத்தப்பட்ட படைப்புகளாகும்.
எம்.ஜி.ஆர் கொலை வழக்கும் எம்.ஜி.ஆர்களும்
ஷோபா சக்தியின் நான்காவது சிறுகதை தொகுப்பு இது. தலைப்பைப் படித்ததும்
வாசிக்க ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அமைந்திருந்தது. எம்.ஜி.ஆர் கொலை
வழக்கு என்பது இத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதை. இந்தப் பகுதியே கொரில்லா
நாவலின் துவக்கம். அந்த நாவலைப் படிக்கும்போதே இந்தப் பகுதி ஒரு
சிறுகதைக்குரிய தன்மையில் இருந்ததை உணர்ந்திருந்தேன். இப்பொழுது இதைச்
சிறுகதையாக இங்கு வாசிக்கும்போது என் ஊகம் சரியாகியிருப்பதை மீட்டுணர
முடிகிறது.
சமீபத்திய மலேசிய இலக்கியச் சூழலில் நம்பிக்கை
தரும் படைப்பாளிகளாகவும் வாசகர்களாகவும் ஒரு சிலர் அடையாளம்காணப்பட்டே வருகிறார்கள்.
மரபார்ந்த சிந்தனை அமைப்புமுறையிலிருந்து மாறுப்பட்டு சிந்திக்க இளைஞர்களின் வருகை
மிக அவசியமானது. இலக்கியம் சார்ந்து தன் இயங்குத்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்வதோடு
அதனை எந்த அதிகார சக்தியிடமும் ஒப்படைக்காமல் தனித்துவமாக செயல்படுவதும் முக்கியமானவையாகும்.
அதனைப் பற்றியே தொடர்ந்து முன்வைக்கவும்படுகிறது.
கவிஞர் பொன்வாசுதேவன் மூலம் எனக்கு அறிமுகமானவர்
நித்தியா வீரரகு. முகநூலில் என்னுடன் கவிதைகள் தொடர்பாக உரையாடத் துவங்கினார். அதன்
பின் சிவா, நவீன் என அவருடைய அறிமுகம் விசாலமடைந்ததும் வல்லினத்தைக் கண்டடைந்தார்.
வல்லினத்தின் மூலம் தன் இலக்கிய வாசிப்பை மேலும் கூர்மைப்படுத்திக்கொண்டவர், வல்லினத்தில்
இயக்கவூட்ட சினிமா தொடர்பான தொடரையும் எழுதிக் கொண்டிருக்கிறார். அண்மையில் வல்லினம்
நடத்திய சந்திப்பில் டாக்டர் சண்முகசிவா நித்தியாவின் மொழிவளத்தைப் பாராட்டியிருந்தார்.
நித்தியா மிக முக்கியமான கவிஞராக மீட்டெடுக்கப்படுவார் என்றே கருதுகிறேன்.
தமிழ் சூழலுக்குள் மலிவான
வியாபாரத்திற்குள்ளான பல விசயங்களில் சினிமாவும் முக்கியமான ஒன்றாகும்.
மேலும் சினிமா சார்ந்து ஒரு பெரும் முதலீட்டு களமாகச் தமிழ்நாடு
ஆகிவிட்டதன் மூலம் அங்கு உருவான வெகுஜன இரசனை என்பது ஒரு
காலக்கட்டத்திற்குப் பிறகு வளரவே இல்லை என்றுத்தான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக தமிழ்நாட்டில் உருவான தயாரிப்பாளர்கள் ஒரு சங்கமாகவும் அல்லது
ஒரு குடும்பப் பெரும் நிறுவனமாகவும் வளர்ந்து வெகுஜன இரசனையை
விலைக்கொடுத்து வாங்கிக் கோலோட்சி நடத்தி வருகின்றனர். அவர்களால் தொடர்ந்து
தருவிக்கப்படும் படம் என்பது பொதுமக்களின் இரசனையை மலிவான தளத்திலேயே
வைத்து வியாபாரம் நடத்தி இலாபம் சம்பாரிக்க உதவ வேண்டும் என்பதே. அத்துடன்
சினிமாவுக்கான தேடலும் பங்களிப்பும் முடிந்துவிடுகின்றன. கார்ல் மார்க்ஸ்
குறிப்பிடுவது போல வாழ்க்கை ஒரு பண்ட மாற்று தொழில்நுட்பமாக ஆகிவிட்ட பிறகு
சினிமா உட்பட அனைத்துக் கலைகளுமே இலாபத்துக்காக மட்டுமே விற்கப்படத்
தொடங்கிவிட்டன.
இதையெல்லாம் மீறி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நல்ல சினிமாக்கள்
தமிழ்நாட்டிலிருந்து வந்து கொண்டுத்தான் இருக்கின்றன. அவை சிலசமயங்களில்
கவனிக்கப்படாமலும் வணிக ரீதியில் தோல்வியுற்றும் போய்விடுவதால், அதனைப்
பற்றி மீண்டும் உரையாட வேண்டியிருக்கிறது. நல்ல சினிமா முயற்சிக்கு நாம்
தரும் அடையாளம் அது. இங்கு நான் குறிப்பிடும் சினிமாகள் தர வரிசை
அடிப்படையில் அல்ல.
1. யுத்தம் செய் – மிஷ்கின்
கடந்த வருடம் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த மிக முக்கியமான மர்மப்படம்.
கலை அமைதியுடன் மர்மத்தை ஒரு கருப்பொருளாக வளர்த்துக் காட்டக்கூடிய
சாத்தியங்களை இரசிக்கும் வகையில் தந்த படம். சேரன் தன் வித்தியாசமான
நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பாக இருந்தது. வழக்கமாக மிக நல்லவராக மட்டும்
வந்துவிட்டுப் போகும் சேரனின் மாறுப்பட்ட நடிப்பாற்றலை இப்படத்தில் பார்க்க
முடிந்தது.
இப்படத்தின் ஒளிப்பதிவு தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தது. காமிரா
கதைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மர்மத்தைப் பெரிதுப்படுத்தி அதனை நோக்கி
நம்மை ஈர்க்கக்கூடிய வகையில்
இருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க
மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட
வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம், அவருக்கு பூமியே ஒரு
இருளுருண்டையாகத்தான் தெரிகிறது. எனவே அவரது கதையுலகமும் இருளுக்குள்தான்
இயங்குகிறது. இருட்டு இருட்டு என்று இருட்டைப் பற்றியே இத்தனைக் கதைகள்
எழுத முடியுமா என்கிற மலைப்பு ஒருபுறமிருக்க அதைப் பற்றி இன்னும்
சொல்லிமுடிக்கவில்லை என்கிற ஒரு துயரத்தோடுதான் அவரது ஒவ்வொரு கதையும்
முடிந்திருக்கிறது என்பதைத்தான் கவனப்படுத்தி சொல்லவேண்டியிருக்கிறது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் தமிழ் நாவல் எழுதும் போட்டி-3 கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாக பிரபல நடிகர் சேரன் அவர்கள் வந்திருந்தார். வழக்கமாக இது போன்ற இலக்கியம் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளுக்குத் தொடர்பே இல்லாத பிரமுகர்கள் வந்து தலைமை தாங்குவது சர்வதேச நோயாக நிறுவப்பட்டிருக்கின்றது. சிங்கப்பூரில் நடந்த உலக எழுத்தாளர் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சிக்கு வைரமுத்துவையும் நடிகர் சிவகுமாரையும் வரவழைத்து தங்களின் நிகழ்ச்சிக்கு ஒரு புகழ்ச்சியைத் தேடிக்கொண்ட அதே போன்ற முயற்சிகள்தான் மலேசியாவிலும் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் போன்ற அரசாங்க சார்பற்ற பொது அமைப்புகள் நியாயமாக நடந்துகொள்ளவில்லையென்றாலும் பரவாயில்லை ஆனால், சமூகப் பிரதிநிதியாகச் செயல்படும் ஒரு பொது அமைப்பு
இதுவரை மலேசிய சினிமா அப்படி என்ன சாதித்திருக்கிறது எனக் கேட்டால் ஒட்டுமொத்த வரலாற்றையும் நீண்டு கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு விதமான பாதிப்புக்களுக்குள்ளாகிய மலேசிய சினிமா அதன் தனித்துவத்தை அடைந்திருக்கிறதா என்பதே மிக முக்கியமான கேள்வி. ஒரு நிலப்பரப்பின் சினிமாவுக்கான தனித்துவம் என்றால் எப்படியிருக்க வேண்டும் எனக்கேட்டால், அந்த மண்ணின் வாழ்க்கையை, அங்குள்ள ஆதி உணர்வை, கலாச்சார வெளியைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே முதன்மை பதிலாக இருக்கும்.
இதற்கு முதலில் ஓர் இயக்குநர் அந்த மண்ணைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த மண்ணின் ஒட்டுமொத்த அரசியலின் வரலாற்றையும் கலாச்சாரத்தின் வேர்களையும் அறிந்தவராக அல்லது தேடல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கலைஞனால் மட்டுமே அந்த மண்ணையும் மண் சார்ந்த வாழ்வையும் அடையாளம்காட்ட முடியும்.
ஆர்.டி.எம் தொலைக்காட்சியிலிருந்து ஒரு குழு என்னை நேர்காணல் செய்தது. மாதந்தோறும் ஒளிப்பரப்பாகும் “நூல் வேட்டை” நிகழ்ச்சிகாகவே அவர்கள் நாவலாசிரியரான என்னைச் சந்தித்தார்கள். ஒரு சில கேள்விகளை மட்டும் முன்வைத்து எங்களின் உரையாடல் நீண்டது. விரைவில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும்.
உங்கள் நாவலின் உட்பொருள் என்ன?
பாலமுருகன்: இந்த நாவல் மலேசியத் தமிழர்களின் தோட்ட அவலங்களைப் பதிவு செய்யும் வகையில் எழுதப்பட்டிருந்தாலும், மையப் பிரச்சனையான வறுமையும் கடன் தொல்லையும் மட்டுமே நாவலின் ஆதாரம். பலமுறை கையாளப்பட்ட கதைக்கருவாக இருந்தாலும் நாவல் அதனை நோக்கி பெரும்வாழ்வாக விரிகிறது. ஒரு குடும்பம் கடனாலும் அதிகார வர்க்கத்தின் சுரண்டலாலும் எப்படிச் சிதைந்து போகின்றன என்பதையே நாவல் மையப்பொருளாகப் பெசுகின்றன.
துரை மாமா வேலை முடிந்து வீடுவரை வந்திருந்தார். கதவைத் திறந்ததும் எல்லோரும் திக் பிரமை பிடித்ததைப் போல அமர்ந்திருந்ததைப் பார்த்தார். தோளில் மாட்டியிருந்த பையை மேசையின் மீது வைத்துவிட்டு குவளையைக் கையில் எடுத்த கனம், தடார் தடார் என அதிர்வு.
“கேக்குதா? லோரி..”
மயக்கமே வருவது போல ஆகிவிட்டது. மாமா குவளையில் நீரை நிரப்பி ஒரு மிடறில் தொண்டையை நனைத்தார். அடுத்ததாக இன்னொரு லோரி எப்பொழுது வேண்டுமென்றாலும் கடந்து போகலாம். வீடு ஓர் அதிர்வுக்காகத் தவம் கிடந்தது. அது மிகக் கொடூரமான அதிர்வு. கூரையும் சுவரும் இடிந்து சரிந்துவிடுவது போன்ற ஒரு கனநேர பயம். நெடுஞ்சாலை சிறுக சிறுக விரிந்து பாதி நிலத்தை விழுங்கிவிட்டாயிற்று. மூசாங் கம்பம் தொடங்கும் இடத்தில் உடும்புக்கார தாத்தா வீடு கட்டும்போது இதைப் பற்றியெல்லாம் யோசித்திருக்க மாட்டார். காடு பிளக்கப்பட்டு இங்கொரு நெடுஞ்சாலை வந்து வீடுகளுக்கு மேல்வரை நீளும் என முந்தைய சந்ததிகளுக்குத் தெரிந்திருக்காது.
25 மார்ச் கோலாலம்பூரிலுள்ள தேசிய நூலகத்தில் என் நாவல்’ நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ வெளியீடு கண்டது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் 2007ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற இரு நாவல்களையும் புத்தகமாகப் பிரசுரித்து அதனைச் சமீபத்தில் தேசிய நூலகத்தின் ஆதரவுடன் கோலாலம்பூரில் வெளியீடு செய்தது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். ஒரு புதிய துவக்கமாக நிகழ்ச்சி அரசின் ஆதரவுடன் நடந்தேறியது நல்ல முயற்சியாகும். நாவல் வெளியீட்டது மிகத் தாதமாக இருந்தாலும் நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் திட்டமிட்டு முன்னெடுத்திருக்கிறார்கள்.
நாவல் வெளியீட்டு விழாவில் எனக்கு மாலையும் பொன்னாடையும் வேண்டாம் என மறுத்திருந்தேன். ஒரு படைப்பாளியின் உணர்வுக்கும் தேவைக்கும் மதிப்பளித்து அவர்கள் என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியளிக்கும் செயலாகும். மேடை கலாச்சாரம்/மேடை அலங்காரங்கள் குறித்து எனக்கிருக்கும் எதிர்வினை சார்ந்தே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். ஒரு படைப்பாளிக்கு எது தேவை எது தேவை இல்லை எனத் தீர்மானிக்கும் உரிமையும் சுதந்திரமும் அவனுக்கு இருக்கின்றன. ஆக படைப்பாளியாவது இந்தச் சமூகத்தில் உரிமையுடனும் சுதந்திரடனும் செயல்பட இந்தச் சமூகம் அனுமதிக்க வேண்டும்.
இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக மாணவர்களை இந்த நாவல் வெளியீட்டு நிகழ்ச்சியுடன் இணைத்திருக்கிறார்கள். அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களான சுரேன், சத்திஸ்வரி, லோகேஸ்வரி மற்றும் சாந்தி அன்று வெளியீடு கண்ட நாவல்களைத் திறனாய்வு செய்து படைத்திருந்தார்கள். இலக்கியத்தை நோக்கி மாணவர்களை ஒரு பொது மேடையில் இணைப்பது என்பது பாராட்டத்தக்க செயல். அவர்கள் விமர்சனம் திறனாய்வு என்பதெல்லாவற்றையும் கல்விக்கூடங்களிலேயே